செய்திகள்

சித்திரகுளம் பகுதியில் ஜனவரி 2ல், நடனம், இசை, கதாகாலக்ஷேபம் மற்றும் கோலாட்டம்: மார்கழி நிகழ்ச்சி

மயிலாப்பூரைச் சேர்ந்த பரதநாட்டிய ஆசிரியர் பத்மா ராகவன், சித்ரகுளத்தைச் சுற்றிலும் இந்த மார்கழியில், இசை மற்றும் நடனச் சுவையை ஆக்கப் பூர்வமாக வழங்க விரும்புகிறார்.

ஜனவரி 2ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை, பத்மாவின் மாணவர்கள் ஸ்ரீ வேதாந்த தேசிகர் கோயிலில் இருந்து சித்திரகுளம் பகுதிக்கு ஊர்வலமாகச் வரும்போது சில திருப்பாவை பாசுரங்களுக்கு நடனமாடுவார்கள்.

இந்த ஊர்வலத்தின் ஒரு பகுதியாக நடனக் கலைஞர் சசிரேகா பாலசுப்ரமணியன் கதாகாலக்ஷேபத்தை வழங்குகிறார்.

சில ஆண்களும் பெண்களும் கிருஷ்ணர் மற்றும் ஆண்டாள் போல் உடையணிந்து ஊர்வலத்தில் பங்கேற்பார்கள் (நீங்களோ அல்லது உங்கள் குழந்தைகளோ பங்கேற்க விரும்பினால், நீங்கள் இந்த நிகழ்ச்சியில் சேரலாம்) என்று பத்மா கூறுகிறார்.

சிலம்பம் நடன அகாடமியை நடத்தி வரும், குரு சுதாராணி ரகுபதியின் சிஷ்யையான பத்மா, கோலாட்டம் ஆட சில பெண்களை அழைத்திருப்பதாக கூறுகிறார்.

நாள் : ஜனவரி 2, ஞாயிற்றுக்கிழமை, ஸ்ரீ வேதாந்த தேசிகர் கோயிலில் இருந்து காலை 6.45 மணிக்கு மேல்.

இங்கே பயன்படுத்தப்பட்டுள்ள கோப்பு புகைப்படம் கடந்த நிகழ்வில் பத்மா தனது நடனக் கலைஞர்களுடன் இருக்கும் புகைப்படம்.

admin

Recent Posts

கோடை காலத்திற்காக சித்திரகுளத்தில் தற்காலிக குடிநீர் பந்தலை எம்எல்ஏ திறந்து வைத்தார்

மயிலாப்பூர் எம்.எல்.ஏ., தா.வேலு கடந்த வார இறுதியில் மயிலாப்பூர் சித்திரகுளம் அருகே பொதுமக்களுக்காக குடிநீர் பந்தலை திறந்து வைத்தார். தேவைப்படுபவர்களுக்கு…

9 hours ago

பேருந்து நிறுத்தங்களில் தங்குமிடங்களுக்கான பயணிகளின் வேண்டுகோளுக்கு சென்னை மெட்ரோ இறுதியாக பதிலளித்துள்ளது.

கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு மெட்ரோ ரயில் பாதை பணியின் காரணமாக பேருந்துகள் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டது. எம்டிசி பேருந்து நிறுத்தங்களில்…

10 hours ago

மெரினா லூப் சாலையில் சாலை மறியல்; மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்

பட்டினப்பாக்கத்தில் உள்ள மெரினா லூப் சாலை மற்றும் டாக்டர் டி.ஜி.எஸ்.தினகரன் சாலை சந்திப்பில் வெள்ளிக்கிழமை சாலை மறியல் சம்பவம் நடந்தது,…

1 day ago

இளைஞர்களுக்கான புகைப்பட பயிற்சி முகாம் இன்று தொடங்குகிறது. இதை மயிலாப்பூர் எம்எல்ஏ துவக்கி வைக்கிறார்.

மயிலாப்பூர் எம்.எல்.ஏ., தா.வேலு, ஆண்டுதோறும் நடத்துவது போல், இன்று, மே 4 முதல், இளைஞர்களுக்கான ‘புகைப்பட பயிற்சி முகாமை துவக்கி…

2 days ago

மயிலாப்பூரில் நடைபெற்ற மகாராஷ்டிர தின நிகழ்ச்சியில் மாநில ஆளுநர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்

மகாராஷ்டிர சங்கம் சென்னை மயிலாப்பூரில் உள்ள சமஸ்கிருத கல்லூரி ஆடிட்டோரியத்தில் சத்ரபதி சிவாஜி ஜெயந்தி மற்றும் மகாராஷ்டிரா தினத்தை மே…

4 days ago

எம்.எல்.ஏ., ஸ்பான்சர்களுடன் சேர்ந்து, பெண்களுக்கான இலவச தையல் பயிற்சி முகாமை நடத்துகிறார்.

மயிலாப்பூரில் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் சுமார் 30 பெண்கள் தற்போது மந்தைவெளிப்பாக்கத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் இலவச தையல் பயிற்சி…

4 days ago