சாந்தோம் லீத் காஸ்டில் தெருவில் வசித்து வரும் அனிதா பிலிப் சாரதி கல்யாணம், வரவேற்பு, தேவாலய கூட்டங்கள், நிகழ்ச்சிகள் போன்றவற்றிற்கு அலங்காரம் செய்யும் தொழிலை செய்து வருகிறார்.
கடந்த ஏழு மாதமாக கொரோனா காரணமாக இவரது தொழில் அவ்வளவாக நடைபெறவில்லை. தற்போது மீண்டும் தங்களுடைய தொழிலை ஆரம்பித்துள்ளார். இப்போது வரவிருக்கும் கிறிஸ்துமஸ் விழாவிற்காக அனிதாவும் அவருடைய கணவரும் ஒரு புது ஐடியாவை செய்துள்ளனர். என்னவென்றால் டூமிங் குப்பம், சீனிவாசபுரம் பகுதியில் வசிக்கும் அவருக்கு தெரிந்த ஐந்து மகளிரை அழைத்து வந்து அலங்காரம் செய்தல் மற்றும் கைவேலைப்பாடுகளுடன் கூடிய அழகிய பொருட்கள் செய்வது பற்றியும் பயிற்சி கொடுத்துள்ளனர். தற்போது இந்த ஐந்து மகளிரும் கிறிஸ்துமஸ் விழாவிற்காக சிறிய அலங்காரப்பொருட்களை செய்து விற்பனை செய்கின்றனர். இதன் மூலம் அவர்களுக்கு ஒரு வருவாய் கிடைக்கிறது. தற்போது அனிதாவும் பிசியாக உள்ளார். உங்களுக்கு இவர்களுடைய அலங்காரங்கள் வேண்டுமென்றால் அனிதாவை 98410 07676 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
ஆர். ஏ. புரத்தில் உள்ள ஆந்திர மகிள சபா வளாகத்தில் அமைந்துள்ள துர்காபாய் தேஷ்முக் பொது மருத்துவமனையில், பிப்ரவரி 7…
பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் எழுதவிருக்கும் மாணவர்களுக்காக, ஸ்ரீ வேதாந்த தேசிகர் தேவஸ்தானம் பிப்ரவரி 7…
ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் மூன்று நாள் தைப்பூசத் தெப்பத்திருவிழா ஞாயிற்றுக்கிழமை மாலை (பிப்ரவரி 1) தொடங்கியது. கபாலீஸ்வரப் பெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட…
லஸ் அவென்யூவில் உள்ள நாகேஸ்வர ராவ் பூங்காவின் ஒரு பகுதி இப்போது ஒரு வறண்ட மைதானம் போல் காட்சியளிக்கிறது. செவ்வாய்க்கிழமை…
2026 ஆம் ஆண்டுக்கான ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் மூன்று நாள் தெப்பத் திருவிழா பிப்ரவரி 1 முதல் 3 வரை…
101வது பழைய பீடியன்ஸ் அஸோஸியேஷனின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு, ஜனவரி 26 அன்று சாந்தோம், செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ-இந்தியன் மேல்நிலைப்…