கிறிஸ்துமஸ் விழாவுக்காக உள்ளூர் பெண்களின் கைவண்ணத்தில் உருவான அலங்காரங்கள்

சாந்தோம் லீத் காஸ்டில் தெருவில் வசித்து வரும் அனிதா பிலிப் சாரதி கல்யாணம், வரவேற்பு, தேவாலய கூட்டங்கள், நிகழ்ச்சிகள் போன்றவற்றிற்கு அலங்காரம் செய்யும் தொழிலை செய்து வருகிறார்.

கடந்த ஏழு மாதமாக கொரோனா காரணமாக இவரது தொழில் அவ்வளவாக நடைபெறவில்லை. தற்போது மீண்டும் தங்களுடைய தொழிலை ஆரம்பித்துள்ளார். இப்போது வரவிருக்கும் கிறிஸ்துமஸ் விழாவிற்காக அனிதாவும் அவருடைய கணவரும் ஒரு புது ஐடியாவை செய்துள்ளனர். என்னவென்றால் டூமிங் குப்பம், சீனிவாசபுரம் பகுதியில் வசிக்கும் அவருக்கு தெரிந்த ஐந்து மகளிரை அழைத்து வந்து அலங்காரம் செய்தல் மற்றும் கைவேலைப்பாடுகளுடன் கூடிய அழகிய பொருட்கள் செய்வது பற்றியும் பயிற்சி கொடுத்துள்ளனர். தற்போது இந்த ஐந்து மகளிரும் கிறிஸ்துமஸ் விழாவிற்காக சிறிய அலங்காரப்பொருட்களை செய்து விற்பனை செய்கின்றனர். இதன் மூலம் அவர்களுக்கு ஒரு வருவாய் கிடைக்கிறது. தற்போது அனிதாவும் பிசியாக உள்ளார். உங்களுக்கு இவர்களுடைய அலங்காரங்கள் வேண்டுமென்றால் அனிதாவை 98410 07676 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

admin

Recent Posts

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற கார்த்திகை தீப விழாவில் ஏராளமான மக்கள் பங்கேற்றனர்.

மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை (டிசம்பர் 4) கார்த்திகை தீப விழா தொடங்கிய நேரத்தில், லேசான,…

1 week ago

மந்தைவெளியில் ஜனவரி 2026ல் கோலப் போட்டி: இப்போதே பதிவு செய்யுங்கள்

மந்தைவெளி ராஜா தெரு குடியிருப்பாளர்கள் நலச் சங்கம் அதன் பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக “ஊடக உலகம்” என்ற கருப்பொருளை…

1 week ago

‘பசுமை பயணம்’ மாநில அளவிலான சைக்கிள் பிரச்சாரம் சாந்தோமில் முடிவடைகிறது.

‘பசுமை பயணம்’ என்ற கருப்பொருளில் நடத்தப்படும் மாரத்தான் சைக்கிள் ஓட்டுதல் முயற்சியின் இறுதி நிகழ்வு நவம்பர் 20, காலை 11.30…

3 weeks ago

தெரு நாயை அடித்து கொன்ற டீக்கடை உரிமையாளர் கைது.

மயிலாப்பூர், பஜார் சாலையில் உள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர் தெரு நாயை அடித்துக் கொன்றதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஸ்டேஷன்…

3 weeks ago

துர்காபாய் தேஷ்முக் பொது மருத்துவமனையில் இலவச மருத்துவ பரிசோதனை முகாம். நவம்பர் 18ல்

ஆர்.ஏ. புரத்தில் உள்ள துர்காபாய் தேஷ்முக் பொது மருத்துவமனை நவம்பர் 18 அன்று காலை 8.30 மணி முதல் பிற்பகல்…

4 weeks ago

மயிலாப்பூர் இந்து நிரந்தர நிதியம் விவகாரம்: மயிலாப்பூர் எம்.எல்.ஏ., வைப்பாளர்களின் பிரச்சினைகளை அரசாங்கத்திடம் தெரிவிப்பதாக உறுதியளித்துள்ளார்.

மயிலாப்பூர் எம்.எல்.ஏ. தா. வேலு, விளம்பரதாரர்களால் மோசமாக ஏமாற்றப்பட்டதாகக் கூறும் மயிலாப்பூர் நிதியின் வைப்பாளர்கள் தங்கள் வழக்கை முதல்வர் அல்லது…

4 weeks ago