Categories: ருசி

டெல்லி தாபா, ஆழ்வார்பேட்டையில் உள்ள அமராவதி வளாகத்தில் புதிய உணவகம், வட இந்திய உணவருந்துபவர்களுக்கு ஏற்ற இடம்.

டெல்லி தாபா, ஆழ்வார்பேட்டையில் அமராவதி உணவக வளாகத்தில் புதிதாக திறக்கப்பட்ட உணவகம், இது வட இந்திய உணவுகளுக்கு ஏற்ற சிறந்த இடமாக உள்ளது.

உணவக மேலாளர் வினோத் கூறுகையில், உணவருந்துபவர்கள், இங்கு சில பிரபலமான உணவுகளை தேர்ந்தெடுக்கலாம் என்கிறார்.

மேலும் அவர் தனது பரிந்துரைகளை இங்கே பகிர்ந்து கொள்கிறார்.

முர்க் லாசோனி கபாப் (கார்லிக் சிக்கன்), கடக் ஷீக் கபாப் மற்றும் தாபா முர்க் மசாலா, போன்ற உண்வுகள் கிடைக்கும். ஆனால் நீங்கள் ரொட்டிகளுக்கு ஒரு கிரேவியை கண்டிப்பாக ஆர்டர் செய்ய வேண்டும்.

மேலும் தாபாவின் பிரியாணிகளையும் பரிந்துரைக்கிறார் அவற்றில் குறிப்பிடத்தக்கது மட்டன் தம் பிரியாணி.

மெனுவில் பலவிதமான நான் மற்றும் ரொட்டிகளும் உள்ளன – சீஸ் அடிப்படையிலானது இங்கு பிரபலமாக உள்ளது.

மேலும் கோடையில், மாம்பழ லஸ்ஸியுடன் உணவைச் சாப்பிடலாம். ஆம், உங்கள் விருப்பமாக இருந்தால், சாதாரண ஜம்போ லஸ்ஸியையும் ஆர்டர் செய்யலாம்.

உணவகம் காலை 11.30 மணி முதல் மாலை 4 மணி வரையிலும், இரவு 7 முதல் 11.30 மணி வரையிலும் திறந்திருக்கும். மியூசிக் அகாடமிக்கு எதிரே அமைந்துள்ளது. பார்க்கிங் இடம் உள்ளது.

டேபிள் முன்பதிவு செய்ய 9176886655 என்ற எண்னை அழைக்கவும்.

டெல்லி தாபாவின் இந்த ஒரு நிமிட வீடியோவை பாருங்கள் – https://www.youtube.com/watch?v=heVKqdiLKu8

admin

Recent Posts

ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறப்பு. டோர் டெலிவரி வசதி உண்டு.

மந்தைவெளி தபால் நிலையத்திற்கு அருகிலுள்ள ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய விசாலமான மருந்தகத்தில்…

2 weeks ago

ஆழ்வார்பேட்டை கடையில் கைவினைப் பொருட்கள் விற்பனை. அக்டோபர் 19 வரை.

‘கலா உத்சவ்’ என்பது அக்டோபர் 19 வரை ஆழ்வார்பேட்டை கடையில் நடைபெறும் கைவினைக் கண்காட்சி மற்றும் விற்பனை ஆகும். இது…

2 weeks ago

மாணவர்களுக்கு மடிக்கணினிகளை நன்கொடையாக வழங்கிய ஆர்.ஏ.புரம் சமூகத்தினர்.

ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் சங்கம் (RAPRA) சில ஆண்டுகளாக இந்த சுற்றுப்புறத்தில் உள்ள சென்னை பள்ளிகள் மற்றும் அரசு உதவி…

3 weeks ago

மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி. காந்தியின் படைப்புகள் பற்றிய கருப்பொருள். தமிழில்.

ஆழ்வார்பேட்டை காந்தி அமைதி அறக்கட்டளை தனது அலுவலக வளாகத்தில், வரும் அக்டோபர் 2-ஆம் தேதி (மகாத்மா காந்தியின் 156-ஆம் ஜெயந்தியை…

4 weeks ago

நவராத்திரி 2025: ஸ்ரீ கபாலீஸ்வரர் கற்பகாம்பாள் கல்யாண மண்டபத்தில் பிரமாண்டமான கொலு

இந்து சமய அறநிலையத்துறை விவகாரங்களுக்கான மாநில அமைச்சர் பி.கே. சேகர் பாபு, செப்டம்பர் 22 மாலை மயிலாப்பூர் வெங்கடேச அக்ரஹாரத்…

4 weeks ago

வெங்கட்ரமணா ஆயுர்வேத மருந்தகத்தில் தீபாவளி லேகியம் விற்பனைக்கு தயார்.

தீபாவளி லேகியம் வாங்க இடம் தேடுகிறீர்களா? அதற்கு ஒரு சிறந்த இடம் மயிலாப்பூரில் உள்ள வெங்கட்ரமணா ஆயுர்வேத மருந்தகம். இது…

4 weeks ago