டெல்லி தாபா, ஆழ்வார்பேட்டையில் அமராவதி உணவக வளாகத்தில் புதிதாக திறக்கப்பட்ட உணவகம், இது வட இந்திய உணவுகளுக்கு ஏற்ற சிறந்த இடமாக உள்ளது.
உணவக மேலாளர் வினோத் கூறுகையில், உணவருந்துபவர்கள், இங்கு சில பிரபலமான உணவுகளை தேர்ந்தெடுக்கலாம் என்கிறார்.
மேலும் அவர் தனது பரிந்துரைகளை இங்கே பகிர்ந்து கொள்கிறார்.
முர்க் லாசோனி கபாப் (கார்லிக் சிக்கன்), கடக் ஷீக் கபாப் மற்றும் தாபா முர்க் மசாலா, போன்ற உண்வுகள் கிடைக்கும். ஆனால் நீங்கள் ரொட்டிகளுக்கு ஒரு கிரேவியை கண்டிப்பாக ஆர்டர் செய்ய வேண்டும்.
மேலும் தாபாவின் பிரியாணிகளையும் பரிந்துரைக்கிறார் அவற்றில் குறிப்பிடத்தக்கது மட்டன் தம் பிரியாணி.
மெனுவில் பலவிதமான நான் மற்றும் ரொட்டிகளும் உள்ளன – சீஸ் அடிப்படையிலானது இங்கு பிரபலமாக உள்ளது.
மேலும் கோடையில், மாம்பழ லஸ்ஸியுடன் உணவைச் சாப்பிடலாம். ஆம், உங்கள் விருப்பமாக இருந்தால், சாதாரண ஜம்போ லஸ்ஸியையும் ஆர்டர் செய்யலாம்.
உணவகம் காலை 11.30 மணி முதல் மாலை 4 மணி வரையிலும், இரவு 7 முதல் 11.30 மணி வரையிலும் திறந்திருக்கும். மியூசிக் அகாடமிக்கு எதிரே அமைந்துள்ளது. பார்க்கிங் இடம் உள்ளது.
டேபிள் முன்பதிவு செய்ய 9176886655 என்ற எண்னை அழைக்கவும்.
டெல்லி தாபாவின் இந்த ஒரு நிமிட வீடியோவை பாருங்கள் – https://www.youtube.com/watch?v=heVKqdiLKu8
ஆர்.ஏ. புரத்தில் ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான பரந்த நிலப்பகுதியின் பெரும்பகுதி சமப்படுத்தப்பட்டு, புதிய மருத்துவமனை ஒன்றை அமைப்பதற்கான பணிகள்…
E1 மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று வாராந்திர குறைகேட்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காவல் உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மற்றும்…
மெரினா கடற்கரையில் மற்றொரு 'ப்ளூ ஃபிளாக்' பகுதிக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது கலங்கரை விளக்கத்திற்கு அருகிலும், காமராஜர்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ.-வும் மாநில அமைச்சருமான பி. வெங்கடரமணன், ஆழ்வார்பேட்டையில் தனது அலுவலகத்தைத் திறந்ததிலிருந்து, அப்பகுதி மக்கள், சமூகத் தலைவர்கள் மற்றும்…
இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…
இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…