மயிலாப்பூர் மண்டலத்தில் சிறிய காலனிகள் உள்ளன, இந்த வார புயல் மழை, அவர்களின் இயல்பு வாழ்க்கையை பெருமளவு பாதித்துள்ளது.
சுந்தர கிராமணி தோட்டம் மற்றும் சண்முக பிள்ளை தெரு ஆகியவை ஹாமில்டன் பாலத்திற்கு அருகில், டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள சிட்டி சென்டர் மாலுக்கு பின்புறம் அமைந்துள்ளது.
தினசரி கூலித் தொழிலாளர்கள், எலக்ட்ரீசியன்கள், பெயின்டர்கள் மற்றும் இதர தொழிலாளர்கள் ஆகியோரின் சிறிய குடியிருப்புகள் இரண்டு தெருக்களிலும் அதிகளவு உள்ளது.
இந்த வார தொடக்கத்தில், இந்தப் பகுதியை ஒட்டி ஓடும் கால்வாயில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால், இங்குள்ள அனைத்து குடியிருப்புகளையும் வெள்ளம் சூழ்ந்தது. தண்ணீர் மிகவும் அழுக்காக இருந்தது, அது என் இடுப்பு வரை வந்தது, என்று ஒரு பெண் கூறினார்.
200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வெளியேற வேண்டியதாயிற்று. அதே பகுதியில் உள்ள சென்னை பள்ளியில் பலர் தங்க வைக்கப்பட்டனர். இன்று வரை பல குடியிருப்புகளுக்குள் தண்ணீர் தேங்கியுள்ளதால், விரைவில் வீடு திரும்ப முடியாது என அவர்கள் கூறுகின்றனர்.
மழைக்காலம் நெருங்கும் நேரத்தில் கால்வாயை தூர்வாரினால், இந்த மோசமான சூழ்நிலையில் இருந்து தங்களை காப்பாற்ற முடியும் என்று குடியிருப்பாளர் ஒருவர் கூறுகிறார்.
செய்தி மற்றும் புகைப்படம் : இலக்கியா பிரபு
மந்தைவெளி தபால் நிலையத்திற்கு அருகிலுள்ள ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய விசாலமான மருந்தகத்தில்…
‘கலா உத்சவ்’ என்பது அக்டோபர் 19 வரை ஆழ்வார்பேட்டை கடையில் நடைபெறும் கைவினைக் கண்காட்சி மற்றும் விற்பனை ஆகும். இது…
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் சங்கம் (RAPRA) சில ஆண்டுகளாக இந்த சுற்றுப்புறத்தில் உள்ள சென்னை பள்ளிகள் மற்றும் அரசு உதவி…
ஆழ்வார்பேட்டை காந்தி அமைதி அறக்கட்டளை தனது அலுவலக வளாகத்தில், வரும் அக்டோபர் 2-ஆம் தேதி (மகாத்மா காந்தியின் 156-ஆம் ஜெயந்தியை…
இந்து சமய அறநிலையத்துறை விவகாரங்களுக்கான மாநில அமைச்சர் பி.கே. சேகர் பாபு, செப்டம்பர் 22 மாலை மயிலாப்பூர் வெங்கடேச அக்ரஹாரத்…
தீபாவளி லேகியம் வாங்க இடம் தேடுகிறீர்களா? அதற்கு ஒரு சிறந்த இடம் மயிலாப்பூரில் உள்ள வெங்கட்ரமணா ஆயுர்வேத மருந்தகம். இது…