மயிலாப்பூர் மண்டலத்தில் சிறிய காலனிகள் உள்ளன, இந்த வார புயல் மழை, அவர்களின் இயல்பு வாழ்க்கையை பெருமளவு பாதித்துள்ளது.
சுந்தர கிராமணி தோட்டம் மற்றும் சண்முக பிள்ளை தெரு ஆகியவை ஹாமில்டன் பாலத்திற்கு அருகில், டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள சிட்டி சென்டர் மாலுக்கு பின்புறம் அமைந்துள்ளது.
தினசரி கூலித் தொழிலாளர்கள், எலக்ட்ரீசியன்கள், பெயின்டர்கள் மற்றும் இதர தொழிலாளர்கள் ஆகியோரின் சிறிய குடியிருப்புகள் இரண்டு தெருக்களிலும் அதிகளவு உள்ளது.
இந்த வார தொடக்கத்தில், இந்தப் பகுதியை ஒட்டி ஓடும் கால்வாயில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால், இங்குள்ள அனைத்து குடியிருப்புகளையும் வெள்ளம் சூழ்ந்தது. தண்ணீர் மிகவும் அழுக்காக இருந்தது, அது என் இடுப்பு வரை வந்தது, என்று ஒரு பெண் கூறினார்.
200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வெளியேற வேண்டியதாயிற்று. அதே பகுதியில் உள்ள சென்னை பள்ளியில் பலர் தங்க வைக்கப்பட்டனர். இன்று வரை பல குடியிருப்புகளுக்குள் தண்ணீர் தேங்கியுள்ளதால், விரைவில் வீடு திரும்ப முடியாது என அவர்கள் கூறுகின்றனர்.
மழைக்காலம் நெருங்கும் நேரத்தில் கால்வாயை தூர்வாரினால், இந்த மோசமான சூழ்நிலையில் இருந்து தங்களை காப்பாற்ற முடியும் என்று குடியிருப்பாளர் ஒருவர் கூறுகிறார்.
செய்தி மற்றும் புகைப்படம் : இலக்கியா பிரபு
‘பசுமை பயணம்’ என்ற கருப்பொருளில் நடத்தப்படும் மாரத்தான் சைக்கிள் ஓட்டுதல் முயற்சியின் இறுதி நிகழ்வு நவம்பர் 20, காலை 11.30…
மயிலாப்பூர், பஜார் சாலையில் உள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர் தெரு நாயை அடித்துக் கொன்றதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஸ்டேஷன்…
ஆர்.ஏ. புரத்தில் உள்ள துர்காபாய் தேஷ்முக் பொது மருத்துவமனை நவம்பர் 18 அன்று காலை 8.30 மணி முதல் பிற்பகல்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ. தா. வேலு, விளம்பரதாரர்களால் மோசமாக ஏமாற்றப்பட்டதாகக் கூறும் மயிலாப்பூர் நிதியின் வைப்பாளர்கள் தங்கள் வழக்கை முதல்வர் அல்லது…
பாரதிய வித்யா பவனின் சென்னை கேந்திரா, நவம்பர் 20 முதல் அதன் வருடாந்திர மார்கழி இசை நிகழ்ச்சிகளை நடத்துகிறது, மேலும்…
மயிலாப்பூர் ஸ்ரீ வாலீஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேகம் நவம்பர் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்கள் குழு கோயிலை…