நிரம்பி வழியும் கால்வாயில் இருந்து வரும் அழுக்கு நீர், தினசரி கூலித் தொழிலாளர்களின் சிறிய குடியிருப்புகளை வெள்ளத்தில் மூழ்கடிக்கிறது.

மயிலாப்பூர் மண்டலத்தில் சிறிய காலனிகள் உள்ளன, இந்த வார புயல் மழை, அவர்களின் இயல்பு வாழ்க்கையை பெருமளவு பாதித்துள்ளது.

சுந்தர கிராமணி தோட்டம் மற்றும் சண்முக பிள்ளை தெரு ஆகியவை ஹாமில்டன் பாலத்திற்கு அருகில், டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள சிட்டி சென்டர் மாலுக்கு பின்புறம் அமைந்துள்ளது.

தினசரி கூலித் தொழிலாளர்கள், எலக்ட்ரீசியன்கள், பெயின்டர்கள் மற்றும் இதர தொழிலாளர்கள் ஆகியோரின் சிறிய குடியிருப்புகள் இரண்டு தெருக்களிலும் அதிகளவு உள்ளது.

இந்த வார தொடக்கத்தில், இந்தப் பகுதியை ஒட்டி ஓடும் கால்வாயில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால், இங்குள்ள அனைத்து குடியிருப்புகளையும் வெள்ளம் சூழ்ந்தது. தண்ணீர் மிகவும் அழுக்காக இருந்தது, அது என் இடுப்பு வரை வந்தது, என்று ஒரு பெண் கூறினார்.

200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வெளியேற வேண்டியதாயிற்று. அதே பகுதியில் உள்ள சென்னை பள்ளியில் பலர் தங்க வைக்கப்பட்டனர். இன்று வரை பல குடியிருப்புகளுக்குள் தண்ணீர் தேங்கியுள்ளதால், விரைவில் வீடு திரும்ப முடியாது என அவர்கள் கூறுகின்றனர்.

மழைக்காலம் நெருங்கும் நேரத்தில் கால்வாயை தூர்வாரினால், இந்த மோசமான சூழ்நிலையில் இருந்து தங்களை காப்பாற்ற முடியும் என்று குடியிருப்பாளர் ஒருவர் கூறுகிறார்.

செய்தி மற்றும் புகைப்படம் : இலக்கியா பிரபு

admin

Recent Posts

சாய் பாபா கோவில் அருகே பொங்கலுக்கான பானைகள் விற்பனை.

உங்கள் பொங்கல் கொண்டாட்டத்திற்காக அழகாக வடிவமைக்கப்பட்ட மண்பானைகளைத் தேடுகிறீர்களா? அப்படியானால், இங்குள்ள சாய் பாபா கோவில் அருகே வெங்கடேச அக்ரஹாரம்…

5 days ago

சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா. ஜனவரி 8 முதல் 11 வரை.

மயிலாப்பூரில் வருடந்தோறும் ஜனவரி தொடக்கத்தில் நடைபெறும் சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா ஜனவரி 8 ம் தேதி காலை 7…

2 weeks ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற கார்த்திகை தீப விழாவில் ஏராளமான மக்கள் பங்கேற்றனர்.

மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை (டிசம்பர் 4) கார்த்திகை தீப விழா தொடங்கிய நேரத்தில், லேசான,…

1 month ago

மந்தைவெளியில் ஜனவரி 2026ல் கோலப் போட்டி: இப்போதே பதிவு செய்யுங்கள்

மந்தைவெளி ராஜா தெரு குடியிருப்பாளர்கள் நலச் சங்கம் அதன் பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக “ஊடக உலகம்” என்ற கருப்பொருளை…

2 months ago

‘பசுமை பயணம்’ மாநில அளவிலான சைக்கிள் பிரச்சாரம் சாந்தோமில் முடிவடைகிறது.

‘பசுமை பயணம்’ என்ற கருப்பொருளில் நடத்தப்படும் மாரத்தான் சைக்கிள் ஓட்டுதல் முயற்சியின் இறுதி நிகழ்வு நவம்பர் 20, காலை 11.30…

2 months ago

தெரு நாயை அடித்து கொன்ற டீக்கடை உரிமையாளர் கைது.

மயிலாப்பூர், பஜார் சாலையில் உள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர் தெரு நாயை அடித்துக் கொன்றதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஸ்டேஷன்…

2 months ago