நிரம்பி வழியும் கால்வாயில் இருந்து வரும் அழுக்கு நீர், தினசரி கூலித் தொழிலாளர்களின் சிறிய குடியிருப்புகளை வெள்ளத்தில் மூழ்கடிக்கிறது.

மயிலாப்பூர் மண்டலத்தில் சிறிய காலனிகள் உள்ளன, இந்த வார புயல் மழை, அவர்களின் இயல்பு வாழ்க்கையை பெருமளவு பாதித்துள்ளது.

சுந்தர கிராமணி தோட்டம் மற்றும் சண்முக பிள்ளை தெரு ஆகியவை ஹாமில்டன் பாலத்திற்கு அருகில், டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள சிட்டி சென்டர் மாலுக்கு பின்புறம் அமைந்துள்ளது.

தினசரி கூலித் தொழிலாளர்கள், எலக்ட்ரீசியன்கள், பெயின்டர்கள் மற்றும் இதர தொழிலாளர்கள் ஆகியோரின் சிறிய குடியிருப்புகள் இரண்டு தெருக்களிலும் அதிகளவு உள்ளது.

இந்த வார தொடக்கத்தில், இந்தப் பகுதியை ஒட்டி ஓடும் கால்வாயில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால், இங்குள்ள அனைத்து குடியிருப்புகளையும் வெள்ளம் சூழ்ந்தது. தண்ணீர் மிகவும் அழுக்காக இருந்தது, அது என் இடுப்பு வரை வந்தது, என்று ஒரு பெண் கூறினார்.

200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வெளியேற வேண்டியதாயிற்று. அதே பகுதியில் உள்ள சென்னை பள்ளியில் பலர் தங்க வைக்கப்பட்டனர். இன்று வரை பல குடியிருப்புகளுக்குள் தண்ணீர் தேங்கியுள்ளதால், விரைவில் வீடு திரும்ப முடியாது என அவர்கள் கூறுகின்றனர்.

மழைக்காலம் நெருங்கும் நேரத்தில் கால்வாயை தூர்வாரினால், இந்த மோசமான சூழ்நிலையில் இருந்து தங்களை காப்பாற்ற முடியும் என்று குடியிருப்பாளர் ஒருவர் கூறுகிறார்.

செய்தி மற்றும் புகைப்படம் : இலக்கியா பிரபு

admin

Recent Posts

மயிலாப்பூர் பள்ளி மாணவர்களுக்கான ‘அமைதி கிளப்புகள்’. இறுதிப் போட்டி.

காந்தி அமைதி அறக்கட்டளை, மெட்ராஸ் சமீபத்தில் சில உள்ளூர் பகுதி பள்ளிகளில் 2025–2026 கல்வியாண்டிற்கான 'பள்ளிகளில் அமைதி கிளப்புகள்' திட்டத்தை…

3 days ago

ஆர்.ஏ.புரத்தில் நவீன நூலகம் திறக்கப்பட்டது. மாணவர்களுக்கான படிப்பு அரங்கம், குழந்தைகளுக்கான பிரிவும் உள்ளது.

ஆர்.ஏ.புரத்தில் நவீன நூலகம் முறையாகத் திறக்கப்பட்டுள்ளது. தற்போதைய திமுக அரசாங்கத்தின் 'முதல்வர் படிப்பகம்' திட்டத்தின் கீழ் இது ஒரு சிஎம்டிஏ…

3 days ago

மெரினா கடற்கரையில் மாசி மகம் சடங்குகள்

மாசி மகம் சடங்குகள் மார்ச் 3 ஆம் தேதி அதிகாலை தொடங்கின. ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோயில் மற்றும் ஸ்ரீ கபாலீஸ்வரர்…

3 days ago

மயிலாப்பூர் தபால் நிலையத்தில் உள்ள ஏடிஎம் இப்போது 24 மணி நேரமும் செயல்படுகிறது.

தபால் நிலைய பயனர்கள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக, மயிலாப்பூர் தலைமை தபால் நிலையம் நவம்பர் 2025 இல் ஒரு ஏடிஎம்…

4 days ago

ஸ்ரீ வேதாந்த தேசிகர் கோவிலில் தவானோத்சவம். மார்ச் 1 முதல் 3 வரை

மயிலாப்பூர் ஸ்ரீ வேதாந்த தேசிகர் கோவிலில் வருடாந்திர தவானோத்சவம் மார்ச் 1 முதல் 3 வரை கொண்டாடப்பட உள்ளது. காலை,…

1 week ago

புதிதாகக் கட்டப்பட்ட திருவள்ளுவர் கோயிலின் கும்பாபிஷேகம்: பிப்ரவரி 27ல்.

மயிலாப்பூரில் புதிதாகக் கட்டப்பட்ட திருவள்ளுவர் கோயிலின் பிரமாண்ட கும்பாபிஷேகம் பிப்ரவரி 27 ஆம் தேதி காலை 8 மணிக்குத் தொடங்குகிறது.…

1 week ago