சாந்தோம் அருகே உள்ள ரபேல் பள்ளியில் கிறிஸ்தவ கன்னியாஸ்திரிகள் ஒன்று சேர்ந்து சுடர் என்ற குழுவை உருவாக்கி நடத்தி வருகின்றனர். இந்த குழுவின் மூலம் ஹோம் நர்சிங் படிப்பை நடத்தி வருகின்றனர்.
இந்த படிப்பு மூன்று மாத படிப்பு. முதல் இரண்டு மாதம் வகுப்பறையில் வகுப்புகள் நடைபெறும், அடுத்த ஒரு மாதம் அருகிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பயிற்சி வகுப்பு நடைபெறும்.
முதன் முதலாக இங்கு ஹோம் நர்சிங் படிப்பை முடித்தவர்களுக்கு சான்றிதழ்களை இந்த வாரம் நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கினர். இங்கு படித்த ஒரு மாணவிக்கு அருகில் உள்ள மருத்துவமனையில் வேலை கிடைத்துள்ளது.
இந்த ஹோம் நரசிங் படிப்பு படித்தவர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகள் உள்ளது. இந்த கொரோனா நேரத்தில் வேலைவாய்ப்பற்ற மகளிர் கேட்டுக்கொண்டதற்கிணங்க இந்த படிப்பு இங்கு தொடங்கப்பட்டது. இந்த படிப்பு தற்போது வேலைவாய்ப்பற்ற மகளிர்க்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
நீங்கள் இந்த படிப்பில் சேர்வதற்கும், மேலும் சுடர் குழுவுக்கு உதவிகள் செய்ய விரும்பினால் கீழ்க்காணும் எண்ணில் தொடர்புகொள்ளலாம்.
தொலைபேசி எண் : 73053 89425
உங்கள் பொங்கல் கொண்டாட்டத்திற்காக அழகாக வடிவமைக்கப்பட்ட மண்பானைகளைத் தேடுகிறீர்களா? அப்படியானால், இங்குள்ள சாய் பாபா கோவில் அருகே வெங்கடேச அக்ரஹாரம்…
மயிலாப்பூரில் வருடந்தோறும் ஜனவரி தொடக்கத்தில் நடைபெறும் சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா ஜனவரி 8 ம் தேதி காலை 7…
மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை (டிசம்பர் 4) கார்த்திகை தீப விழா தொடங்கிய நேரத்தில், லேசான,…
மந்தைவெளி ராஜா தெரு குடியிருப்பாளர்கள் நலச் சங்கம் அதன் பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக “ஊடக உலகம்” என்ற கருப்பொருளை…
‘பசுமை பயணம்’ என்ற கருப்பொருளில் நடத்தப்படும் மாரத்தான் சைக்கிள் ஓட்டுதல் முயற்சியின் இறுதி நிகழ்வு நவம்பர் 20, காலை 11.30…
மயிலாப்பூர், பஜார் சாலையில் உள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர் தெரு நாயை அடித்துக் கொன்றதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஸ்டேஷன்…