ரபேல் பள்ளியில் ஹோம் நர்சிங் படிப்பை முடித்து சான்றிதழ் பெற்ற மகளிர்

சாந்தோம் அருகே உள்ள ரபேல் பள்ளியில் கிறிஸ்தவ கன்னியாஸ்திரிகள் ஒன்று சேர்ந்து சுடர் என்ற குழுவை உருவாக்கி நடத்தி வருகின்றனர். இந்த குழுவின் மூலம் ஹோம் நர்சிங் படிப்பை நடத்தி வருகின்றனர்.

இந்த படிப்பு மூன்று மாத படிப்பு. முதல் இரண்டு மாதம் வகுப்பறையில் வகுப்புகள் நடைபெறும், அடுத்த ஒரு மாதம் அருகிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பயிற்சி வகுப்பு நடைபெறும்.

முதன் முதலாக இங்கு ஹோம் நர்சிங் படிப்பை முடித்தவர்களுக்கு சான்றிதழ்களை இந்த வாரம் நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கினர். இங்கு படித்த ஒரு மாணவிக்கு அருகில் உள்ள மருத்துவமனையில் வேலை கிடைத்துள்ளது.

இந்த ஹோம் நரசிங் படிப்பு படித்தவர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகள் உள்ளது. இந்த கொரோனா நேரத்தில் வேலைவாய்ப்பற்ற மகளிர் கேட்டுக்கொண்டதற்கிணங்க இந்த படிப்பு இங்கு தொடங்கப்பட்டது. இந்த படிப்பு தற்போது வேலைவாய்ப்பற்ற மகளிர்க்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

நீங்கள் இந்த படிப்பில் சேர்வதற்கும், மேலும் சுடர் குழுவுக்கு உதவிகள் செய்ய விரும்பினால் கீழ்க்காணும் எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

தொலைபேசி எண் : 73053 89425

admin

Recent Posts

முன்னாள் மயிலாப்பூர் எம்.எல்.ஏ. TVK-வில் இணைந்தார்

மயிலாப்பூர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர். நடராஜ் அதிகாரப்பூர்வமாக த.வெ.க (TVK) கட்சியில் இணைந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…

5 days ago

மயிலாப்பூர் இந்து பர்மனன்ட் பண்ட் சம்பந்தமான வழக்கு: வைப்புதாரர்கள் எம்.எல்.ஏ.விடம் மனு

மயிலாப்பூர் இந்து பர்மனன்ட் பண்ட் விவகாரம்: வைப்புதாரர்கள் எம்.எல்.ஏ.விடம் முக்கிய கோரிக்கைகள்: தமிழ்நாடு காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு (EOW) தாமதமாகி…

6 days ago

இராணி மேரி கல்லூரி மாணவர் சேர்க்கை: இசைப் பட்டப்படிப்புக்கு வயது வரம்பு 40 ஆக உயர்வு.

மயிலாப்பூரில் உள்ள இராணி மேரி கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில், கவனம் பெற வேண்டிய சில சிறப்புப்…

7 days ago

வெள்ளி விழா ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அக்ஷரா ப்ளே ஸ்கூல். புதிய கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை தொடக்கம்

மயிலாப்பூரில் செயல்பட்டு வரும் அக்ஷரா ப்ளே ஸ்கூல், சிறார்களின் கல்வி மற்றும் வளர்ச்சிக்காக 24 ஆண்டுகளாக சிறப்பான சேவையாற்றி, தற்போது…

7 days ago

ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோவிலில் வைகாசி பெருவிழா. மே 21ல் தொடங்கி நடைபெற்று வருகிறது. மே 28ல் தேர் திருவிழா.

ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோயிலில் வைகாசி பெருவிழா மே 21 முதல் ஜூன் 11 வரை நடைபெறுகிறது. நிகழ்ச்சி விவரங்கள் –…

1 week ago

மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சருமான திரு. பி. வெங்கட்ரமணன் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை.

மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினரான திரு. பி. வெங்கட்ரமணன், தமிழ்நாடு உணவு, குடிமைப் பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் விலைக்கட்டுப்பாடு…

2 weeks ago