Categories: சமூகம்

உள்ளூரில் அடிப்படை மருத்துவ சேவைகளை விரும்பும் ஏழைகளுக்காக, மயிலாப்பூர் மண்டலத்தில் நான்கு நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் தொடங்கப்பட்டுள்ளது

மயிலாப்பூர் மண்டலத்தில் இப்போது குறைந்தது நான்கு நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார மையங்கள் தொடங்கப்பட்டுள்ளளது. மாநில அரசால் நேற்று மாநிலம் முழுவதும் இது தொடங்கப்பட்டது.

இவை அடிப்படையில் பொருளாதார ரீதியாக ஏழைகளுக்காக உருவாக்கப்பட்ட மருத்துவ கிளினிக்குகள். இவை காலையிலும் மாலையிலும் திறந்திருக்கும்.

நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் இப்போது மந்தவெளியில் (அஞ்சல் அலுவலக வளாகத்திற்குப் பின்புறம்), ஆர் ஏ புரத்தில் (காமராஜ் சாலையில், தர்மாம்பாள் சென்னை கார்ப்பரேஷன் பூங்காவிற்கு எதிரே), சாந்தோமில் (நொச்சிக்குப்பம் அருகே) மற்றும் சாந்தோம் நெடுஞ்சாலையில் (பதிவு அலுவலகம் /அம்மா உணவகம் அருகில்) திறக்கப்பட்டுள்ளன.

மயிலாப்பூர் எம்எல்ஏ தா. வேலு, இந்த வசதியை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் தொடங்கிவைத்தபோது இந்த மையங்களில் ஒன்றில் இருந்தார்.

ஒவ்வொரு மையத்திலும் இப்போது ஒரு செவிலியர், ஒரு மருத்துவர் மற்றும் ஒரு உதவியாளர் உள்ளனர், அடிப்படை மருத்துவ உபகரணங்கள் உள்ளது மற்றும் அடிப்படை மருந்துகள் கையிருப்பு உள்ளது.

இது 12 சேவைகளை வழங்குகிறது, இதில் கர்ப்பகால பரிசோதனைகள், குழந்தை பராமரிப்பு, குடும்ப கட்டுப்பாடு, ENT மற்றும் கண் பரிசோதனை மற்றும் காயம் அல்லது சளி / காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் அவசர தேவைகளை நிவர்த்தி செய்கிறது.

அ.தி.மு.க அரசால் தொடங்கப்பட்ட அம்மா கிளினிக்குகளை விட இந்த மையங்கள் ஒரு படி சிறப்பாக இருக்கும். குறைந்த சேவைகள் மற்றும் பணியாளர்கள் காரணமாக அம்மா கிளினிக்குகள் செயல்படவில்லை.

admin

Recent Posts

நாகேஸ்வர ராவ் பூங்காவிற்குள் பூச்சிகளால் அரிக்கப்பட்டிருந்த சில பழமையான மரங்கள் வெட்டப்பட்டுள்ளது.

லஸ் அவென்யூவில் உள்ள நாகேஸ்வர ராவ் பூங்காவின் ஒரு பகுதி இப்போது ஒரு வறண்ட மைதானம் போல் காட்சியளிக்கிறது. செவ்வாய்க்கிழமை…

3 days ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவில் தெப்பத் திருவிழா பிப்ரவரி 1 முதல் 3 வரை

2026 ஆம் ஆண்டுக்கான ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் மூன்று நாள் தெப்பத் திருவிழா பிப்ரவரி 1 முதல் 3 வரை…

1 week ago

செயின்ட் பீட்ஸ் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு ஜனவரி 26ல் நடைபெறுகிறது.

101வது பழைய பீடியன்ஸ் அஸோஸியேஷனின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு, ஜனவரி 26 அன்று சாந்தோம், செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ-இந்தியன் மேல்நிலைப்…

1 week ago

சாய் பாபா கோவில் அருகே பொங்கலுக்கான பானைகள் விற்பனை.

உங்கள் பொங்கல் கொண்டாட்டத்திற்காக அழகாக வடிவமைக்கப்பட்ட மண்பானைகளைத் தேடுகிறீர்களா? அப்படியானால், இங்குள்ள சாய் பாபா கோவில் அருகே வெங்கடேச அக்ரஹாரம்…

2 weeks ago

சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா. ஜனவரி 8 முதல் 11 வரை.

மயிலாப்பூரில் வருடந்தோறும் ஜனவரி தொடக்கத்தில் நடைபெறும் சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா ஜனவரி 8 ம் தேதி காலை 7…

3 weeks ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற கார்த்திகை தீப விழாவில் ஏராளமான மக்கள் பங்கேற்றனர்.

மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை (டிசம்பர் 4) கார்த்திகை தீப விழா தொடங்கிய நேரத்தில், லேசான,…

2 months ago