கடந்த ஆண்டு இந்த வகுப்புகளில் கலந்து கொண்ட மாணவர்கள் இங்கு கற்பிக்கப்படும் பாடங்களில் சிறந்த மதிப்பெண் பெற்றதாக ராப்ரா கூறுகின்றது. பொருளாதாரத்தில் பின் தங்கிய ஏழை இளைஞர்கள், பெண்கள் மற்றும் சிறுவர்களுக்காக இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது.
இந்த ஆண்டு பயிற்சி வகுப்புகள் ஜூலை 2-ம் தேதி தொடங்கியது. காலை அமர்வில் வணிகவியல் மற்றும் கணக்கியல் பாடங்களில் பட்டய கணக்காளர் கிருஷ்ணப்ரியாவும், மதியம் அமர்வில் பட்டய கணக்காளர் அருண் அச்சுதன் பொருளாதாரம் மற்றும் வணிக கணிதம் ஆகிய பாடங்களிலும் வகுப்புகள் எடுக்கின்றனர்.
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் வகுப்புகள் நடத்தப்பட உள்ளது. ராப்ரா மாணவர்களுக்கு இலவச மதிய உணவை வழங்கும். ஆர்வமுள்ளவர்கள் இப்போதே பதிவு செய்ய 9841030040 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.
ராப்ரா மயிலாப்பூர்வாசிகள் இந்த தகவலை இங்கு பயன்பெறும் பெரியவர்களுடன் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றது.
ஆர்.ஏ. புரத்தில் ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான பரந்த நிலப்பகுதியின் பெரும்பகுதி சமப்படுத்தப்பட்டு, புதிய மருத்துவமனை ஒன்றை அமைப்பதற்கான பணிகள்…
E1 மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று வாராந்திர குறைகேட்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காவல் உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மற்றும்…
மெரினா கடற்கரையில் மற்றொரு 'ப்ளூ ஃபிளாக்' பகுதிக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது கலங்கரை விளக்கத்திற்கு அருகிலும், காமராஜர்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ.-வும் மாநில அமைச்சருமான பி. வெங்கடரமணன், ஆழ்வார்பேட்டையில் தனது அலுவலகத்தைத் திறந்ததிலிருந்து, அப்பகுதி மக்கள், சமூகத் தலைவர்கள் மற்றும்…
இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…
இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…