தொல்காப்பியப் பூங்காவில் நடைபயணம் செய்ய கட்டணத்துடன் கூடிய அனுமதி சீட்டிற்கு தற்போது விண்ணப்பம் செய்யலாம்.

நீங்கள் இப்போது ஆர்.ஏ.புரத்தின் தென்முனையில் உள்ள தொல்காப்பியப் பூங்காவிற்குள் (அடையார் பூங்கா) நீண்ட நடைப்பயிற்சி செய்யலாம்.

அங்கீகரிக்கப்பட்டவர்களுக்கு தினசரி / மாதாந்திர அடிப்படையில் கட்டணச் சீட்டுகள் வழங்கப்படும்.

மூன்று மாத பாஸ் ரூ.1500, ஒரு மாத பாஸ் ரூ.500 மற்றும் தினசரி பாஸ் ரூ.20 (இதற்கு முன் பதிவு விண்ணப்பம் தேவையில்லை).

நடை பயிற்சி நேரம்: காலை (காலை 6.30 மணி முதல் 8.00 மணி வரை). மாலை (4.30 மணி முதல் 6.00 மணி வரை)

இந்த பசுமையான இயற்கை இடத்தினுள் சுமார் 3 கிலோமீட்டர் தூரத்திற்கு நடைபாதை உருவாக்கப்பட்டுள்ளது. நடைபயிற்சி செய்பவர்கள் இந்த பாதையில் மட்டுமே செல்ல வேண்டும் மற்றும் பிளாஸ்டிக் பைகள் கொண்டு செல்லக்கூடாது மற்றும் செல்லப்பிராணிகளை கொண்டு வரக்கூடாது உள்ளிட்ட சில விதிகளை கடைபிடிக்க வேண்டும்.

இந்த வசதி சில காலத்திற்கு முன்பு அறிவிக்கப்பட்டது. தற்போது முதல்வரால் முறைப்படி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டம் சென்னை நதிகள் மறுசீரமைப்பு அறக்கட்டளையால் நிர்வகிக்கப்படுகிறது.

மேலும் விவரங்கள் மற்றும் நடைப்பயணத்திற்கான அனுமதி சீட்டு பெற, கீழ்க்காணும் வலை தளத்திற்கு சென்று விண்ணப்பிக்கவும் – https://www.chennairivers.gov.in/

admin

Recent Posts

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவில் தெப்பத் திருவிழா பிப்ரவரி 1 முதல் 3 வரை

2026 ஆம் ஆண்டுக்கான ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் மூன்று நாள் தெப்பத் திருவிழா பிப்ரவரி 1 முதல் 3 வரை…

2 days ago

செயின்ட் பீட்ஸ் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு ஜனவரி 26ல் நடைபெறுகிறது.

101வது பழைய பீடியன்ஸ் அஸோஸியேஷனின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு, ஜனவரி 26 அன்று சாந்தோம், செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ-இந்தியன் மேல்நிலைப்…

2 days ago

சாய் பாபா கோவில் அருகே பொங்கலுக்கான பானைகள் விற்பனை.

உங்கள் பொங்கல் கொண்டாட்டத்திற்காக அழகாக வடிவமைக்கப்பட்ட மண்பானைகளைத் தேடுகிறீர்களா? அப்படியானால், இங்குள்ள சாய் பாபா கோவில் அருகே வெங்கடேச அக்ரஹாரம்…

1 week ago

சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா. ஜனவரி 8 முதல் 11 வரை.

மயிலாப்பூரில் வருடந்தோறும் ஜனவரி தொடக்கத்தில் நடைபெறும் சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா ஜனவரி 8 ம் தேதி காலை 7…

3 weeks ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற கார்த்திகை தீப விழாவில் ஏராளமான மக்கள் பங்கேற்றனர்.

மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை (டிசம்பர் 4) கார்த்திகை தீப விழா தொடங்கிய நேரத்தில், லேசான,…

2 months ago

மந்தைவெளியில் ஜனவரி 2026ல் கோலப் போட்டி: இப்போதே பதிவு செய்யுங்கள்

மந்தைவெளி ராஜா தெரு குடியிருப்பாளர்கள் நலச் சங்கம் அதன் பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக “ஊடக உலகம்” என்ற கருப்பொருளை…

2 months ago