காலை, 7.45 மணிக்கு சிங்காரவேலரின் வீதிஉலாவுக்குப் பின், குளத்தின் கிழக்குப் பகுதியில் தீர்த்தவாரி நடைபெறும். சிங்காரவேலர் சந்நிதியில் பகல் 12 மணிக்கு மேல் மகா அபிஷேகமும், கலச அபிஷேகமும் நடைபெறும்.
மாலையில் சிங்காரவேலர் மாட வீதியில் இரவு 7 மணிக்கு ஊர்வலமாக புறப்பட்டு இரவு 7.30 மணிக்கு மேல் வடக்கு மாட வீதிக்கு வந்து சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறும்.
வீர பத்ரர் கோவில்
தியாகராஜபுரம் வீரபத்ரர் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணிக்கு முருகப்பெருமான் குதிரை வாகனத்தில் ஊர்வலமாக புறப்படுகிறார், வழியில் முண்டகக்கன்னி அம்மன் கோயிலில் ‘வேல்’ பெற்றுக்கொண்டு வீரபத்ரர் கோயிலுக்கு முன்னால் வந்து சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடக்கும். செவ்வாய்கிழமை மாலை 6.30 மணிக்கு கோயிலுக்குள் பாரம்பரிய முறைப்படி முருகப்பெருமானின் திருக்கல்யாண வைபவம் நடைபெறும்.
செய்தி: எஸ்.பிரபு
தமிழகத் தேர்தல்களை அடிப்படையாகக் கொண்ட இந்தக் கலந்துரையாடலின் கருப்பொருள் 'தமிழகம் 2026; இனிவரும் பாதை' என்பதாகும். இக்கலந்துரையாடல் ஏப்ரல் 17…
மயிலாப்பூரில் உள்ள இரண்டு முக்கிய இடங்களான எம்.ஆர்.டி.எஸ்-இன் முண்டக்கக்கன்னி அம்மன் கோயில் நிலையம் மற்றும் மந்தைவெளி நிலையத்தில், மின்சார இருசக்கர…
ரமண கேந்திரா அறக்கட்டளை சார்பில் ஏப்ரல் 15ம் தேதி ஸ்ரீ ரமண மகரிஷி 76வது ஆராதனை விழா, காலை 6…
10 முதல் 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்காக, எழுத்தாளர் பிரவீணா சிவராம் அவர்கள் நடத்தும் இரண்டு நாள் படைப்பு எழுத்துப் பயிலரங்கு…
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்போர் சங்கம் (RAPRA), 5 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வளர்த்தெடுக்கும் நோக்கில், 'RAPRA குழந்தைகள் மன்றம்'…
மந்தைவெளி மாரி செட்டி தெருவில் உள்ள ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவம் ஏப்ரல் 12 முதல் 21…