மந்தைவெளி – ஆர் ஏ புரம் பகுதியில் ‘மக்கள் அரசு அதிகாரிகளை நேரிடையாக சந்திக்கும் மக்கள் குறைதீர் கூட்டம்.

வார்டு 126ல் (மந்தைவெளி – மந்தைவெளிப்பாக்கம் – ஆர் ஏ புரம் மண்டலத்தின் ஒரு பகுதி) குடியிருப்பாளர்கள், இப்போது தங்களுக்கு இடையூராக உள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு, பல அரசு நிறுவனங்களின் அதிகாரிகளை நேருக்கு நேர் சந்தித்துப் பேசலாம்; மக்கள் குறைதீர் கூட்டம் இன்று (ஜனவரி 24ல்) நடக்கிறது.

தெற்கு கால்வாய்க்கரை சாலையில் உள்ள அல்போன்சா விளையாட்டு மைதானத்தில் உள்ள உள் கோர்ட்டில் அமைக்கப்பட்டுள்ள மேசைகளில் ஜி.சி.சி., போலீஸ், வருவாய், ஆதி திராவிட நலத்துறை, சமூக நலம், மின்விநியோகம் (TANGEDCO) மற்றும் பல துறைகளின் அதிகாரிகள் மக்களின் குறைகளை கேட்க அங்கு இருப்பார்கள் என வார்டு கவுன்சிலர் அமிர்த வர்ஷினி தெரிவித்துள்ளார்.

அதிகாரிகள் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை அங்கு இருப்பர்.

மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் ‘மக்களுடன் முதல்வர்’ நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

admin

Recent Posts

ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஆலய மகா சம்ப்ரோக்ஷணம் சிறப்பாக நடைபெற்றது.

மயிலாப்பூரில் அமைந்துள்ள ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஆலயத்தின் மகா சம்ப்ரோக்ஷணம் (குடமுழக்கு விழா), திங்கள்கிழமை, மார்ச் 16 அன்று காலை…

49 minutes ago

2026 தேர்தல்: பொது இடங்களில் உள்ள அரசு சார்ந்த விளம்பரங்கள் மற்றும் அறிவிப்புகளை மறைக்கும் பணியாளர்கள்.

தமிழக சட்டமன்றத் தேர்தல்கள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மார்ச் 15 மாலை முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. அரசு…

1 day ago

தொல்காப்பியப் பூங்காவின் முகத்துவாரப் பகுதி வற்றி வருகிறதா?

தொல்காப்பியப் பூங்காவின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள அடையாறு முகத்துவாரம் வற்றி வருகிறது. பூங்காவின் கிழக்குப் பகுதியிலிருந்து, அலைகளின் மூலம் வரும்…

2 days ago

ஸ்ரீ வேதாந்த தேசிகர் கோயிலின் மகா சம்ப்ரோக்ஷணம்: மார்ச் 16

ஸ்ரீ வேதாந்த தேசிகர் கோயிலின் மகா சம்ப்ரோக்ஷணம் (கும்பாபிஷேகம்), திங்கட்கிழமை, மார்ச் 16 அன்று காலை 9 மணி முதல்…

4 days ago

இயற்கை விவசாய முறையில் விளைவிக்கப்பட்ட அரிசி, அரிசி பொருட்கள் விற்பனை.

மயிலாப்பூர் வாரன் சாலையில் வசிக்கும் அதிதி, 2025 முதல் பாரம்பரிய நெல் வகைகளின் இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டுள்ளார். அவர் அரிசி…

5 days ago

சட்டம், மேலாண்மை படிப்புகளுக்கான ஆலோசனை.

அபிராமபுரத்தில் அமைந்துள்ள கேரியர் லாஞ்சர் நிறுவனம், மார்ச் 15 ஞாயிற்றுக்கிழமை மதியம் 12:30 மணிக்கு 9, 10 மற்றும் 11…

5 days ago