மயிலாப்பூர் எம்.ஆர்.டி.எஸ் ரயில் நிலையம் அருகே மாநகராட்சியின் காய்கறி செடிகளை வளர்க்கும் பணி மீண்டும் தொடங்கியது.

சென்னை மாநகராட்சியின் துப்புரவு பணியை மேற்கொண்டுவரும் உர்பேசர் நிறுவனத்தின் ஒப்பந்த பணியாளர்கள் நான்கு இடங்களில் அவர்கள் சேகரிக்கும் காய்கறி கழிவுகளை சென்னை மாநகராட்சியின் ஊழியர்களிடம் கொடுக்கின்றனர். இந்த காய்கறி கழிவுகளிலிருந்து சென்னை மாநகராட்சி இயற்கை உரம் தயாரிக்கின்றது. இந்த உரம் தயாரிக்க நான்கு வாரம் முதல் சுமார் பன்னிரெண்டு வார காலங்கள் ஆகும்.

இது போன்ற இயற்கை உரம் தயாரிக்கும் ஒரு யூனிட் கச்சேரி சாலை பக்கிங் கெனால் அருகே பறக்கும் ரயில் தடத்தின் அடியில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் தொடங்கப்பட்டது. இங்கு எருவும் மண்ணும் கலந்து தக்காளி, வெண்டைக்காய். கீரை போன்றவற்றை வளர்த்து வந்தனர். பின்னர் கொரோனா காரணமாக இது கைவிடப்பட்டது. இப்போது திரும்பவும் கார்ப்பரேஷன் ஊழிர்களும் மற்றும் ஒப்பந்த ஊழியர்களும் சேர்ந்து காய்கறி செடிகளை வளர்க்க தொடங்கியுள்ளனர். ஆனால் போதிய தண்ணீர் வசதி இல்லை.

இந்த செய்தியை மயிலாப்பூர் எம்.எல்.ஏ அறிந்து இந்த பணியை செய்வதற்கு தேவையானவற்றை செய்து தருவதாக உறுதியளித்துள்ளார். மாநகரட்சியின் இந்த பணி பாராட்டுதலுக்குரியது.

admin

Recent Posts

தமிழகத் தேர்தல் குறித்த கலந்துரையாடல். ஏப்ரல் 17 மாலை. ஆர். ஏ. புரத்தில்

தமிழகத் தேர்தல்களை அடிப்படையாகக் கொண்ட இந்தக் கலந்துரையாடலின் கருப்பொருள் 'தமிழகம் 2026; இனிவரும் பாதை' என்பதாகும். இக்கலந்துரையாடல் ஏப்ரல் 17…

3 weeks ago

மின்சார இருசக்கர வாகனங்களுக்கான பேட்டரி மாற்றும் வசதி. மந்தைவெளி, எம்.கே. அம்மன் கோயில் எம்.ஆர்.டி.எஸ் ரயில் நிலையங்களில்.

மயிலாப்பூரில் உள்ள இரண்டு முக்கிய இடங்களான எம்.ஆர்.டி.எஸ்-இன் முண்டக்கக்கன்னி அம்மன் கோயில் நிலையம் மற்றும் மந்தைவெளி நிலையத்தில், மின்சார இருசக்கர…

3 weeks ago

ஸ்ரீ ரமண மகரிஷி 76வது ஆராதனை விழா. ஏப்ரல் 15

ரமண கேந்திரா அறக்கட்டளை சார்பில் ஏப்ரல் 15ம் தேதி ஸ்ரீ ரமண மகரிஷி 76வது ஆராதனை விழா, காலை 6…

3 weeks ago

இளம் பருவத்தினருக்கான எழுத்துப் பயிலரங்குகள்.

10 முதல் 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்காக, எழுத்தாளர் பிரவீணா சிவராம் அவர்கள் நடத்தும் இரண்டு நாள் படைப்பு எழுத்துப் பயிலரங்கு…

3 weeks ago

ஆர்.ஏ.புரத்தில் குழந்தைகளுக்கான ஒரு மன்றம். இலவச நிகழ்வுகள். இப்போதே பதிவு செய்யுங்கள்.

ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்போர் சங்கம் (RAPRA), 5 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வளர்த்தெடுக்கும் நோக்கில், 'RAPRA குழந்தைகள் மன்றம்'…

4 weeks ago

ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவில் பிரம்மோற்சவம். ஏப்ரல் 12 முதல் 21 வரை

மந்தைவெளி மாரி செட்டி தெருவில் உள்ள ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவம் ஏப்ரல் 12 முதல் 21…

4 weeks ago