சென்னை மாநகராட்சியின் துப்புரவு பணியை மேற்கொண்டுவரும் உர்பேசர் நிறுவனத்தின் ஒப்பந்த பணியாளர்கள் நான்கு இடங்களில் அவர்கள் சேகரிக்கும் காய்கறி கழிவுகளை சென்னை மாநகராட்சியின் ஊழியர்களிடம் கொடுக்கின்றனர். இந்த காய்கறி கழிவுகளிலிருந்து சென்னை மாநகராட்சி இயற்கை உரம் தயாரிக்கின்றது. இந்த உரம் தயாரிக்க நான்கு வாரம் முதல் சுமார் பன்னிரெண்டு வார காலங்கள் ஆகும்.
இது போன்ற இயற்கை உரம் தயாரிக்கும் ஒரு யூனிட் கச்சேரி சாலை பக்கிங் கெனால் அருகே பறக்கும் ரயில் தடத்தின் அடியில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் தொடங்கப்பட்டது. இங்கு எருவும் மண்ணும் கலந்து தக்காளி, வெண்டைக்காய். கீரை போன்றவற்றை வளர்த்து வந்தனர். பின்னர் கொரோனா காரணமாக இது கைவிடப்பட்டது. இப்போது திரும்பவும் கார்ப்பரேஷன் ஊழிர்களும் மற்றும் ஒப்பந்த ஊழியர்களும் சேர்ந்து காய்கறி செடிகளை வளர்க்க தொடங்கியுள்ளனர். ஆனால் போதிய தண்ணீர் வசதி இல்லை.
இந்த செய்தியை மயிலாப்பூர் எம்.எல்.ஏ அறிந்து இந்த பணியை செய்வதற்கு தேவையானவற்றை செய்து தருவதாக உறுதியளித்துள்ளார். மாநகரட்சியின் இந்த பணி பாராட்டுதலுக்குரியது.
இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…
இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…
மந்தைவெளி, ஆர்.கே. நகரில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசித் திட்டத்திற்கான சேவையை மேலும்…
மயிலாப்பூர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர். நடராஜ் அதிகாரப்பூர்வமாக த.வெ.க (TVK) கட்சியில் இணைந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…
மயிலாப்பூர் இந்து பர்மனன்ட் பண்ட் விவகாரம்: வைப்புதாரர்கள் எம்.எல்.ஏ.விடம் முக்கிய கோரிக்கைகள்: தமிழ்நாடு காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு (EOW) தாமதமாகி…
மயிலாப்பூரில் உள்ள இராணி மேரி கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில், கவனம் பெற வேண்டிய சில சிறப்புப்…