கபாலீஸ்வரர் கோயிலின் வசந்த உற்சவத்தில் சுவாமி திரு புர சம்ஹார திருக்கோலத்திலும், அம்பாள் ராஜ மாதங்கி கோலத்திலும் காட்சி

கபாலீஸ்வரருக்கு 10 நாட்கள் நடைபெறும் வசந்த உற்சவத்தின் சிறப்பு அம்சம், விழாவின் ஒவ்வொரு நாளும் அவர் தரிசனம் செய்யும் வெவ்வேறு திருக்கோலங்கள் ஆகும்.

உற்சவத்தின் ஏழாவது நாளான செவ்வாய்க்கிழமை மாலை வில் அம்பு ஏந்தி திருபுர சம்ஹார திருக்கோலத்தில் தரிசனம் அளித்தார்.

பரம்பரை அர்ச்சகர் இ.வெங்கடசுப்ரமணியன் சிவாச்சாரியார் மயிலாப்பூர் டைம்ஸிடம் கூறியதாவது, வருடத்தின் இரண்டு நாட்களில் தான் இவ்வளவு சிறப்பு வாய்ந்த திருக்கோலத்தில் காட்சியளிக்கிறார், மற்றொன்று பங்குனி உற்சவத்தின் ஏழாவது நாள் தேர் ஊர்வலத்தின் போது.

அசுரர்களை அழிக்க அவர் எடுக்கும் கோலம் இது, என்றார்.

கற்பகாம்பாள் அழகிய ராஜ மாதங்கி திருக்கோலத்தில் வீணை வாசித்தபடி பக்தர்களை மகிழ்வித்தாள்.

முன்னதாக திங்கள்கிழமை மாலை, ஹேமநாத பாகவதரின் அகந்தையைப் போக்கவும், பாணபத்திரரின் அளப்பரிய பக்தியை உலகுக்கு எடுத்துரைக்கவும் விறகு விற்பவராக கபாலீஸ்வரர் தரிசனம் அளித்தார்.

புதன் மற்றும் வியாழன் ஆகிய நாட்களில் உற்சவம் தொடர்ந்து சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு வெள்ளிக்கிழமை பஞ்ச மூர்த்திகள் வீதியுலாவுடன் நிறைவு பெறுகிறது.

சனிக்கிழமை முதல் சிங்காரவேலருக்கு வசந்த உற்சவம் நடைபெறுகிறது.

செய்தி, புகைப்படம்: எஸ் பிரபு

admin

Recent Posts

நாகேஸ்வர ராவ் பூங்காவிற்குள் பூச்சிகளால் அரிக்கப்பட்டிருந்த சில பழமையான மரங்கள் வெட்டப்பட்டுள்ளது.

லஸ் அவென்யூவில் உள்ள நாகேஸ்வர ராவ் பூங்காவின் ஒரு பகுதி இப்போது ஒரு வறண்ட மைதானம் போல் காட்சியளிக்கிறது. செவ்வாய்க்கிழமை…

2 days ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவில் தெப்பத் திருவிழா பிப்ரவரி 1 முதல் 3 வரை

2026 ஆம் ஆண்டுக்கான ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் மூன்று நாள் தெப்பத் திருவிழா பிப்ரவரி 1 முதல் 3 வரை…

1 week ago

செயின்ட் பீட்ஸ் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு ஜனவரி 26ல் நடைபெறுகிறது.

101வது பழைய பீடியன்ஸ் அஸோஸியேஷனின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு, ஜனவரி 26 அன்று சாந்தோம், செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ-இந்தியன் மேல்நிலைப்…

1 week ago

சாய் பாபா கோவில் அருகே பொங்கலுக்கான பானைகள் விற்பனை.

உங்கள் பொங்கல் கொண்டாட்டத்திற்காக அழகாக வடிவமைக்கப்பட்ட மண்பானைகளைத் தேடுகிறீர்களா? அப்படியானால், இங்குள்ள சாய் பாபா கோவில் அருகே வெங்கடேச அக்ரஹாரம்…

2 weeks ago

சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா. ஜனவரி 8 முதல் 11 வரை.

மயிலாப்பூரில் வருடந்தோறும் ஜனவரி தொடக்கத்தில் நடைபெறும் சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா ஜனவரி 8 ம் தேதி காலை 7…

3 weeks ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற கார்த்திகை தீப விழாவில் ஏராளமான மக்கள் பங்கேற்றனர்.

மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை (டிசம்பர் 4) கார்த்திகை தீப விழா தொடங்கிய நேரத்தில், லேசான,…

2 months ago