மயிலாப்பூர் கோவில்களில் கார்த்திகை தீபத்திருவிழா கொண்டாட்டங்கள்

கார்த்திகை தீப திருவிழாவின் போது திருவண்ணாமலை கோவிலில் நடைபெறும் சொக்கப்பனை எரிக்கப்படும் நிகழ்ச்சி பெரும்பாலான மக்களை கவர்ந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை இரவு, ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலிலும், ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோவிலிலும் சொக்கப்பனை எரிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது, இந்த நிகழ்வை காண பெருவாரியான மக்கள் கூடினர். சொக்கப்பனை என்பது உலர்ந்த பனை ஓலைகளைக் கொண்டு ஒன்றாக பின்னப்பட்டிருக்கும். இதை கோவிலின் திறந்தவெளியில் வைத்து எரிப்பர். இரண்டு கோயில் மண்டலங்களிலும், கோவில் பூசாரிகள் தீயை எடுத்து, சொக்கப்பனையை எரியூட்டியதை மக்கள் அருகில் நின்று பார்த்தார்கள். இது திருவண்ணாமலையில் உள்ள மகாதீபத்தின் ஒரு பகுதியாக மலையின் மேல் எரியும் மாபெரும் சுடரைப் பிரதிபலிக்கும் அடையாளச் செயலாகும், இந்த நிகழ்வு தென்னிந்தியாவில் தீபத் திருவிழாவின் ஒரு முக்கிய அம்சமாக உள்ளது. முன்னதாக ஞாயிற்றுக்கிழமை, பல தன்னார்வலர்கள் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் குளத்தின் அனைத்து படிகளிலும் நூற்றுக்கணக்கான மண் விளக்குகளை வைத்து தீபம் ஏற்றினர். இந்த விளக்குகள் அந்தி நேரத்தில் எரிந்தது மிகவும் அற்புதமாக இருந்தது, மாட வீதிகளில் கடந்து சென்ற அனைவரும் இந்த காட்சியை பார்த்து சென்றனர்.

admin

Recent Posts

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலுக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல், புரளி என தெரியவந்துள்ளது

புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…

3 days ago

மெரினா கடற்கரையின் ஒரு பகுதியை இராணி மேரி கல்லூரி மாணவிகள் சுத்தம் செய்தனர்.

ரோட்டரி சர்வதேச மாவட்டம் 3234, இராணி மேரி கல்லூரியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகளுடன் இணைந்து பெரிய அளவிலான…

3 days ago

புனித தாமஸின் விழா: சாந்தோம் கதீட்ரலில் பேராயர் கொடியை ஏற்றினார்.

ஜூலை 2 புதன்கிழமை மாலை புனித தாமஸின் கொடியை பேராயர் ரெவ். ஜார்ஜ் அந்தோணிசாமி ஆசீர்வதித்து, பின்னர் புனித தாமஸின்…

4 days ago

திருவேங்கடம் சாலை சீரமைக்கப்பட்டது: ஆனால் சாலை சந்திப்பு மற்றும் தேவநாதன் தெரு ஆகிய இடங்களில் இன்னும் வேலை முடியவில்லை.

மந்தைவெளியில் வசிப்பவர்கள், திருவேங்கடம் தெரு - தேவநாதன் தெரு மற்றும் வெங்கடகிருஷ்ணா சாலையில் தொடங்கப்பட்ட சாலை தொடர் வேலைகளை ஜி.சி.சி.…

4 days ago

ஆர்.ஏ.புரத்தில் உள்ள ஜி.சி.சி.யின் மறுசுழற்சி பொருட்கள் சேமிக்கும் இடத்தில் தீ விபத்து.

ஆர்.ஏ.புரத்தில் உள்ள காமராஜ் சாலையில் அமைந்துள்ள சென்னை மாநகராட்சியின் அப்புறப்படுத்தப்பட்ட பொருட்களுக்கான முற்றத்தில் இன்று புதன்கிழமை (ஜூலை 2) காலை…

5 days ago

நந்தலாலா மையத்தில் வராஹி நவராத்திரி கொண்டாட்டங்கள்.

பூஜ்யஸ்ரீ மதியொலி சரஸ்வதி பிருந்தாவன் என்று அழைக்கப்படும் டாக்டர் ரங்கா சாலையில் உள்ள நந்தலாலா மையத்தில் வராஹி நவராத்திரி கொண்டாட்டங்கள்…

1 week ago