மயிலாப்பூர் கோவில்களில் கார்த்திகை தீபத்திருவிழா கொண்டாட்டங்கள்

கார்த்திகை தீப திருவிழாவின் போது திருவண்ணாமலை கோவிலில் நடைபெறும் சொக்கப்பனை எரிக்கப்படும் நிகழ்ச்சி பெரும்பாலான மக்களை கவர்ந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை இரவு, ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலிலும், ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோவிலிலும் சொக்கப்பனை எரிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது, இந்த நிகழ்வை காண பெருவாரியான மக்கள் கூடினர். சொக்கப்பனை என்பது உலர்ந்த பனை ஓலைகளைக் கொண்டு ஒன்றாக பின்னப்பட்டிருக்கும். இதை கோவிலின் திறந்தவெளியில் வைத்து எரிப்பர். இரண்டு கோயில் மண்டலங்களிலும், கோவில் பூசாரிகள் தீயை எடுத்து, சொக்கப்பனையை எரியூட்டியதை மக்கள் அருகில் நின்று பார்த்தார்கள். இது திருவண்ணாமலையில் உள்ள மகாதீபத்தின் ஒரு பகுதியாக மலையின் மேல் எரியும் மாபெரும் சுடரைப் பிரதிபலிக்கும் அடையாளச் செயலாகும், இந்த நிகழ்வு தென்னிந்தியாவில் தீபத் திருவிழாவின் ஒரு முக்கிய அம்சமாக உள்ளது. முன்னதாக ஞாயிற்றுக்கிழமை, பல தன்னார்வலர்கள் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் குளத்தின் அனைத்து படிகளிலும் நூற்றுக்கணக்கான மண் விளக்குகளை வைத்து தீபம் ஏற்றினர். இந்த விளக்குகள் அந்தி நேரத்தில் எரிந்தது மிகவும் அற்புதமாக இருந்தது, மாட வீதிகளில் கடந்து சென்ற அனைவரும் இந்த காட்சியை பார்த்து சென்றனர்.

admin

Recent Posts

ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறப்பு. டோர் டெலிவரி வசதி உண்டு.

மந்தைவெளி தபால் நிலையத்திற்கு அருகிலுள்ள ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய விசாலமான மருந்தகத்தில்…

2 weeks ago

ஆழ்வார்பேட்டை கடையில் கைவினைப் பொருட்கள் விற்பனை. அக்டோபர் 19 வரை.

‘கலா உத்சவ்’ என்பது அக்டோபர் 19 வரை ஆழ்வார்பேட்டை கடையில் நடைபெறும் கைவினைக் கண்காட்சி மற்றும் விற்பனை ஆகும். இது…

2 weeks ago

மாணவர்களுக்கு மடிக்கணினிகளை நன்கொடையாக வழங்கிய ஆர்.ஏ.புரம் சமூகத்தினர்.

ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் சங்கம் (RAPRA) சில ஆண்டுகளாக இந்த சுற்றுப்புறத்தில் உள்ள சென்னை பள்ளிகள் மற்றும் அரசு உதவி…

2 weeks ago

மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி. காந்தியின் படைப்புகள் பற்றிய கருப்பொருள். தமிழில்.

ஆழ்வார்பேட்டை காந்தி அமைதி அறக்கட்டளை தனது அலுவலக வளாகத்தில், வரும் அக்டோபர் 2-ஆம் தேதி (மகாத்மா காந்தியின் 156-ஆம் ஜெயந்தியை…

4 weeks ago

நவராத்திரி 2025: ஸ்ரீ கபாலீஸ்வரர் கற்பகாம்பாள் கல்யாண மண்டபத்தில் பிரமாண்டமான கொலு

இந்து சமய அறநிலையத்துறை விவகாரங்களுக்கான மாநில அமைச்சர் பி.கே. சேகர் பாபு, செப்டம்பர் 22 மாலை மயிலாப்பூர் வெங்கடேச அக்ரஹாரத்…

4 weeks ago

வெங்கட்ரமணா ஆயுர்வேத மருந்தகத்தில் தீபாவளி லேகியம் விற்பனைக்கு தயார்.

தீபாவளி லேகியம் வாங்க இடம் தேடுகிறீர்களா? அதற்கு ஒரு சிறந்த இடம் மயிலாப்பூரில் உள்ள வெங்கட்ரமணா ஆயுர்வேத மருந்தகம். இது…

4 weeks ago