மயிலாப்பூர் கோவில்களில் கார்த்திகை தீபத்திருவிழா கொண்டாட்டங்கள்

கார்த்திகை தீப திருவிழாவின் போது திருவண்ணாமலை கோவிலில் நடைபெறும் சொக்கப்பனை எரிக்கப்படும் நிகழ்ச்சி பெரும்பாலான மக்களை கவர்ந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை இரவு, ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலிலும், ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோவிலிலும் சொக்கப்பனை எரிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது, இந்த நிகழ்வை காண பெருவாரியான மக்கள் கூடினர். சொக்கப்பனை என்பது உலர்ந்த பனை ஓலைகளைக் கொண்டு ஒன்றாக பின்னப்பட்டிருக்கும். இதை கோவிலின் திறந்தவெளியில் வைத்து எரிப்பர். இரண்டு கோயில் மண்டலங்களிலும், கோவில் பூசாரிகள் தீயை எடுத்து, சொக்கப்பனையை எரியூட்டியதை மக்கள் அருகில் நின்று பார்த்தார்கள். இது திருவண்ணாமலையில் உள்ள மகாதீபத்தின் ஒரு பகுதியாக மலையின் மேல் எரியும் மாபெரும் சுடரைப் பிரதிபலிக்கும் அடையாளச் செயலாகும், இந்த நிகழ்வு தென்னிந்தியாவில் தீபத் திருவிழாவின் ஒரு முக்கிய அம்சமாக உள்ளது. முன்னதாக ஞாயிற்றுக்கிழமை, பல தன்னார்வலர்கள் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் குளத்தின் அனைத்து படிகளிலும் நூற்றுக்கணக்கான மண் விளக்குகளை வைத்து தீபம் ஏற்றினர். இந்த விளக்குகள் அந்தி நேரத்தில் எரிந்தது மிகவும் அற்புதமாக இருந்தது, மாட வீதிகளில் கடந்து சென்ற அனைவரும் இந்த காட்சியை பார்த்து சென்றனர்.

admin

Recent Posts

‘பசுமை பயணம்’ மாநில அளவிலான சைக்கிள் பிரச்சாரம் சாந்தோமில் முடிவடைகிறது.

‘பசுமை பயணம்’ என்ற கருப்பொருளில் நடத்தப்படும் மாரத்தான் சைக்கிள் ஓட்டுதல் முயற்சியின் இறுதி நிகழ்வு நவம்பர் 20, காலை 11.30…

2 weeks ago

தெரு நாயை அடித்து கொன்ற டீக்கடை உரிமையாளர் கைது.

மயிலாப்பூர், பஜார் சாலையில் உள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர் தெரு நாயை அடித்துக் கொன்றதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஸ்டேஷன்…

2 weeks ago

துர்காபாய் தேஷ்முக் பொது மருத்துவமனையில் இலவச மருத்துவ பரிசோதனை முகாம். நவம்பர் 18ல்

ஆர்.ஏ. புரத்தில் உள்ள துர்காபாய் தேஷ்முக் பொது மருத்துவமனை நவம்பர் 18 அன்று காலை 8.30 மணி முதல் பிற்பகல்…

3 weeks ago

மயிலாப்பூர் இந்து நிரந்தர நிதியம் விவகாரம்: மயிலாப்பூர் எம்.எல்.ஏ., வைப்பாளர்களின் பிரச்சினைகளை அரசாங்கத்திடம் தெரிவிப்பதாக உறுதியளித்துள்ளார்.

மயிலாப்பூர் எம்.எல்.ஏ. தா. வேலு, விளம்பரதாரர்களால் மோசமாக ஏமாற்றப்பட்டதாகக் கூறும் மயிலாப்பூர் நிதியின் வைப்பாளர்கள் தங்கள் வழக்கை முதல்வர் அல்லது…

3 weeks ago

பாரதிய வித்யா பவனின் மார்கழி இசை விழா நவம்பர் 20ல் தொடங்குகிறது.

பாரதிய வித்யா பவனின் சென்னை கேந்திரா, நவம்பர் 20 முதல் அதன் வருடாந்திர மார்கழி இசை நிகழ்ச்சிகளை நடத்துகிறது, மேலும்…

3 weeks ago

ஸ்ரீ வாலீஸ்வரர் கோயிலின் கும்பாபிஷேகம் நவம்பர் 23ல்.

மயிலாப்பூர் ஸ்ரீ வாலீஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேகம் நவம்பர் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்கள் குழு கோயிலை…

3 weeks ago