மயிலாப்பூர் கோவில்களில் கார்த்திகை தீபத்திருவிழா கொண்டாட்டங்கள்

கார்த்திகை தீப திருவிழாவின் போது திருவண்ணாமலை கோவிலில் நடைபெறும் சொக்கப்பனை எரிக்கப்படும் நிகழ்ச்சி பெரும்பாலான மக்களை கவர்ந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை இரவு, ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலிலும், ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோவிலிலும் சொக்கப்பனை எரிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது, இந்த நிகழ்வை காண பெருவாரியான மக்கள் கூடினர். சொக்கப்பனை என்பது உலர்ந்த பனை ஓலைகளைக் கொண்டு ஒன்றாக பின்னப்பட்டிருக்கும். இதை கோவிலின் திறந்தவெளியில் வைத்து எரிப்பர். இரண்டு கோயில் மண்டலங்களிலும், கோவில் பூசாரிகள் தீயை எடுத்து, சொக்கப்பனையை எரியூட்டியதை மக்கள் அருகில் நின்று பார்த்தார்கள். இது திருவண்ணாமலையில் உள்ள மகாதீபத்தின் ஒரு பகுதியாக மலையின் மேல் எரியும் மாபெரும் சுடரைப் பிரதிபலிக்கும் அடையாளச் செயலாகும், இந்த நிகழ்வு தென்னிந்தியாவில் தீபத் திருவிழாவின் ஒரு முக்கிய அம்சமாக உள்ளது. முன்னதாக ஞாயிற்றுக்கிழமை, பல தன்னார்வலர்கள் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் குளத்தின் அனைத்து படிகளிலும் நூற்றுக்கணக்கான மண் விளக்குகளை வைத்து தீபம் ஏற்றினர். இந்த விளக்குகள் அந்தி நேரத்தில் எரிந்தது மிகவும் அற்புதமாக இருந்தது, மாட வீதிகளில் கடந்து சென்ற அனைவரும் இந்த காட்சியை பார்த்து சென்றனர்.

admin

Recent Posts

மயிலாப்பூர் பள்ளி மாணவர்களுக்கான ‘அமைதி கிளப்புகள்’. இறுதிப் போட்டி.

காந்தி அமைதி அறக்கட்டளை, மெட்ராஸ் சமீபத்தில் சில உள்ளூர் பகுதி பள்ளிகளில் 2025–2026 கல்வியாண்டிற்கான 'பள்ளிகளில் அமைதி கிளப்புகள்' திட்டத்தை…

3 days ago

ஆர்.ஏ.புரத்தில் நவீன நூலகம் திறக்கப்பட்டது. மாணவர்களுக்கான படிப்பு அரங்கம், குழந்தைகளுக்கான பிரிவும் உள்ளது.

ஆர்.ஏ.புரத்தில் நவீன நூலகம் முறையாகத் திறக்கப்பட்டுள்ளது. தற்போதைய திமுக அரசாங்கத்தின் 'முதல்வர் படிப்பகம்' திட்டத்தின் கீழ் இது ஒரு சிஎம்டிஏ…

3 days ago

மெரினா கடற்கரையில் மாசி மகம் சடங்குகள்

மாசி மகம் சடங்குகள் மார்ச் 3 ஆம் தேதி அதிகாலை தொடங்கின. ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோயில் மற்றும் ஸ்ரீ கபாலீஸ்வரர்…

3 days ago

மயிலாப்பூர் தபால் நிலையத்தில் உள்ள ஏடிஎம் இப்போது 24 மணி நேரமும் செயல்படுகிறது.

தபால் நிலைய பயனர்கள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக, மயிலாப்பூர் தலைமை தபால் நிலையம் நவம்பர் 2025 இல் ஒரு ஏடிஎம்…

4 days ago

ஸ்ரீ வேதாந்த தேசிகர் கோவிலில் தவானோத்சவம். மார்ச் 1 முதல் 3 வரை

மயிலாப்பூர் ஸ்ரீ வேதாந்த தேசிகர் கோவிலில் வருடாந்திர தவானோத்சவம் மார்ச் 1 முதல் 3 வரை கொண்டாடப்பட உள்ளது. காலை,…

7 days ago

புதிதாகக் கட்டப்பட்ட திருவள்ளுவர் கோயிலின் கும்பாபிஷேகம்: பிப்ரவரி 27ல்.

மயிலாப்பூரில் புதிதாகக் கட்டப்பட்ட திருவள்ளுவர் கோயிலின் பிரமாண்ட கும்பாபிஷேகம் பிப்ரவரி 27 ஆம் தேதி காலை 8 மணிக்குத் தொடங்குகிறது.…

1 week ago