ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் நவம்பர் 20ஆம் தேதி நடைபெறுகிறது

மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் நவம்பர் 20-ஆம் தேதி நடைபெறுகிறது. இங்கு நவம்பர்16-ஆம் தேதி சடங்குகள் தொடங்குகின்றன.

சிறப்பு நிகழ்வின் சில முக்கிய நிகழ்வுகள் இங்கே –

நவம்பர் 16 : 7 am – 12 pm- பேயாழ்வார் அவதாரத் தலத்தில் இருந்து தீர்த்தம் கொண்டு வருதல் , யாகசாலை நிர்ணயம்
நவம்பர் 20 – காலை 5 மணி – 5.30 மணி – மஹாபூர்ணாஹுதி
– காலை 6 மணி முதல் 7.30 மணி வரை – மகா சம்ப்ரோக்ஷணம் (கும்பாபிஷேகம்)
காலை 11 மணி முதல் மதியம் 12 மணி வரை – தீர்த்த பிரசாத வினியோகம், சர்வ தரிசனம்.
இரவு 7 மணி – ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் சேஷ வாகனத்தில் திருவீதி உலா.

இக்கோயிலில் கடந்த சில மாதங்களாக தீவிர சீரமைப்பு பணிகள் நடைபெற்று வந்தது. கடந்த வாரம், ஓவிய கலைஞர்கள் கோயில் மற்றும் அதன் புராணக்கதைகளை கருப்பொருளாகக் கொண்ட அழகான ஓவியங்களை சுவர் சுற்றிலும் மற்றும் கூரையின் மீதும் ஒரு ஆர்ட் கேலரியை உருவாக்கியுள்ளனர்.

குளத்தில் உள்ள மண்டபமும் நன்றாக வர்ணம் பூசப்பட்டுள்ளது.

admin

Recent Posts

ஆர்.ஏ. புரத்தில் உள்ள ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான இடத்தில் 300 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை அமையவுள்ளது.

ஆர்.ஏ. புரத்தில் ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான பரந்த நிலப்பகுதியின் பெரும்பகுதி சமப்படுத்தப்பட்டு, புதிய மருத்துவமனை ஒன்றை அமைப்பதற்கான பணிகள்…

2 months ago

மயிலாப்பூர் காவல் நிலையத்தில் வாராந்திர குறைகேட்புக் கூட்டம் தொடங்கியது

E1 மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று வாராந்திர குறைகேட்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காவல் உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மற்றும்…

2 months ago

மெரினாவில் மற்றொரு ‘ப்ளூ ஃபிளாக்’ (Blue Flag) பகுதி – கலங்கரை விளக்கத்திற்கு அருகில்

மெரினா கடற்கரையில் மற்றொரு 'ப்ளூ ஃபிளாக்' பகுதிக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது கலங்கரை விளக்கத்திற்கு அருகிலும், காமராஜர்…

3 months ago

மயிலாப்பூர் எம்.எல்.ஏ-வை மயிலாப்பூர் மக்கள் தொடர்புகொள்ள தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி அறிமுகம்.

மயிலாப்பூர் எம்.எல்.ஏ.-வும் மாநில அமைச்சருமான பி. வெங்கடரமணன், ஆழ்வார்பேட்டையில் தனது அலுவலகத்தைத் திறந்ததிலிருந்து, அப்பகுதி மக்கள், சமூகத் தலைவர்கள் மற்றும்…

3 months ago

சாய்பாபா கோயில் அருகே ECR-லிருந்து கொண்டுவரப்பட்ட நுங்குகள் விற்பனை

இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…

3 months ago

இராணி மேரி கல்லூரியில் சேர்க்கை இன்னும் நடைபெறுகிறது.

இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…

3 months ago