குயில் தோட்டம், சாந்தோம் உயர்நிலைப் பள்ளிக்கு தெற்கே சாந்தோம் நெடுஞ்சாலை அருகே அமைந்துள்ளது. இங்கு தமிழ்நாடு அரசின் குடிசை மாற்று வாரியம் (தற்போது தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் என மறுபெயரிடப்பட்டுள்ளது) மூலம் கட்டப்பட்ட குடியிருப்புகள் இடிக்கப்பட்டு, புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படவுள்ளது.
சமீபத்தில், வாரியத்தின் செயல்பாடுகளை மேற்பார்வையிடும் மாநில அமைச்சர் டி.எம். அன்பரசன் ஒரு சில குடியிருப்பாளர்களுக்கு முறையாக காசோலைகளை வழங்கினார்; இங்கு வசிக்கும் மற்றும் வெளியூர் செல்லும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு முறை வாடகை இழப்பீடாக ரூ.25,000 கிடைக்கும்.
முந்தைய அதிமுக அரசு ரூ.8000 வழங்கியது, தற்போது எங்களின் வேண்டுகோளை ஏற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் இதை ரூ.25 ஆயிரமாக உயர்த்தியுள்ளார். இந்த பணம் இப்போது மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என்றும், மறுசீரமைப்புத் திட்டத்தில் நாங்கள் தீவிரமாக இருக்கிறோம் என்றும் மயிலாப்பூர் எம்.எல்.ஏ. தா.வேலு கூறுகிறார்.
இந்த குயில் தோட்டம், ஒரு காலத்தில் பரபரப்பான சாந்தோம் நெடுஞ்சாலையை ஒட்டி குடிசைகளாக இருந்தது. 1970களின் பிற்பகுதியில் குடிசை மாற்று வாரியத்தால் உருவாக்கப்பட்டது.
சுமார் 350 குடும்பங்கள் இங்கு வசித்து வந்தாலும், சில வீட்டு உரிமையாளர்கள் தங்கள் அடுக்குமாடி குடியிருப்புகளை விற்றுவிட்டனர், அங்கு புதிதாக வந்தவர்கள் பல முன்னேற்றங்களைச் செய்துள்ளனர். இந்த காலனியை மீண்டும் சீரமைப்பு செய்ய கடந்த மூன்று ஆண்டுகளாக குயில் தோட்டம் பகுதியில் வசித்து வந்த குடியிருப்பாளர்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தியது.
சுமார் 200 குடும்பங்கள் அடுக்குமாடி குடியிருப்புகளை காலி செய்துவிட்டனர், மீதமுள்ளவர்கள் விரைவில் வெளியேற உள்ளனர்.
மயிலாப்பூர் எம்.எல்.ஏ, சுமார் 380 அடுக்குமாடி குடியிருப்புகளை உருவாக்கும் வகையில், அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட வாரியம் உத்தேசித்துள்ளதாகவும், காலனிக்குள் ஆக்கிரமிப்பு நிலத்தில் வசிப்பவர்களுக்கும் குடியிருப்புகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருவதாகவும் கூறுகிறார்.
மேலும் சுமார் 150 குடும்பங்கள் வாடகை இழப்பீட்டு காசோலைகளை ஏற்கத் தேர்வு செய்துள்ளதாகவும், கட்டிட இடிப்புப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகிறார்.
மயிலாப்பூர் முழுவதும், குடிசை மாற்று வாரியத்தால் முதன்முதலில் உருவாக்கப்பட்ட இதுபோன்ற பல காலனிகள் – மறு சீரமைப்பின் பல்வேறு கட்டங்களில் உள்ளன.
ஆர்.ஏ. புரத்தில் ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான பரந்த நிலப்பகுதியின் பெரும்பகுதி சமப்படுத்தப்பட்டு, புதிய மருத்துவமனை ஒன்றை அமைப்பதற்கான பணிகள்…
E1 மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று வாராந்திர குறைகேட்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காவல் உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மற்றும்…
மெரினா கடற்கரையில் மற்றொரு 'ப்ளூ ஃபிளாக்' பகுதிக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது கலங்கரை விளக்கத்திற்கு அருகிலும், காமராஜர்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ.-வும் மாநில அமைச்சருமான பி. வெங்கடரமணன், ஆழ்வார்பேட்டையில் தனது அலுவலகத்தைத் திறந்ததிலிருந்து, அப்பகுதி மக்கள், சமூகத் தலைவர்கள் மற்றும்…
இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…
இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…