இன்று முதல் மயிலாப்பூரில் சுமார் பத்து தொழிலாளர்கள் கோவில்களிலும் மற்றும் கோவிலை சுற்றியுள்ள பகுதிகளிலும் சுத்தம் பணியை துவங்கியுள்ளனர். இதன் தொடக்கமாக முதலில் கபாலீஸ்வரர் கோவில் குளத்தின் படிகளையும் அதனை சுற்றியுள்ள பகுதிகளையும் சுத்தம் செய்தனர். மேலும் வாலீஸ்வரர் கோவிலிலும் இதே போன்று சுத்தம் செய்தனர். இந்த பணி மூன்று நாட்களுக்கு தொடர்ந்து நடைபெறும் என்று கபாலீஸ்வரர் கோவில் நிர்வாக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு வாரங்களுக்கு முன் மாநில அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு கோவிலை ஆய்வு செய்தார். அப்போது மயிலாப்பூர் எம்.எல்.ஏ தா.வேலுவும் உடனிருந்தார். மேலும் மயிலாப்பூரில் அரசு கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் பராமரிப்பு பணிகள் மேற்கொண்டு சுத்தமாக வைத்திருக்க திட்டம் உள்ளதாக எம்.எல்.ஏ வேலு தெரிவித்துள்ளார்.
மந்தைவெளி தபால் நிலையத்திற்கு அருகிலுள்ள ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய விசாலமான மருந்தகத்தில்…
‘கலா உத்சவ்’ என்பது அக்டோபர் 19 வரை ஆழ்வார்பேட்டை கடையில் நடைபெறும் கைவினைக் கண்காட்சி மற்றும் விற்பனை ஆகும். இது…
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் சங்கம் (RAPRA) சில ஆண்டுகளாக இந்த சுற்றுப்புறத்தில் உள்ள சென்னை பள்ளிகள் மற்றும் அரசு உதவி…
ஆழ்வார்பேட்டை காந்தி அமைதி அறக்கட்டளை தனது அலுவலக வளாகத்தில், வரும் அக்டோபர் 2-ஆம் தேதி (மகாத்மா காந்தியின் 156-ஆம் ஜெயந்தியை…
இந்து சமய அறநிலையத்துறை விவகாரங்களுக்கான மாநில அமைச்சர் பி.கே. சேகர் பாபு, செப்டம்பர் 22 மாலை மயிலாப்பூர் வெங்கடேச அக்ரஹாரத்…
தீபாவளி லேகியம் வாங்க இடம் தேடுகிறீர்களா? அதற்கு ஒரு சிறந்த இடம் மயிலாப்பூரில் உள்ள வெங்கட்ரமணா ஆயுர்வேத மருந்தகம். இது…