இன்று முதல் மயிலாப்பூரில் சுமார் பத்து தொழிலாளர்கள் கோவில்களிலும் மற்றும் கோவிலை சுற்றியுள்ள பகுதிகளிலும் சுத்தம் பணியை துவங்கியுள்ளனர். இதன் தொடக்கமாக முதலில் கபாலீஸ்வரர் கோவில் குளத்தின் படிகளையும் அதனை சுற்றியுள்ள பகுதிகளையும் சுத்தம் செய்தனர். மேலும் வாலீஸ்வரர் கோவிலிலும் இதே போன்று சுத்தம் செய்தனர். இந்த பணி மூன்று நாட்களுக்கு தொடர்ந்து நடைபெறும் என்று கபாலீஸ்வரர் கோவில் நிர்வாக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு வாரங்களுக்கு முன் மாநில அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு கோவிலை ஆய்வு செய்தார். அப்போது மயிலாப்பூர் எம்.எல்.ஏ தா.வேலுவும் உடனிருந்தார். மேலும் மயிலாப்பூரில் அரசு கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் பராமரிப்பு பணிகள் மேற்கொண்டு சுத்தமாக வைத்திருக்க திட்டம் உள்ளதாக எம்.எல்.ஏ வேலு தெரிவித்துள்ளார்.
ஆர்.ஏ. புரத்தில் ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான பரந்த நிலப்பகுதியின் பெரும்பகுதி சமப்படுத்தப்பட்டு, புதிய மருத்துவமனை ஒன்றை அமைப்பதற்கான பணிகள்…
E1 மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று வாராந்திர குறைகேட்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காவல் உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மற்றும்…
மெரினா கடற்கரையில் மற்றொரு 'ப்ளூ ஃபிளாக்' பகுதிக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது கலங்கரை விளக்கத்திற்கு அருகிலும், காமராஜர்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ.-வும் மாநில அமைச்சருமான பி. வெங்கடரமணன், ஆழ்வார்பேட்டையில் தனது அலுவலகத்தைத் திறந்ததிலிருந்து, அப்பகுதி மக்கள், சமூகத் தலைவர்கள் மற்றும்…
இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…
இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…