இன்று முதல் மயிலாப்பூரில் சுமார் பத்து தொழிலாளர்கள் கோவில்களிலும் மற்றும் கோவிலை சுற்றியுள்ள பகுதிகளிலும் சுத்தம் பணியை துவங்கியுள்ளனர். இதன் தொடக்கமாக முதலில் கபாலீஸ்வரர் கோவில் குளத்தின் படிகளையும் அதனை சுற்றியுள்ள பகுதிகளையும் சுத்தம் செய்தனர். மேலும் வாலீஸ்வரர் கோவிலிலும் இதே போன்று சுத்தம் செய்தனர். இந்த பணி மூன்று நாட்களுக்கு தொடர்ந்து நடைபெறும் என்று கபாலீஸ்வரர் கோவில் நிர்வாக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு வாரங்களுக்கு முன் மாநில அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு கோவிலை ஆய்வு செய்தார். அப்போது மயிலாப்பூர் எம்.எல்.ஏ தா.வேலுவும் உடனிருந்தார். மேலும் மயிலாப்பூரில் அரசு கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் பராமரிப்பு பணிகள் மேற்கொண்டு சுத்தமாக வைத்திருக்க திட்டம் உள்ளதாக எம்.எல்.ஏ வேலு தெரிவித்துள்ளார்.
இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…
இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…
மந்தைவெளி, ஆர்.கே. நகரில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசித் திட்டத்திற்கான சேவையை மேலும்…
மயிலாப்பூர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர். நடராஜ் அதிகாரப்பூர்வமாக த.வெ.க (TVK) கட்சியில் இணைந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…
மயிலாப்பூர் இந்து பர்மனன்ட் பண்ட் விவகாரம்: வைப்புதாரர்கள் எம்.எல்.ஏ.விடம் முக்கிய கோரிக்கைகள்: தமிழ்நாடு காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு (EOW) தாமதமாகி…
மயிலாப்பூரில் உள்ள இராணி மேரி கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில், கவனம் பெற வேண்டிய சில சிறப்புப்…