கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை தொடர்ந்து லஸ்ஸில் பெரியளவில் முகக்கவசம் வழங்கும் நிகழ்ச்சியை அமைச்சர் தொடங்கி வைத்தார்.

லஸ்ஸில் இன்று ஜூன் 29 காலை நடைபெற்ற நிகழ்வில், மாஸ்க் விநியோகம் மற்றும் பிரச்சாரத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது, இந்த நிகழ்விற்கு மாநில சுகாதார அமைச்சர் மா. சுப்பிரமணியன் தலைமை வகித்தார்.

மயிலாப்பூர் எம்எல்ஏ தா.வேலு, நகர மேயர், துணை மேயர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

121, 124, 125 ஆகிய வார்டு கவுன்சிலர்களும் பங்கேற்றனர்.

முகக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்த வாசகங்களை தாங்கிய டி-சர்ட்களுடன் ஏராளமான தன்னார்வ தொண்டர்கள் கலந்து கொண்டனர். லஸ் பகுதியில் ஒரு தற்காலிக மேடையில் நடைபெற்ற சம்பிரதாய நிகழ்வுக்குப் பிறகு, தன்னார்வலர்கள் மற்றும் விருந்தினர்கள், பாதசாரிகள், வியாபாரிகள் மற்றும் பேருந்துப் பயணிகளுக்கு முகக்கவசங்களை விநியோகித்துச் சென்றனர்.

மயிலாப்பூர் பகுதிகளை உள்ளடக்கிய தேனாம்பேட்டை மண்டலத்தில் கணிசமான எண்ணிக்கையிலான மக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் பலர் தங்கள் வீடுகளில் தங்களைத் தனிமைப்படுத்தியுள்ளனர்.

பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் பெருநகர சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

admin

Recent Posts

மயிலாப்பூர் காவல் நிலையத்தில் வாராந்திர குறைகேட்புக் கூட்டம் தொடங்கியது

E1 மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று வாராந்திர குறைகேட்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காவல் உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மற்றும்…

3 days ago

மெரினாவில் மற்றொரு ‘ப்ளூ ஃபிளாக்’ (Blue Flag) பகுதி – கலங்கரை விளக்கத்திற்கு அருகில்

மெரினா கடற்கரையில் மற்றொரு 'ப்ளூ ஃபிளாக்' பகுதிக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது கலங்கரை விளக்கத்திற்கு அருகிலும், காமராஜர்…

1 week ago

மயிலாப்பூர் எம்.எல்.ஏ-வை மயிலாப்பூர் மக்கள் தொடர்புகொள்ள தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி அறிமுகம்.

மயிலாப்பூர் எம்.எல்.ஏ.-வும் மாநில அமைச்சருமான பி. வெங்கடரமணன், ஆழ்வார்பேட்டையில் தனது அலுவலகத்தைத் திறந்ததிலிருந்து, அப்பகுதி மக்கள், சமூகத் தலைவர்கள் மற்றும்…

1 week ago

சாய்பாபா கோயில் அருகே ECR-லிருந்து கொண்டுவரப்பட்ட நுங்குகள் விற்பனை

இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…

3 weeks ago

இராணி மேரி கல்லூரியில் சேர்க்கை இன்னும் நடைபெறுகிறது.

இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…

3 weeks ago

கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசித் திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது – இத்தகவலைப் பகிரவும்

மந்தைவெளி, ஆர்.கே. நகரில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசித் திட்டத்திற்கான சேவையை மேலும்…

4 weeks ago