மறைந்த திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு. கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு மயிலாப்பூர் மண்டலத்தைச் சேர்ந்த 300 மாணவர்களுக்கு தலா ரூ.3,000 வழங்கப்பட்டது.
அடையாறு பாலம் அருகே உள்ள முத்தமிழ் பேரவை மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், திமுகவின் மயிலாப்பூர் எம்எல்ஏ தா.வேலு, சென்னை தெற்கு நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கப்பாண்டியன் (திமுக) ஆகியோர் முக்கிய விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
இந்த நன்கொடைக்கான நிதியை தானும், தி.மு.க.வின் உள்ளூர் தலைவர்களும், யூனிட் உறுப்பினர்களும் கொடுத்ததாகவும், ஒவ்வொரு வருடமும் சில காலமாக இந்த நிகழ்ச்சியை நடத்தி வருவதாகவும் கூறுகிறார் எம்.எல்.ஏ வேலு.
மேலும் எம்.எல்.ஏ., தனது அலுவலகத்தில் கிடைத்த மனுக்களில் இருந்து ஏழை மாணவர்களைத் தேர்ந்தெடுத்ததாகவும், அதேநேரத்தில் எங்கள் கட்சி உறுப்பினர்கள் தங்கள் மண்டலங்களில் உள்ள ஏழை மாணவர்களின் விண்ணப்பங்களையும் சமர்ப்பித்தாகவும் கூறுகிறார்.
ஆர்.ஏ. புரத்தில் ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான பரந்த நிலப்பகுதியின் பெரும்பகுதி சமப்படுத்தப்பட்டு, புதிய மருத்துவமனை ஒன்றை அமைப்பதற்கான பணிகள்…
E1 மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று வாராந்திர குறைகேட்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காவல் உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மற்றும்…
மெரினா கடற்கரையில் மற்றொரு 'ப்ளூ ஃபிளாக்' பகுதிக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது கலங்கரை விளக்கத்திற்கு அருகிலும், காமராஜர்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ.-வும் மாநில அமைச்சருமான பி. வெங்கடரமணன், ஆழ்வார்பேட்டையில் தனது அலுவலகத்தைத் திறந்ததிலிருந்து, அப்பகுதி மக்கள், சமூகத் தலைவர்கள் மற்றும்…
இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…
இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…