மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில் துறவி வாயிலார் நாயனாரின் முக்தி தினம் இன்று கொண்டாடப்பட்டது. இதன் சிறப்பு என்னவென்றால் ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டு கோவில் திறக்கப்பட்ட பிறகு நடைபெற்ற முதல் அபிஷேகம், அதே போல் இந்த நிகழ்வில் பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனர். வாயிலார் நாயன்மார் மயிலாப்பூரில் பிறந்ததாக கருதப்படுகிறது.
கடந்த முப்பது வருடங்களாக இந்த விழாவினை 1946-ல் ஆரம்பிக்கப்பட்ட பூந்தமல்லி உயிர் துளுவ வேளாள மரபினர் சங்கத்தினர் கொண்டாடி வருகின்றனர். இந்த சங்கத்தினர் விழா பற்றி கூறும்போது அவர்களின் மூதாதையர்கள் கபாலீஸ்வரர் கோவிலில் நூறு வருடங்களுக்கு மேலாக கோவில் வளர்ச்சிக்காக பணியாற்றி வந்ததாகவும் தற்போதும் அந்த தொடர்பு இருப்பதாகவும் எனவே இந்த வாயிலார் நாயன்மார் விழாவினை வருடந்தோறும் கொண்டாடுவதாகவும் தெரிவித்தனர்.
இன்று மாலை நாயனாரின் புஷ்ப பல்லக்கு சேவை கோவில் வளாகத்திற்குள்ளேயே நடைபெறவுள்ளது. வழக்கமாக இந்த புஷ்ப பல்லக்கு சேவை கோவிலுக்கு வெளியே மிகவும் சிறப்பாக நடைபெறும். தற்போது ஊரடங்கு விதிமுறைகளால் கோவிலுக்கு உள்ளேயே நடைபெறுகிறது.
மயிலாப்பூர் ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோயிலின் வருடாந்திர வைகாசி திருவிழா மற்றும் விடையாற்றி கலை விழா ஜூன் 1 ஆம் தேதி…
FICCI FLO இன் ஆதரவுடன் EcoKonnectors Trust மற்றும் Munnetram Trust ஆகியவை திறன் மேம்பாட்டின் மூலம் சுய உதவிக்குழு…
64 ஸ்கொயர்ஸ் செஸ் அகாடமி, மே 31 சனிக்கிழமை, மயிலாப்பூர் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள சென்னை சிட்டி சென்டர்…
மயிலாப்பூரில் உள்ள எரிவாயு மூலம் இயங்கும் தகனக்கூடம் தற்போது மூடப்பட்டுள்ளது. பழுதுபார்ப்பு மற்றும் மேம்படுத்தல் பணிகளுக்காக மே 30 வரை…
மயிலாப்பூரில் உள்ள ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் உள்ள ஒரு ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் கடைக்கு சென்னை மாநகராட்சி சீல் வைத்துள்ளது. கடை…
மயிலாப்பூரில் இன்று காலை வழி தவறி, மயிலாப்பூர் குடியிருப்பாளர்களின் தளங்களில் ஆன்லைனில் பகிரப்பட்ட செய்திகளால் ‘காணாமல் போனதாக’ அறிவிக்கப்பட்ட முதியவர்…