மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில் துறவி வாயிலார் நாயனாரின் முக்தி தினம் இன்று கொண்டாடப்பட்டது. இதன் சிறப்பு என்னவென்றால் ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டு கோவில் திறக்கப்பட்ட பிறகு நடைபெற்ற முதல் அபிஷேகம், அதே போல் இந்த நிகழ்வில் பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனர். வாயிலார் நாயன்மார் மயிலாப்பூரில் பிறந்ததாக கருதப்படுகிறது.
கடந்த முப்பது வருடங்களாக இந்த விழாவினை 1946-ல் ஆரம்பிக்கப்பட்ட பூந்தமல்லி உயிர் துளுவ வேளாள மரபினர் சங்கத்தினர் கொண்டாடி வருகின்றனர். இந்த சங்கத்தினர் விழா பற்றி கூறும்போது அவர்களின் மூதாதையர்கள் கபாலீஸ்வரர் கோவிலில் நூறு வருடங்களுக்கு மேலாக கோவில் வளர்ச்சிக்காக பணியாற்றி வந்ததாகவும் தற்போதும் அந்த தொடர்பு இருப்பதாகவும் எனவே இந்த வாயிலார் நாயன்மார் விழாவினை வருடந்தோறும் கொண்டாடுவதாகவும் தெரிவித்தனர்.
இன்று மாலை நாயனாரின் புஷ்ப பல்லக்கு சேவை கோவில் வளாகத்திற்குள்ளேயே நடைபெறவுள்ளது. வழக்கமாக இந்த புஷ்ப பல்லக்கு சேவை கோவிலுக்கு வெளியே மிகவும் சிறப்பாக நடைபெறும். தற்போது ஊரடங்கு விதிமுறைகளால் கோவிலுக்கு உள்ளேயே நடைபெறுகிறது.
சங்கீதாவின் 40வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில், நகரம் முழுவதும் உள்ள அதன் உணவகங்கள் இப்போது மாறி மாறி வழங்கும் சிறப்பு…
புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…
ரோட்டரி சர்வதேச மாவட்டம் 3234, இராணி மேரி கல்லூரியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகளுடன் இணைந்து பெரிய அளவிலான…
ஜூலை 2 புதன்கிழமை மாலை புனித தாமஸின் கொடியை பேராயர் ரெவ். ஜார்ஜ் அந்தோணிசாமி ஆசீர்வதித்து, பின்னர் புனித தாமஸின்…
மந்தைவெளியில் வசிப்பவர்கள், திருவேங்கடம் தெரு - தேவநாதன் தெரு மற்றும் வெங்கடகிருஷ்ணா சாலையில் தொடங்கப்பட்ட சாலை தொடர் வேலைகளை ஜி.சி.சி.…
ஆர்.ஏ.புரத்தில் உள்ள காமராஜ் சாலையில் அமைந்துள்ள சென்னை மாநகராட்சியின் அப்புறப்படுத்தப்பட்ட பொருட்களுக்கான முற்றத்தில் இன்று புதன்கிழமை (ஜூலை 2) காலை…