மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில் துறவி வாயிலார் நாயனாரின் முக்தி தினம் இன்று கொண்டாடப்பட்டது. இதன் சிறப்பு என்னவென்றால் ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டு கோவில் திறக்கப்பட்ட பிறகு நடைபெற்ற முதல் அபிஷேகம், அதே போல் இந்த நிகழ்வில் பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனர். வாயிலார் நாயன்மார் மயிலாப்பூரில் பிறந்ததாக கருதப்படுகிறது.
கடந்த முப்பது வருடங்களாக இந்த விழாவினை 1946-ல் ஆரம்பிக்கப்பட்ட பூந்தமல்லி உயிர் துளுவ வேளாள மரபினர் சங்கத்தினர் கொண்டாடி வருகின்றனர். இந்த சங்கத்தினர் விழா பற்றி கூறும்போது அவர்களின் மூதாதையர்கள் கபாலீஸ்வரர் கோவிலில் நூறு வருடங்களுக்கு மேலாக கோவில் வளர்ச்சிக்காக பணியாற்றி வந்ததாகவும் தற்போதும் அந்த தொடர்பு இருப்பதாகவும் எனவே இந்த வாயிலார் நாயன்மார் விழாவினை வருடந்தோறும் கொண்டாடுவதாகவும் தெரிவித்தனர்.
இன்று மாலை நாயனாரின் புஷ்ப பல்லக்கு சேவை கோவில் வளாகத்திற்குள்ளேயே நடைபெறவுள்ளது. வழக்கமாக இந்த புஷ்ப பல்லக்கு சேவை கோவிலுக்கு வெளியே மிகவும் சிறப்பாக நடைபெறும். தற்போது ஊரடங்கு விதிமுறைகளால் கோவிலுக்கு உள்ளேயே நடைபெறுகிறது.
‘பசுமை பயணம்’ என்ற கருப்பொருளில் நடத்தப்படும் மாரத்தான் சைக்கிள் ஓட்டுதல் முயற்சியின் இறுதி நிகழ்வு நவம்பர் 20, காலை 11.30…
மயிலாப்பூர், பஜார் சாலையில் உள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர் தெரு நாயை அடித்துக் கொன்றதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஸ்டேஷன்…
ஆர்.ஏ. புரத்தில் உள்ள துர்காபாய் தேஷ்முக் பொது மருத்துவமனை நவம்பர் 18 அன்று காலை 8.30 மணி முதல் பிற்பகல்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ. தா. வேலு, விளம்பரதாரர்களால் மோசமாக ஏமாற்றப்பட்டதாகக் கூறும் மயிலாப்பூர் நிதியின் வைப்பாளர்கள் தங்கள் வழக்கை முதல்வர் அல்லது…
பாரதிய வித்யா பவனின் சென்னை கேந்திரா, நவம்பர் 20 முதல் அதன் வருடாந்திர மார்கழி இசை நிகழ்ச்சிகளை நடத்துகிறது, மேலும்…
மயிலாப்பூர் ஸ்ரீ வாலீஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேகம் நவம்பர் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்கள் குழு கோயிலை…