மயிலாப்பூர் திருவிழாவுக்கான வருடாந்திர போட்டிகள் சனிக்கிழமை மாலை தொடங்கியதையொட்டி வடக்கு மாட வீதியில் கோலங்கள் மற்றும் ரங்கோலி கோலங்கள் போட்டியாளர்களால் போடப்பட்டது.
மதியம் 3.15 மணிக்கு தொடங்கிய போட்டியில் 87 பேர் கோலத்திலும், 27 பேர் ரங்கோலியிலும் பங்கேற்றனர்.
இதில் சில ஆண்களும் சில குழந்தைகளும் அடங்குவர். புறநகர் பகுதிகளிலிருந்தும், மாவட்டங்களிலிருந்தும், பெங்களூரு, மைசூருவிலிருந்தும் வந்தவர்கள் இருந்தனர்.
போக்குவரத்து துண்டிக்கப்பட்ட இந்தத் தெருவின் கடைசியில் பொங்கலைக் கருப்பொருளாகக் கொண்ட ரங்கோலிகள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அதே நேரத்தில் புள்ளி கோலங்களும் மிகவும் அழகாக போடப்பட்டிருந்தது.
இரண்டு நபர்கள் அடங்கிய நீதிபதிகளால் வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, மாலை 5 மணியளவில் வெற்றிபெற்ற 14 பேருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
கோலம் மற்றும் ரங்கோலி போட்டிகள் ஞாயிற்றுக்கிழமையும் வடக்கு மாட வீதியில் நடைபெறும், மதியம் 2.45 மணி முதல், அந்த இடத்திலேயே பதிவு செய்யப்படும். கோலம் போட நேரம் 45 நிமிடங்கள் வழங்கப்படும்.
மயிலாப்பூர் திருவிழாவின் வீடியோக்களை https://www.youtube.com/@mylaporefestival7626 என்ற யூடியுப் தளத்தில் பார்க்கலாம்.
தொல்காப்பியப் பூங்காவின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள அடையாறு முகத்துவாரம் வற்றி வருகிறது. பூங்காவின் கிழக்குப் பகுதியிலிருந்து, அலைகளின் மூலம் வரும்…
ஸ்ரீ வேதாந்த தேசிகர் கோயிலின் மகா சம்ப்ரோக்ஷணம் (கும்பாபிஷேகம்), திங்கட்கிழமை, மார்ச் 16 அன்று காலை 9 மணி முதல்…
மயிலாப்பூர் வாரன் சாலையில் வசிக்கும் அதிதி, 2025 முதல் பாரம்பரிய நெல் வகைகளின் இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டுள்ளார். அவர் அரிசி…
அபிராமபுரத்தில் அமைந்துள்ள கேரியர் லாஞ்சர் நிறுவனம், மார்ச் 15 ஞாயிற்றுக்கிழமை மதியம் 12:30 மணிக்கு 9, 10 மற்றும் 11…
ஹோட்டல் உட்லண்ட்ஸுக்கு எதிரே உள்ள டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோல் நிரப்ப கார்கள் மற்றும் பைக்குகள்…
மயிலாப்பூர், வெங்கடேச அக்ரஹாரம் தெருவில் உள்ள ஒரு எரிவாயு நிறுவனத்திற்கு வெளியே புதன்கிழமை, மக்கள் கூட்டம் அலைமோதியது. எரிவாயு விநியோகம்…