மயிலாப்பூர் திருவிழா: சனிக்கிழமை நடைபெற்ற கோலம் மற்றும் ரங்கோலி போட்டிகளில் 114 பேர் பங்கேற்றனர்

மயிலாப்பூர் திருவிழாவுக்கான வருடாந்திர போட்டிகள் சனிக்கிழமை மாலை தொடங்கியதையொட்டி வடக்கு மாட வீதியில் கோலங்கள் மற்றும் ரங்கோலி கோலங்கள் போட்டியாளர்களால் போடப்பட்டது.

மதியம் 3.15 மணிக்கு தொடங்கிய போட்டியில் 87 பேர் கோலத்திலும், 27 பேர் ரங்கோலியிலும் பங்கேற்றனர்.

இதில் சில ஆண்களும் சில குழந்தைகளும் அடங்குவர். புறநகர் பகுதிகளிலிருந்தும், மாவட்டங்களிலிருந்தும், பெங்களூரு, மைசூருவிலிருந்தும் வந்தவர்கள் இருந்தனர்.

போக்குவரத்து துண்டிக்கப்பட்ட இந்தத் தெருவின் கடைசியில் பொங்கலைக் கருப்பொருளாகக் கொண்ட ரங்கோலிகள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அதே நேரத்தில் புள்ளி கோலங்களும் மிகவும் அழகாக போடப்பட்டிருந்தது.

இரண்டு நபர்கள் அடங்கிய நீதிபதிகளால் வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, மாலை 5 மணியளவில் வெற்றிபெற்ற 14 பேருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

கோலம் மற்றும் ரங்கோலி போட்டிகள் ஞாயிற்றுக்கிழமையும் வடக்கு மாட வீதியில் நடைபெறும், மதியம் 2.45 மணி முதல், அந்த இடத்திலேயே பதிவு செய்யப்படும். கோலம் போட நேரம் 45 நிமிடங்கள் வழங்கப்படும்.

மயிலாப்பூர் திருவிழாவின் வீடியோக்களை https://www.youtube.com/@mylaporefestival7626 என்ற யூடியுப் தளத்தில் பார்க்கலாம்.

admin

Recent Posts

நாகேஸ்வர ராவ் பூங்காவிற்குள் பூச்சிகளால் அரிக்கப்பட்டிருந்த சில பழமையான மரங்கள் வெட்டப்பட்டுள்ளது.

லஸ் அவென்யூவில் உள்ள நாகேஸ்வர ராவ் பூங்காவின் ஒரு பகுதி இப்போது ஒரு வறண்ட மைதானம் போல் காட்சியளிக்கிறது. செவ்வாய்க்கிழமை…

2 days ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவில் தெப்பத் திருவிழா பிப்ரவரி 1 முதல் 3 வரை

2026 ஆம் ஆண்டுக்கான ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் மூன்று நாள் தெப்பத் திருவிழா பிப்ரவரி 1 முதல் 3 வரை…

1 week ago

செயின்ட் பீட்ஸ் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு ஜனவரி 26ல் நடைபெறுகிறது.

101வது பழைய பீடியன்ஸ் அஸோஸியேஷனின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு, ஜனவரி 26 அன்று சாந்தோம், செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ-இந்தியன் மேல்நிலைப்…

1 week ago

சாய் பாபா கோவில் அருகே பொங்கலுக்கான பானைகள் விற்பனை.

உங்கள் பொங்கல் கொண்டாட்டத்திற்காக அழகாக வடிவமைக்கப்பட்ட மண்பானைகளைத் தேடுகிறீர்களா? அப்படியானால், இங்குள்ள சாய் பாபா கோவில் அருகே வெங்கடேச அக்ரஹாரம்…

2 weeks ago

சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா. ஜனவரி 8 முதல் 11 வரை.

மயிலாப்பூரில் வருடந்தோறும் ஜனவரி தொடக்கத்தில் நடைபெறும் சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா ஜனவரி 8 ம் தேதி காலை 7…

3 weeks ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற கார்த்திகை தீப விழாவில் ஏராளமான மக்கள் பங்கேற்றனர்.

மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை (டிசம்பர் 4) கார்த்திகை தீப விழா தொடங்கிய நேரத்தில், லேசான,…

2 months ago