மயிலாப்பூர் திருவிழாவுக்கான வருடாந்திர போட்டிகள் சனிக்கிழமை மாலை தொடங்கியதையொட்டி வடக்கு மாட வீதியில் கோலங்கள் மற்றும் ரங்கோலி கோலங்கள் போட்டியாளர்களால் போடப்பட்டது.
மதியம் 3.15 மணிக்கு தொடங்கிய போட்டியில் 87 பேர் கோலத்திலும், 27 பேர் ரங்கோலியிலும் பங்கேற்றனர்.
இதில் சில ஆண்களும் சில குழந்தைகளும் அடங்குவர். புறநகர் பகுதிகளிலிருந்தும், மாவட்டங்களிலிருந்தும், பெங்களூரு, மைசூருவிலிருந்தும் வந்தவர்கள் இருந்தனர்.
போக்குவரத்து துண்டிக்கப்பட்ட இந்தத் தெருவின் கடைசியில் பொங்கலைக் கருப்பொருளாகக் கொண்ட ரங்கோலிகள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அதே நேரத்தில் புள்ளி கோலங்களும் மிகவும் அழகாக போடப்பட்டிருந்தது.
இரண்டு நபர்கள் அடங்கிய நீதிபதிகளால் வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, மாலை 5 மணியளவில் வெற்றிபெற்ற 14 பேருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
கோலம் மற்றும் ரங்கோலி போட்டிகள் ஞாயிற்றுக்கிழமையும் வடக்கு மாட வீதியில் நடைபெறும், மதியம் 2.45 மணி முதல், அந்த இடத்திலேயே பதிவு செய்யப்படும். கோலம் போட நேரம் 45 நிமிடங்கள் வழங்கப்படும்.
மயிலாப்பூர் திருவிழாவின் வீடியோக்களை https://www.youtube.com/@mylaporefestival7626 என்ற யூடியுப் தளத்தில் பார்க்கலாம்.
ஆர்.ஏ. புரத்தில் உள்ள இயற்கை காப்பகமான தொல்காப்பியா பூங்கா முறையாக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 24 வெள்ளிக்கிழமை காலை டி.ஜி.எஸ்.…
மந்தைவெளி தபால் நிலையத்திற்கு அருகிலுள்ள ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய விசாலமான மருந்தகத்தில்…
‘கலா உத்சவ்’ என்பது அக்டோபர் 19 வரை ஆழ்வார்பேட்டை கடையில் நடைபெறும் கைவினைக் கண்காட்சி மற்றும் விற்பனை ஆகும். இது…
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் சங்கம் (RAPRA) சில ஆண்டுகளாக இந்த சுற்றுப்புறத்தில் உள்ள சென்னை பள்ளிகள் மற்றும் அரசு உதவி…
ஆழ்வார்பேட்டை காந்தி அமைதி அறக்கட்டளை தனது அலுவலக வளாகத்தில், வரும் அக்டோபர் 2-ஆம் தேதி (மகாத்மா காந்தியின் 156-ஆம் ஜெயந்தியை…
இந்து சமய அறநிலையத்துறை விவகாரங்களுக்கான மாநில அமைச்சர் பி.கே. சேகர் பாபு, செப்டம்பர் 22 மாலை மயிலாப்பூர் வெங்கடேச அக்ரஹாரத்…