மயிலாப்பூர் திருவிழாவுக்கான வருடாந்திர போட்டிகள் சனிக்கிழமை மாலை தொடங்கியதையொட்டி வடக்கு மாட வீதியில் கோலங்கள் மற்றும் ரங்கோலி கோலங்கள் போட்டியாளர்களால் போடப்பட்டது.
மதியம் 3.15 மணிக்கு தொடங்கிய போட்டியில் 87 பேர் கோலத்திலும், 27 பேர் ரங்கோலியிலும் பங்கேற்றனர்.
இதில் சில ஆண்களும் சில குழந்தைகளும் அடங்குவர். புறநகர் பகுதிகளிலிருந்தும், மாவட்டங்களிலிருந்தும், பெங்களூரு, மைசூருவிலிருந்தும் வந்தவர்கள் இருந்தனர்.
போக்குவரத்து துண்டிக்கப்பட்ட இந்தத் தெருவின் கடைசியில் பொங்கலைக் கருப்பொருளாகக் கொண்ட ரங்கோலிகள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அதே நேரத்தில் புள்ளி கோலங்களும் மிகவும் அழகாக போடப்பட்டிருந்தது.
இரண்டு நபர்கள் அடங்கிய நீதிபதிகளால் வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, மாலை 5 மணியளவில் வெற்றிபெற்ற 14 பேருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
கோலம் மற்றும் ரங்கோலி போட்டிகள் ஞாயிற்றுக்கிழமையும் வடக்கு மாட வீதியில் நடைபெறும், மதியம் 2.45 மணி முதல், அந்த இடத்திலேயே பதிவு செய்யப்படும். கோலம் போட நேரம் 45 நிமிடங்கள் வழங்கப்படும்.
மயிலாப்பூர் திருவிழாவின் வீடியோக்களை https://www.youtube.com/@mylaporefestival7626 என்ற யூடியுப் தளத்தில் பார்க்கலாம்.
ஆர்.ஏ. புரத்தில் ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான பரந்த நிலப்பகுதியின் பெரும்பகுதி சமப்படுத்தப்பட்டு, புதிய மருத்துவமனை ஒன்றை அமைப்பதற்கான பணிகள்…
E1 மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று வாராந்திர குறைகேட்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காவல் உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மற்றும்…
மெரினா கடற்கரையில் மற்றொரு 'ப்ளூ ஃபிளாக்' பகுதிக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது கலங்கரை விளக்கத்திற்கு அருகிலும், காமராஜர்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ.-வும் மாநில அமைச்சருமான பி. வெங்கடரமணன், ஆழ்வார்பேட்டையில் தனது அலுவலகத்தைத் திறந்ததிலிருந்து, அப்பகுதி மக்கள், சமூகத் தலைவர்கள் மற்றும்…
இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…
இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…