மயிலாப்பூர் திருவிழாவில் – உணவு, குழந்தைகளுக்கு, கோவில்கள் மற்றும் பாரம்பரிய வீடுகள் பற்றிய நான்கு நடை பயணங்கள் உள்ளது.

சுந்தரம் பைனான்ஸ் மயிலாப்பூர் திருவிழாவின் 2023 பதிப்பிற்காக நான்கு நடை பயணங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இவை அனைத்தும் இலவசம் மற்றும் அனைவரும் வரலாம். முன் பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

ஜனவரி 7 சனிக்கிழமை, மாலை 4 மணி; உணவு நடைபயணம். தொடங்கும் இடம் – இந்தியன் வங்கி வாயில், வடக்கு மாட வீதி; நடை பயணம் புதிய சிற்றுண்டி கடைகளை நோக்கி இருக்கும். ஸ்ரீதர் வெங்கடராமன் தலைமையில் நடைபெறுகிறது. இலவசம். நீங்கள் சாப்பிடுவதற்கு நீங்களே பணம் செலுத்தவேண்டும். நடைபயண நேரம்: 60 நிமிடங்கள்.

ஜனவரி 7, சனிக்கிழமை, மாலை 4 மணி – குழந்தைகளுக்கு கோயில்கள் பற்றிய ஆய்வுகள் – பிரதீப் சக்கரவர்த்தி தலைமையில். ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் உள்ளே. நவராத்திரி மண்டபத்தில் நடைபெறும். குழந்தைகள் எழுதுவதற்கு , காகிதத் தாள்கள் மற்றும் வண்ண பென்சில்கள் ஆகியவற்றைக் கொண்டு வர வேண்டும். பதிவு தேவையில்லை. இலவசம். நடைபயண நேரம்: 60 நிமிடங்கள்.

ஜனவரி 8 ஞாயிறு, காலை 7 மணி – மயிலாப்பூரின் மூன்று கோவில்கள். டாக்டர் சித்ரா மாதவன் தலைமையில். தொடங்கும் இடம் – ஸ்பேஸ் ஆப். ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் கிழக்கு கோபுரம். ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில், ஸ்ரீ ஆதி கேசவப் பெருமாள் கோயில் மற்றும் ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில் ஆகியவற்றை இந்த நடைபயணம் உள்ளடக்கியது. பதிவு தேவையில்லை. இலவசம். நேரம்: 90 நிமிடங்கள்.

ஜனவரி 8 ஞாயிறு, காலை 7.30 மணி – மயிலாப்பூரின் கிளாசிக் பழைய வீடுகள். ஷாலினி ரவிக்குமார் தலைமையில் நடைபெறவுள்ளது. தொடக்க இடம் – அம்பிகா அப்பளம் கடை, வடக்கு மாட வீதி, மயிலாப்பூர். இலவசம். பதிவு தேவை இல்லை. நேரம்: 75 நிமிடங்கள்

அனைத்து நிகழ்வுகள் பற்றிய மேலும் தகவலுக்கு www.mylaporefestival.in இணையதளத்திற்கு செல்லவும்.

admin

Recent Posts

பங்குனி திருவிழா 2026: கிராம தேவதைக்கு பூஜை

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் பங்குனி திருவிழாவிற்கான முக்கிய பூஜை இது. இது ஒரு நீண்ட பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது. விழாவை சிறப்பாக…

21 hours ago

ஈகை பெருநாள் தொழுகை நேரத்தில் நிரம்பிய மசூதிகள்.

நீண்ட ரமலான் மாதத்திற்குப் பிறகு கொண்டாடப்படும் ஈகைத் திருநாள் பண்டிகையை முன்னிட்டு, இந்த சனிக்கிழமை காலை மயிலாப்பூர் பகுதியில் உள்ள…

2 days ago

‘இணையக் குற்றங்களில் பண இழப்பு: தடுப்பு முறைகளும் பாதுகாப்பு நடவடிக்கைகளும்’ – ஒரு காவல்துறை அதிகாரியின் உரை. மார்ச் 21ல்

'இணையக் குற்றங்களில் பண இழப்பு: தடுப்பு முறைகளும் பாதுகாப்பு நடவடிக்கைகளும்' – இதுவே, 'சென்னை ஃப்ரெண்ட்ஸ் ஃபோரம்' (Chennai Friends…

4 days ago

நந்தலாலா மருத்துவ அறக்கட்டளை சார்பில் மருத்துவ முகாம். மார்ச் 22.

நந்தலாலா மருத்துவ அறக்கட்டளையின் சார்பில் மார்ச் 22 அன்று காலை 9:30 மணி முதல் பிற்பகல் 12:30 மணி வரை…

4 days ago

உள்ளூர் தபால் நிலையங்களில் ஸ்பீட் போஸ்ட் (Speed ​​Post) வழங்கும் புதிய சேவைகள். முக்கிய நகரங்களுக்கு 24 மணி நேரத்தில் விநியோகம்.

ஸ்பீடு போஸ்ட் மூலம் பதிவு செய்யப்படும் கடிதங்கள் அல்லது உறைகள், முக்கிய நகரங்களுக்கு 24 மணி நேரத்திற்குள் விநியோகிக்கப்படும் என்று…

5 days ago

ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஆலய மகா சம்ப்ரோக்ஷணம் சிறப்பாக நடைபெற்றது.

மயிலாப்பூரில் அமைந்துள்ள ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஆலயத்தின் மகா சம்ப்ரோக்ஷணம் (குடமுழக்கு விழா), திங்கள்கிழமை, மார்ச் 16 அன்று காலை…

7 days ago