சுந்தரம் பைனான்ஸ் மயிலாப்பூர் திருவிழாவின் 2023 பதிப்பிற்காக நான்கு நடை பயணங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இவை அனைத்தும் இலவசம் மற்றும் அனைவரும் வரலாம். முன் பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
ஜனவரி 7 சனிக்கிழமை, மாலை 4 மணி; உணவு நடைபயணம். தொடங்கும் இடம் – இந்தியன் வங்கி வாயில், வடக்கு மாட வீதி; நடை பயணம் புதிய சிற்றுண்டி கடைகளை நோக்கி இருக்கும். ஸ்ரீதர் வெங்கடராமன் தலைமையில் நடைபெறுகிறது. இலவசம். நீங்கள் சாப்பிடுவதற்கு நீங்களே பணம் செலுத்தவேண்டும். நடைபயண நேரம்: 60 நிமிடங்கள்.
ஜனவரி 7, சனிக்கிழமை, மாலை 4 மணி – குழந்தைகளுக்கு கோயில்கள் பற்றிய ஆய்வுகள் – பிரதீப் சக்கரவர்த்தி தலைமையில். ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் உள்ளே. நவராத்திரி மண்டபத்தில் நடைபெறும். குழந்தைகள் எழுதுவதற்கு , காகிதத் தாள்கள் மற்றும் வண்ண பென்சில்கள் ஆகியவற்றைக் கொண்டு வர வேண்டும். பதிவு தேவையில்லை. இலவசம். நடைபயண நேரம்: 60 நிமிடங்கள்.
ஜனவரி 8 ஞாயிறு, காலை 7 மணி – மயிலாப்பூரின் மூன்று கோவில்கள். டாக்டர் சித்ரா மாதவன் தலைமையில். தொடங்கும் இடம் – ஸ்பேஸ் ஆப். ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் கிழக்கு கோபுரம். ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில், ஸ்ரீ ஆதி கேசவப் பெருமாள் கோயில் மற்றும் ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில் ஆகியவற்றை இந்த நடைபயணம் உள்ளடக்கியது. பதிவு தேவையில்லை. இலவசம். நேரம்: 90 நிமிடங்கள்.
ஜனவரி 8 ஞாயிறு, காலை 7.30 மணி – மயிலாப்பூரின் கிளாசிக் பழைய வீடுகள். ஷாலினி ரவிக்குமார் தலைமையில் நடைபெறவுள்ளது. தொடக்க இடம் – அம்பிகா அப்பளம் கடை, வடக்கு மாட வீதி, மயிலாப்பூர். இலவசம். பதிவு தேவை இல்லை. நேரம்: 75 நிமிடங்கள்
அனைத்து நிகழ்வுகள் பற்றிய மேலும் தகவலுக்கு www.mylaporefestival.in இணையதளத்திற்கு செல்லவும்.
சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களில் வளர்க்கப்பட்டுள்ள தாவரங்களுக்கு நீர்ப்பாசனம் செய்ய ஒரு எளிய யோசனையைக் கொண்டு வந்துள்ளது. மயிலாப்பூரில் உள்ள…
நான்கு வாரங்களுக்கும் மேலாக, மயிலாப்பூரில் உள்ள பள்ளி பள்ளிக்கூடங்களை சுற்றியுள்ள பகுதிகள் பெரிதாக பரபரப்பு ஏதும் இல்லாமல் இருந்தது. இந்த…
லயன்ஸ் கிளப் ஆஃப் மெட்ராஸ் பார்க் டவுன் அறக்கட்டளை, 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளில் பயிலும் ஏழை மாணவர்களுக்கு…
மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோயிலின் வருடாந்திர வைகாசி விழா தொடங்கியது. ஜூன் 2 ஆம் தேதி காலை, ஏராளமான…
கேசவபெருமாள்புரம், கிரீன்வேஸ் சாலை, ஆர்.ஏ. புரம், ஸ்ரீ சக்தி விநாயகர் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் அன்ன பாவடை விழா சமீபத்தில்…
ஆர்.ஏ.புரத்தில் உள்ள தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியின் (தமிழ்நாடு டாக்டர். ஜே. ஜெயலலிதா இசை மற்றும் கலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது)…