மயிலாப்பூர் திருவிழாவில் – உணவு, குழந்தைகளுக்கு, கோவில்கள் மற்றும் பாரம்பரிய வீடுகள் பற்றிய நான்கு நடை பயணங்கள் உள்ளது.

சுந்தரம் பைனான்ஸ் மயிலாப்பூர் திருவிழாவின் 2023 பதிப்பிற்காக நான்கு நடை பயணங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இவை அனைத்தும் இலவசம் மற்றும் அனைவரும் வரலாம். முன் பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

ஜனவரி 7 சனிக்கிழமை, மாலை 4 மணி; உணவு நடைபயணம். தொடங்கும் இடம் – இந்தியன் வங்கி வாயில், வடக்கு மாட வீதி; நடை பயணம் புதிய சிற்றுண்டி கடைகளை நோக்கி இருக்கும். ஸ்ரீதர் வெங்கடராமன் தலைமையில் நடைபெறுகிறது. இலவசம். நீங்கள் சாப்பிடுவதற்கு நீங்களே பணம் செலுத்தவேண்டும். நடைபயண நேரம்: 60 நிமிடங்கள்.

ஜனவரி 7, சனிக்கிழமை, மாலை 4 மணி – குழந்தைகளுக்கு கோயில்கள் பற்றிய ஆய்வுகள் – பிரதீப் சக்கரவர்த்தி தலைமையில். ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் உள்ளே. நவராத்திரி மண்டபத்தில் நடைபெறும். குழந்தைகள் எழுதுவதற்கு , காகிதத் தாள்கள் மற்றும் வண்ண பென்சில்கள் ஆகியவற்றைக் கொண்டு வர வேண்டும். பதிவு தேவையில்லை. இலவசம். நடைபயண நேரம்: 60 நிமிடங்கள்.

ஜனவரி 8 ஞாயிறு, காலை 7 மணி – மயிலாப்பூரின் மூன்று கோவில்கள். டாக்டர் சித்ரா மாதவன் தலைமையில். தொடங்கும் இடம் – ஸ்பேஸ் ஆப். ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் கிழக்கு கோபுரம். ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில், ஸ்ரீ ஆதி கேசவப் பெருமாள் கோயில் மற்றும் ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில் ஆகியவற்றை இந்த நடைபயணம் உள்ளடக்கியது. பதிவு தேவையில்லை. இலவசம். நேரம்: 90 நிமிடங்கள்.

ஜனவரி 8 ஞாயிறு, காலை 7.30 மணி – மயிலாப்பூரின் கிளாசிக் பழைய வீடுகள். ஷாலினி ரவிக்குமார் தலைமையில் நடைபெறவுள்ளது. தொடக்க இடம் – அம்பிகா அப்பளம் கடை, வடக்கு மாட வீதி, மயிலாப்பூர். இலவசம். பதிவு தேவை இல்லை. நேரம்: 75 நிமிடங்கள்

அனைத்து நிகழ்வுகள் பற்றிய மேலும் தகவலுக்கு www.mylaporefestival.in இணையதளத்திற்கு செல்லவும்.

admin

Recent Posts

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற கார்த்திகை தீப விழாவில் ஏராளமான மக்கள் பங்கேற்றனர்.

மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை (டிசம்பர் 4) கார்த்திகை தீப விழா தொடங்கிய நேரத்தில், லேசான,…

2 weeks ago

மந்தைவெளியில் ஜனவரி 2026ல் கோலப் போட்டி: இப்போதே பதிவு செய்யுங்கள்

மந்தைவெளி ராஜா தெரு குடியிருப்பாளர்கள் நலச் சங்கம் அதன் பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக “ஊடக உலகம்” என்ற கருப்பொருளை…

2 weeks ago

‘பசுமை பயணம்’ மாநில அளவிலான சைக்கிள் பிரச்சாரம் சாந்தோமில் முடிவடைகிறது.

‘பசுமை பயணம்’ என்ற கருப்பொருளில் நடத்தப்படும் மாரத்தான் சைக்கிள் ஓட்டுதல் முயற்சியின் இறுதி நிகழ்வு நவம்பர் 20, காலை 11.30…

4 weeks ago

தெரு நாயை அடித்து கொன்ற டீக்கடை உரிமையாளர் கைது.

மயிலாப்பூர், பஜார் சாலையில் உள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர் தெரு நாயை அடித்துக் கொன்றதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஸ்டேஷன்…

4 weeks ago

துர்காபாய் தேஷ்முக் பொது மருத்துவமனையில் இலவச மருத்துவ பரிசோதனை முகாம். நவம்பர் 18ல்

ஆர்.ஏ. புரத்தில் உள்ள துர்காபாய் தேஷ்முக் பொது மருத்துவமனை நவம்பர் 18 அன்று காலை 8.30 மணி முதல் பிற்பகல்…

1 month ago

மயிலாப்பூர் இந்து நிரந்தர நிதியம் விவகாரம்: மயிலாப்பூர் எம்.எல்.ஏ., வைப்பாளர்களின் பிரச்சினைகளை அரசாங்கத்திடம் தெரிவிப்பதாக உறுதியளித்துள்ளார்.

மயிலாப்பூர் எம்.எல்.ஏ. தா. வேலு, விளம்பரதாரர்களால் மோசமாக ஏமாற்றப்பட்டதாகக் கூறும் மயிலாப்பூர் நிதியின் வைப்பாளர்கள் தங்கள் வழக்கை முதல்வர் அல்லது…

1 month ago