செய்திகள்

மயிலாப்பூர் எம்.எல்.ஏ தொகுதியில் மூன்று முக்கிய திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுத்து செயல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கிறார்.

மயிலாப்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தற்போது மூன்று முக்கிய விஷயங்களுக்கு முக்கியத்துவம் அளித்து செயல்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளார். அதில் ஒன்று சாந்தோம் பகுதியில் உள்ள பழமையான கட்டிடங்களை இடித்து புதுபிப்பது. டூமிங்க் குப்பம் பகுதியில் உள்ள பழமையான கட்டிடங்களை இடித்து கட்ட திட்டங்கள் வகுக்கும் போது சில பிரச்சனைகள் வந்ததாக தெரிவித்துள்ளார். குடிசை மாற்று வாரியம் வீடுகளை இடிக்கும் போது அங்கு வசித்து வரும் மக்களுக்கு வீடுகள் கொடுப்பது மற்றும் அங்கு ஆக்கிரமித்து கட்டியிருக்கும் வீடுகளில் குடியிருப்பவர்களுக்கு வீடுகள் வழங்குவது போன்றவற்றில் பிரச்சனைகள் வந்ததாகவும் பின்னர் அவர்களுக்கும் வீடுகள் வழங்க குடிசைமாற்று வாரியம் ஒப்புக்கொண்டதாகவும் தெரிவித்தார். ஆனால் இவர்கள் அனைவருக்கும் ஒரே இடத்தில் வீடுகள் வழங்க சுமார் பதினான்கு மாடி கட்டிடம் கட்ட வேண்டும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் பதினான்கு மாடி கட்டிடம் கட்டினால் தானியங்கி இயந்திர பிரச்சனை மற்றும் இதுபோன்று வேறு சில பிரச்சனைகள் வரும் என்று மக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக விரைவில் தீர்வு காணப்பட்டு பணிகள் தொடங்க ஏற்பாடு செய்யப்படும் என்று எம்.எல்.ஏ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாவதாக மயிலாப்பூர் பகுதியில் உள்ள அனைத்து கோவில்களிலும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும், பக்கதர்களுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்க இந்து அறநிலையத்துறை அமைச்சரிடம் பேசி பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்றாவது பீமனப்பேட்டையிலுள்ள சென்னை மாநகராட்சியின் மேல்நிலைப்பள்ளியில் வகுப்பறைகள் மற்றும் அனைத்து வசதிகள் இருந்தாலும் இங்கு கல்வி பயில வரும் மாணவர்கள் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. ஆகவே இங்கு முதலில் மாணவர் சேர்க்கைக்கான வேலைகளை செய்யவும். மற்றும் ஆரம்ப கல்வி பயில தேவையான அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

admin

Recent Posts

பெண் குழந்தைகளை ஆதரிக்கும் சேமிப்புத் திட்டத்தை பிரபலப்படுத்த மயிலாப்பூர் தபால் அலுவலகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

மயிலாப்பூர், கச்சேரி சாலையில் உள்ள மயிலாப்பூர் தபால் நிலையத்தில் பிப்ரவரி 21 அன்று ஒரு பரபரப்பு ஏற்பட்டது; இங்குள்ள ஊழியர்கள்…

1 month ago

ஆர்.ஏ.புரம் கல்யாண மண்டபத்தில் 30 ஜோடிகளுக்கு ‘சுயமரியாதை கல்யாணம்’ நடத்திய தி.மு.க.

ஆர்.ஏ.புரத்தில் உள்ள கபாலீஸ்வரர் - கற்பகாம்பாள் கல்யாண மண்டபத்தில் கடந்த வாரம் 30 ஜோடிகளுக்கு திருமண ஏற்பாடுகளை தமிழக இந்து…

2 months ago

சென்னை மெட்ரோ: ஆர்.எச். சாலையில் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன

சென்னை மெட்ரோ தொடர்பான பணிகளுக்காக மயிலாப்பூர் ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் சிறிய மாற்றங்கள் தொடர்ந்து செய்யப்படுகின்றன. சமீபத்தில், சமஸ்கிருதக் கல்லூரிக்கு வெளியே…

2 months ago

சிட்டி சென்டர் மாலில் பாட்டில் ஆர்ட் வேடிக்கை நிகழ்ச்சி. பிப்ரவரி 16 வரை.

மயிலாப்பூரில் இந்த வார இறுதியில் சிட்டி சென்டர் மாலில் நீங்கள் இருந்தால், இந்த ஷாப்பிங் மாலின் தரை தளத்தில் நடைபெறும்…

2 months ago

மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ காஞ்சி மகா பெரியவா ஆலயத்தின் மஹாகும்பாபிஷேகம் நடைபெற்றது.

மயிலாப்பூரில் பிப்ரவரி 10 அன்று நடைபெற்ற ஸ்ரீ காஞ்சி மகா பெரியவா ஆலயத்தின் மஹாகும்பாபிஷேகம், ஒரு அறக்கட்டளை, அதன் ஆதரவாளர்கள்…

2 months ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் தெப்ப விழா; கோயில் குளத்திற்குள் பணிகள் தொடங்கியது.

மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் தைப்பூச விழாவிற்கான தெப்பம் அமைக்கும் பணி வியாழக்கிழமை (பிப்ரவரி 6) காலை தொடங்கியது. டஜன்…

2 months ago