மயிலாப்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தற்போது மூன்று முக்கிய விஷயங்களுக்கு முக்கியத்துவம் அளித்து செயல்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளார். அதில் ஒன்று சாந்தோம் பகுதியில் உள்ள பழமையான கட்டிடங்களை இடித்து புதுபிப்பது. டூமிங்க் குப்பம் பகுதியில் உள்ள பழமையான கட்டிடங்களை இடித்து கட்ட திட்டங்கள் வகுக்கும் போது சில பிரச்சனைகள் வந்ததாக தெரிவித்துள்ளார். குடிசை மாற்று வாரியம் வீடுகளை இடிக்கும் போது அங்கு வசித்து வரும் மக்களுக்கு வீடுகள் கொடுப்பது மற்றும் அங்கு ஆக்கிரமித்து கட்டியிருக்கும் வீடுகளில் குடியிருப்பவர்களுக்கு வீடுகள் வழங்குவது போன்றவற்றில் பிரச்சனைகள் வந்ததாகவும் பின்னர் அவர்களுக்கும் வீடுகள் வழங்க குடிசைமாற்று வாரியம் ஒப்புக்கொண்டதாகவும் தெரிவித்தார். ஆனால் இவர்கள் அனைவருக்கும் ஒரே இடத்தில் வீடுகள் வழங்க சுமார் பதினான்கு மாடி கட்டிடம் கட்ட வேண்டும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் பதினான்கு மாடி கட்டிடம் கட்டினால் தானியங்கி இயந்திர பிரச்சனை மற்றும் இதுபோன்று வேறு சில பிரச்சனைகள் வரும் என்று மக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக விரைவில் தீர்வு காணப்பட்டு பணிகள் தொடங்க ஏற்பாடு செய்யப்படும் என்று எம்.எல்.ஏ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாவதாக மயிலாப்பூர் பகுதியில் உள்ள அனைத்து கோவில்களிலும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும், பக்கதர்களுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்க இந்து அறநிலையத்துறை அமைச்சரிடம் பேசி பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்றாவது பீமனப்பேட்டையிலுள்ள சென்னை மாநகராட்சியின் மேல்நிலைப்பள்ளியில் வகுப்பறைகள் மற்றும் அனைத்து வசதிகள் இருந்தாலும் இங்கு கல்வி பயில வரும் மாணவர்கள் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. ஆகவே இங்கு முதலில் மாணவர் சேர்க்கைக்கான வேலைகளை செய்யவும். மற்றும் ஆரம்ப கல்வி பயில தேவையான அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…
இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…
மந்தைவெளி, ஆர்.கே. நகரில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசித் திட்டத்திற்கான சேவையை மேலும்…
மயிலாப்பூர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர். நடராஜ் அதிகாரப்பூர்வமாக த.வெ.க (TVK) கட்சியில் இணைந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…
மயிலாப்பூர் இந்து பர்மனன்ட் பண்ட் விவகாரம்: வைப்புதாரர்கள் எம்.எல்.ஏ.விடம் முக்கிய கோரிக்கைகள்: தமிழ்நாடு காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு (EOW) தாமதமாகி…
மயிலாப்பூரில் உள்ள இராணி மேரி கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில், கவனம் பெற வேண்டிய சில சிறப்புப்…