செய்திகள்

மயிலாப்பூர் எம்.எல்.ஏ தொகுதியில் மூன்று முக்கிய திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுத்து செயல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கிறார்.

மயிலாப்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தற்போது மூன்று முக்கிய விஷயங்களுக்கு முக்கியத்துவம் அளித்து செயல்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளார். அதில் ஒன்று சாந்தோம் பகுதியில் உள்ள பழமையான கட்டிடங்களை இடித்து புதுபிப்பது. டூமிங்க் குப்பம் பகுதியில் உள்ள பழமையான கட்டிடங்களை இடித்து கட்ட திட்டங்கள் வகுக்கும் போது சில பிரச்சனைகள் வந்ததாக தெரிவித்துள்ளார். குடிசை மாற்று வாரியம் வீடுகளை இடிக்கும் போது அங்கு வசித்து வரும் மக்களுக்கு வீடுகள் கொடுப்பது மற்றும் அங்கு ஆக்கிரமித்து கட்டியிருக்கும் வீடுகளில் குடியிருப்பவர்களுக்கு வீடுகள் வழங்குவது போன்றவற்றில் பிரச்சனைகள் வந்ததாகவும் பின்னர் அவர்களுக்கும் வீடுகள் வழங்க குடிசைமாற்று வாரியம் ஒப்புக்கொண்டதாகவும் தெரிவித்தார். ஆனால் இவர்கள் அனைவருக்கும் ஒரே இடத்தில் வீடுகள் வழங்க சுமார் பதினான்கு மாடி கட்டிடம் கட்ட வேண்டும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் பதினான்கு மாடி கட்டிடம் கட்டினால் தானியங்கி இயந்திர பிரச்சனை மற்றும் இதுபோன்று வேறு சில பிரச்சனைகள் வரும் என்று மக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக விரைவில் தீர்வு காணப்பட்டு பணிகள் தொடங்க ஏற்பாடு செய்யப்படும் என்று எம்.எல்.ஏ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாவதாக மயிலாப்பூர் பகுதியில் உள்ள அனைத்து கோவில்களிலும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும், பக்கதர்களுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்க இந்து அறநிலையத்துறை அமைச்சரிடம் பேசி பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்றாவது பீமனப்பேட்டையிலுள்ள சென்னை மாநகராட்சியின் மேல்நிலைப்பள்ளியில் வகுப்பறைகள் மற்றும் அனைத்து வசதிகள் இருந்தாலும் இங்கு கல்வி பயில வரும் மாணவர்கள் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. ஆகவே இங்கு முதலில் மாணவர் சேர்க்கைக்கான வேலைகளை செய்யவும். மற்றும் ஆரம்ப கல்வி பயில தேவையான அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

admin

Recent Posts

மெரினா லூப் சாலையில் சாலை மறியல்; மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்

பட்டினப்பாக்கத்தில் உள்ள மெரினா லூப் சாலை மற்றும் டாக்டர் டி.ஜி.எஸ்.தினகரன் சாலை சந்திப்பில் வெள்ளிக்கிழமை சாலை மறியல் சம்பவம் நடந்தது,…

9 hours ago

இளைஞர்களுக்கான புகைப்பட பயிற்சி முகாம் இன்று தொடங்குகிறது. இதை மயிலாப்பூர் எம்எல்ஏ துவக்கி வைக்கிறார்.

மயிலாப்பூர் எம்.எல்.ஏ., தா.வேலு, ஆண்டுதோறும் நடத்துவது போல், இன்று, மே 4 முதல், இளைஞர்களுக்கான ‘புகைப்பட பயிற்சி முகாமை துவக்கி…

1 day ago

மயிலாப்பூரில் நடைபெற்ற மகாராஷ்டிர தின நிகழ்ச்சியில் மாநில ஆளுநர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்

மகாராஷ்டிர சங்கம் சென்னை மயிலாப்பூரில் உள்ள சமஸ்கிருத கல்லூரி ஆடிட்டோரியத்தில் சத்ரபதி சிவாஜி ஜெயந்தி மற்றும் மகாராஷ்டிரா தினத்தை மே…

3 days ago

எம்.எல்.ஏ., ஸ்பான்சர்களுடன் சேர்ந்து, பெண்களுக்கான இலவச தையல் பயிற்சி முகாமை நடத்துகிறார்.

மயிலாப்பூரில் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் சுமார் 30 பெண்கள் தற்போது மந்தைவெளிப்பாக்கத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் இலவச தையல் பயிற்சி…

3 days ago

கோலங்கள் பற்றிய விரிவுரை. ஆர்.ஏ.புரத்தில் உள்ள கம்யூனிட்டி கிளப் நடத்தியது

சிஐடி காலனியில் வசிக்கும் ஆராய்ச்சியாளரும் கோலங்கள் குறித்த நிபுணருமான டாக்டர் காயத்ரி சங்கர்நாராயணன், சமீபத்தில் ஆர் ஏ புரம் நண்பர்கள்…

4 days ago

சாந்தோமில் உள்ள சிஎஸ்ஐ செயிண்ட் தாமஸ் தமிழ் தேவாலயத்தில் விடுமுறை பைபிள் பள்ளி

சாந்தோமில் உள்ள சிஎஸ்ஐ செயின்ட் தாமஸ் தமிழ் தேவாலயத்தில் ஏப்ரல் 26 முதல் மே 5 வரை விடுமுறை பைபிள்…

4 days ago