மீண்டும் ஆறாத குட்டையாக மாறிய நாகேஸ்வரராவ் பூங்கா

நாகேஸ்வரராவ் பூங்கா முதலில் இருந்த குட்டையாக போல் மாறியது. ஆனால், தற்போது தண்ணீர் மெதுவாக வடிந்து வருகிறது.

ஞாயிற்றுக்கிழமை இரவு மழை பெய்ய தொடங்கியதிலிருந்து ஆங்காங்கே தண்ணீர் தேங்க ஆரம்பித்தது. பூங்காவிற்கு, அருகில் உள்ள தெருக்களிலிருந்தும் தண்ணீர் வந்தது. பின்னர் முழு பூங்காவிலும் மழை நீர் தேங்கியது.

இந்த பசுமையான பூங்காவை பல ஆண்டுகளாக கவனித்து வரும் சுந்தரம் ஃபைனான்ஸின் தோட்டக்கலை நிறுவனத்தின் தலைவர் வித்யா, மழைநீர் நிரம்பியதால் தனது தொழிலாளர்களால் எதுவும் செய்ய முடியவில்லை என்று கூறுகிறார்.

இங்கே பயன்படுத்தப்பட்ட புகைப்படம் அவரது குழுவால் பகிரப்பட்டது.

இந்த பூங்கா மிக மோசமான வானிலையை கண்டுள்ளது. இது கிட்டத்தட்ட ஒரே ஒரு சூறாவளியில் முற்றிலும் சேதமடைந்தது. மேலும் மிகுந்த கவனிப்புடன் மீட்டெடுக்கப்பட்டு பசுமையாக உள்ளது.

இந்த இடம் இயற்கையாக ‘குட்டை’ இடமாக இருந்ததால், மழை எப்பொழுது அதிகமாக பொழிந்தாலும் பூங்கா நிரம்பும் என வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மேலும் இந்த குட்டையை ‘ஆராத குட்டை’ என்று உள்ளூர்வாசிகள் அழைக்கிறார்கள்.

அருகிலிருந்த ஸ்ரீபாக் சொத்தை வாங்கிய அம்ருதாஞ்சன் தைலம் பிராண்டின் நிறுவனர் தேசோதரகா கே. நாகேஸ்வர ராவ் பந்துலு குட்டையின் ஒரு பகுதியை வைத்திருந்தார் என்றும் மற்றும் அதை பூங்காவாக மாற்ற முடிவு செய்யப்பட்டு அதை மாநகராட்சிக்கு நன்கொடையாக வழங்கினார் என்று வரலாற்றாசிரியர் வெங்கடேஷ் ராமகிருஷ்ணன் குறிப்பிடுகிறார். “மாம்பலம் குளத்திலிருந்து வரும் வெள்ளம் குட்டையில் பாய்ந்து, பின்னர் பி.எஸ். பள்ளி வளாகத்திற்குள் செல்லும்” என்று வெங்கடேஷ் குறிப்பிடுகிறார்.

இந்த வார இறுதியில் சூரியன் பிரகாசித்தாலும், நடைபாதைகள் சேறும் சகதியுமாக உள்ளது எனவே – நடைபயிற்சி மேற்கொள்பவர்கள் பூங்காவைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

admin

Recent Posts

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவில் தெப்பத் திருவிழா பிப்ரவரி 1 முதல் 3 வரை

2026 ஆம் ஆண்டுக்கான ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் மூன்று நாள் தெப்பத் திருவிழா பிப்ரவரி 1 முதல் 3 வரை…

2 days ago

செயின்ட் பீட்ஸ் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு ஜனவரி 26ல் நடைபெறுகிறது.

101வது பழைய பீடியன்ஸ் அஸோஸியேஷனின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு, ஜனவரி 26 அன்று சாந்தோம், செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ-இந்தியன் மேல்நிலைப்…

2 days ago

சாய் பாபா கோவில் அருகே பொங்கலுக்கான பானைகள் விற்பனை.

உங்கள் பொங்கல் கொண்டாட்டத்திற்காக அழகாக வடிவமைக்கப்பட்ட மண்பானைகளைத் தேடுகிறீர்களா? அப்படியானால், இங்குள்ள சாய் பாபா கோவில் அருகே வெங்கடேச அக்ரஹாரம்…

1 week ago

சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா. ஜனவரி 8 முதல் 11 வரை.

மயிலாப்பூரில் வருடந்தோறும் ஜனவரி தொடக்கத்தில் நடைபெறும் சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா ஜனவரி 8 ம் தேதி காலை 7…

3 weeks ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற கார்த்திகை தீப விழாவில் ஏராளமான மக்கள் பங்கேற்றனர்.

மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை (டிசம்பர் 4) கார்த்திகை தீப விழா தொடங்கிய நேரத்தில், லேசான,…

2 months ago

மந்தைவெளியில் ஜனவரி 2026ல் கோலப் போட்டி: இப்போதே பதிவு செய்யுங்கள்

மந்தைவெளி ராஜா தெரு குடியிருப்பாளர்கள் நலச் சங்கம் அதன் பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக “ஊடக உலகம்” என்ற கருப்பொருளை…

2 months ago