மீண்டும் ஆறாத குட்டையாக மாறிய நாகேஸ்வரராவ் பூங்கா

நாகேஸ்வரராவ் பூங்கா முதலில் இருந்த குட்டையாக போல் மாறியது. ஆனால், தற்போது தண்ணீர் மெதுவாக வடிந்து வருகிறது.

ஞாயிற்றுக்கிழமை இரவு மழை பெய்ய தொடங்கியதிலிருந்து ஆங்காங்கே தண்ணீர் தேங்க ஆரம்பித்தது. பூங்காவிற்கு, அருகில் உள்ள தெருக்களிலிருந்தும் தண்ணீர் வந்தது. பின்னர் முழு பூங்காவிலும் மழை நீர் தேங்கியது.

இந்த பசுமையான பூங்காவை பல ஆண்டுகளாக கவனித்து வரும் சுந்தரம் ஃபைனான்ஸின் தோட்டக்கலை நிறுவனத்தின் தலைவர் வித்யா, மழைநீர் நிரம்பியதால் தனது தொழிலாளர்களால் எதுவும் செய்ய முடியவில்லை என்று கூறுகிறார்.

இங்கே பயன்படுத்தப்பட்ட புகைப்படம் அவரது குழுவால் பகிரப்பட்டது.

இந்த பூங்கா மிக மோசமான வானிலையை கண்டுள்ளது. இது கிட்டத்தட்ட ஒரே ஒரு சூறாவளியில் முற்றிலும் சேதமடைந்தது. மேலும் மிகுந்த கவனிப்புடன் மீட்டெடுக்கப்பட்டு பசுமையாக உள்ளது.

இந்த இடம் இயற்கையாக ‘குட்டை’ இடமாக இருந்ததால், மழை எப்பொழுது அதிகமாக பொழிந்தாலும் பூங்கா நிரம்பும் என வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மேலும் இந்த குட்டையை ‘ஆராத குட்டை’ என்று உள்ளூர்வாசிகள் அழைக்கிறார்கள்.

அருகிலிருந்த ஸ்ரீபாக் சொத்தை வாங்கிய அம்ருதாஞ்சன் தைலம் பிராண்டின் நிறுவனர் தேசோதரகா கே. நாகேஸ்வர ராவ் பந்துலு குட்டையின் ஒரு பகுதியை வைத்திருந்தார் என்றும் மற்றும் அதை பூங்காவாக மாற்ற முடிவு செய்யப்பட்டு அதை மாநகராட்சிக்கு நன்கொடையாக வழங்கினார் என்று வரலாற்றாசிரியர் வெங்கடேஷ் ராமகிருஷ்ணன் குறிப்பிடுகிறார். “மாம்பலம் குளத்திலிருந்து வரும் வெள்ளம் குட்டையில் பாய்ந்து, பின்னர் பி.எஸ். பள்ளி வளாகத்திற்குள் செல்லும்” என்று வெங்கடேஷ் குறிப்பிடுகிறார்.

இந்த வார இறுதியில் சூரியன் பிரகாசித்தாலும், நடைபாதைகள் சேறும் சகதியுமாக உள்ளது எனவே – நடைபயிற்சி மேற்கொள்பவர்கள் பூங்காவைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

admin

Recent Posts

அல்போன்சா மைதானத்தில் நடைபெற்ற ‘மாஸ்டர்ஸ்’ டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்

தமிழ்நாடு மாஸ்டர்ஸ் மாநில டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பை சமீபத்தில் மந்தை வெளிப்பாக்கம் அல்போன்சா மைதானத்தில் உள்ள ஜி.சி.சி உட்புற மைதானத்தில்…

19 hours ago

தெற்கு கால்வாய் கரை சாலையில் உள்ள ஜி.சி.சி விளையாட்டு மைதானத்திற்கு புதிய சுற்றுச்சுவர் கட்டப்பட உள்ளது

மந்தைவெளிப்பாக்கம் தெற்கு கால்வாய் கரை சாலையில் உள்ள ஜி.சி.சி விளையாட்டு மைதானத்திற்கு புதிய சுற்றுச்சுவர் கட்டப்படுகிறது. (இந்த இடம் பொதுவாக…

1 day ago

சாய்பாபா கோயிலுக்கு அருகிலுள்ள கடைகள் இடிப்பு. நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் நடவடிக்கை.

மயிலாப்பூர், வெங்கடேச அக்ரஹாரம் தெருவில் உள்ள சாய்பாபா கோயில் வளாகத்தில் கட்டப்பட்ட சுமார் 30க்கும் மேற்பட்ட கடைகளை குடிமைப் பணியாளர்கள்…

2 days ago

மகளிர் தினத்தை முன்னிட்டு பல்வேறு இடங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் கடைகளில் சிறப்பு சலுகைகள்

பெண்களுக்கான யோகா இலவச அனுபவம்; அடிப்படை பயிற்சி மந்தைவெளியில் உள்ள யோகா ஃபார் வெல்னஸ் ஸ்டுடியோவில். மார்ச் 8 காலை.…

3 days ago

மயிலாப்பூர் பள்ளி மாணவர்களுக்கான ‘அமைதி கிளப்புகள்’. இறுதிப் போட்டி.

காந்தி அமைதி அறக்கட்டளை, மெட்ராஸ் சமீபத்தில் சில உள்ளூர் பகுதி பள்ளிகளில் 2025–2026 கல்வியாண்டிற்கான 'பள்ளிகளில் அமைதி கிளப்புகள்' திட்டத்தை…

1 week ago

ஆர்.ஏ.புரத்தில் நவீன நூலகம் திறக்கப்பட்டது. மாணவர்களுக்கான படிப்பு அரங்கம், குழந்தைகளுக்கான பிரிவும் உள்ளது.

ஆர்.ஏ.புரத்தில் நவீன நூலகம் முறையாகத் திறக்கப்பட்டுள்ளது. தற்போதைய திமுக அரசாங்கத்தின் 'முதல்வர் படிப்பகம்' திட்டத்தின் கீழ் இது ஒரு சிஎம்டிஏ…

1 week ago