நாகேஸ்வரராவ் பூங்கா முதலில் இருந்த குட்டையாக போல் மாறியது. ஆனால், தற்போது தண்ணீர் மெதுவாக வடிந்து வருகிறது.
ஞாயிற்றுக்கிழமை இரவு மழை பெய்ய தொடங்கியதிலிருந்து ஆங்காங்கே தண்ணீர் தேங்க ஆரம்பித்தது. பூங்காவிற்கு, அருகில் உள்ள தெருக்களிலிருந்தும் தண்ணீர் வந்தது. பின்னர் முழு பூங்காவிலும் மழை நீர் தேங்கியது.
இந்த பசுமையான பூங்காவை பல ஆண்டுகளாக கவனித்து வரும் சுந்தரம் ஃபைனான்ஸின் தோட்டக்கலை நிறுவனத்தின் தலைவர் வித்யா, மழைநீர் நிரம்பியதால் தனது தொழிலாளர்களால் எதுவும் செய்ய முடியவில்லை என்று கூறுகிறார்.
இங்கே பயன்படுத்தப்பட்ட புகைப்படம் அவரது குழுவால் பகிரப்பட்டது.
இந்த பூங்கா மிக மோசமான வானிலையை கண்டுள்ளது. இது கிட்டத்தட்ட ஒரே ஒரு சூறாவளியில் முற்றிலும் சேதமடைந்தது. மேலும் மிகுந்த கவனிப்புடன் மீட்டெடுக்கப்பட்டு பசுமையாக உள்ளது.
இந்த இடம் இயற்கையாக ‘குட்டை’ இடமாக இருந்ததால், மழை எப்பொழுது அதிகமாக பொழிந்தாலும் பூங்கா நிரம்பும் என வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மேலும் இந்த குட்டையை ‘ஆராத குட்டை’ என்று உள்ளூர்வாசிகள் அழைக்கிறார்கள்.
அருகிலிருந்த ஸ்ரீபாக் சொத்தை வாங்கிய அம்ருதாஞ்சன் தைலம் பிராண்டின் நிறுவனர் தேசோதரகா கே. நாகேஸ்வர ராவ் பந்துலு குட்டையின் ஒரு பகுதியை வைத்திருந்தார் என்றும் மற்றும் அதை பூங்காவாக மாற்ற முடிவு செய்யப்பட்டு அதை மாநகராட்சிக்கு நன்கொடையாக வழங்கினார் என்று வரலாற்றாசிரியர் வெங்கடேஷ் ராமகிருஷ்ணன் குறிப்பிடுகிறார். “மாம்பலம் குளத்திலிருந்து வரும் வெள்ளம் குட்டையில் பாய்ந்து, பின்னர் பி.எஸ். பள்ளி வளாகத்திற்குள் செல்லும்” என்று வெங்கடேஷ் குறிப்பிடுகிறார்.
இந்த வார இறுதியில் சூரியன் பிரகாசித்தாலும், நடைபாதைகள் சேறும் சகதியுமாக உள்ளது எனவே – நடைபயிற்சி மேற்கொள்பவர்கள் பூங்காவைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தமிழகத் தேர்தல்களை அடிப்படையாகக் கொண்ட இந்தக் கலந்துரையாடலின் கருப்பொருள் 'தமிழகம் 2026; இனிவரும் பாதை' என்பதாகும். இக்கலந்துரையாடல் ஏப்ரல் 17…
மயிலாப்பூரில் உள்ள இரண்டு முக்கிய இடங்களான எம்.ஆர்.டி.எஸ்-இன் முண்டக்கக்கன்னி அம்மன் கோயில் நிலையம் மற்றும் மந்தைவெளி நிலையத்தில், மின்சார இருசக்கர…
ரமண கேந்திரா அறக்கட்டளை சார்பில் ஏப்ரல் 15ம் தேதி ஸ்ரீ ரமண மகரிஷி 76வது ஆராதனை விழா, காலை 6…
10 முதல் 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்காக, எழுத்தாளர் பிரவீணா சிவராம் அவர்கள் நடத்தும் இரண்டு நாள் படைப்பு எழுத்துப் பயிலரங்கு…
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்போர் சங்கம் (RAPRA), 5 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வளர்த்தெடுக்கும் நோக்கில், 'RAPRA குழந்தைகள் மன்றம்'…
மந்தைவெளி மாரி செட்டி தெருவில் உள்ள ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவம் ஏப்ரல் 12 முதல் 21…