சிவில் சர்வீசஸ் தேர்வுகளில் பங்கேற்க உள்ள இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்க புதிய மையம்

சென்னை-மயிலாப்பூர் உயர் மறைமாவட்டம், மாநிலம் மற்றும் மத்திய அரசால் நடத்தப்படும் பொதுப்பணித் தேர்வுகளில் பங்கேற்க விரும்பும் இளைஞர்களுக்கு பயிற்சி மற்றும் வழிகாட்டுதலை வழங்குவதற்காக சாந்தோமில் ஜான் டிமான்டீ அகாடமி ஆஃப் எக்ஸலன்ஸ் என்ற அமைப்பைத் தொடங்கியுள்ளது.

இந்த அகாடமியின் படிப்புகள் முதன்மையாக கத்தோலிக்கர்களுக்கானது ஆனால் சாந்தோமில் உள்ள இந்த அகாடமியின் குறிப்பிட்ட பாடத்திட்டம் தினமும் வீட்டிலிருந்து வரும் மாணவர்கள் கத்தோலிக்கரல்லாதவர்களுக்கும் இங்கு படிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மாநில பொதுச் சேவைகள், மத்திய பொதுச் சேவைகள், இரயில்வே, காவல்துறை, காப்பீடு மற்றும் வங்கித் துறையை உள்ளடக்கிய பல்வேறு தேர்வுகளுக்குப் பயிற்சித் திட்டங்கள் மாறுபடும்.

விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் இளங்கலைப் படிப்பின் இறுதியாண்டு படித்துக் கொண்டிருக்க வேண்டும் அல்லது படிப்பில் தேர்ச்சி பெற்ற இளங்கலைப் பட்டதாரிகளாக இருக்க வேண்டும். அவர்கள் 19 – 35 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

சாந்தோம் வளாகத்தில் போர்டிங் வசதியுடன், முழுக்க முழுக்க தங்கி படிக்கும் வசதி, பகல் நேர வகுப்புகள் மற்றும் வாரயிறுதி பயிற்சி வகுப்புகள், நகரம் முழுவதும் பரவியுள்ள ஒன்பது மையங்கள் மற்றும் மறைமாவட்டத்திற்கு உட்பட்ட மண்டலங்களில் நடத்தப்படும், வார இறுதி வகுப்புகளில் கலந்து கொள்ள உள்ளூர் இளைஞர்களுக்கு இது மிகவும் உதவும்.

சிறப்பு விரிவுரைகளை வழங்கும் பல்வேறு தொழில்முறை பிரிவுகளைச் சேர்ந்த ஓய்வுபெற்ற அதிகாரிகளின் ஆதரவுடன் ஆசிரியர்கள் அடங்கிய குழு பயிற்சி அளிக்கும். அவர்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியின் மூலம் மாணவர்களின் தொகுப்பை நெருக்கமாக வழிநடத்த வழிகாட்டிகள் நியமிக்கப்படுகின்றனர்.

இந்த மையத்தின் கட்டணங்கள் மற்ற தனியார் மையங்களில் வசூலிக்கப்படும் கட்டணங்களை விட மிகவும் குறைவு. என்று இந்த மையத்தின் இயக்குநர் அருட்தந்தை அந்தோணி செபஸ்டியன் கூறுகிறார். (கிளாச்சேரி கிறிஸ்துவ கல்லூரியின் முதல்வராகப் பணியாற்றியவர்).

இளைஞர்களுக்குக் கிடைக்கும் பல்வேறு படிப்புகளைப் பற்றி அறிந்துகொள்ள இலவச, அறிமுக வகுப்புகள் இப்போது தொடங்கப்படுகின்றன, மேலும் முக்கிய படிப்புகள் இந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு மின்னஞ்சல் முகவரி – jdacademy2021@gmail.com. வலைதள முகவரி – www.jdacademyofexcellence.in

admin

Recent Posts

தமிழகத் தேர்தல் குறித்த கலந்துரையாடல். ஏப்ரல் 17 மாலை. ஆர். ஏ. புரத்தில்

தமிழகத் தேர்தல்களை அடிப்படையாகக் கொண்ட இந்தக் கலந்துரையாடலின் கருப்பொருள் 'தமிழகம் 2026; இனிவரும் பாதை' என்பதாகும். இக்கலந்துரையாடல் ஏப்ரல் 17…

3 weeks ago

மின்சார இருசக்கர வாகனங்களுக்கான பேட்டரி மாற்றும் வசதி. மந்தைவெளி, எம்.கே. அம்மன் கோயில் எம்.ஆர்.டி.எஸ் ரயில் நிலையங்களில்.

மயிலாப்பூரில் உள்ள இரண்டு முக்கிய இடங்களான எம்.ஆர்.டி.எஸ்-இன் முண்டக்கக்கன்னி அம்மன் கோயில் நிலையம் மற்றும் மந்தைவெளி நிலையத்தில், மின்சார இருசக்கர…

3 weeks ago

ஸ்ரீ ரமண மகரிஷி 76வது ஆராதனை விழா. ஏப்ரல் 15

ரமண கேந்திரா அறக்கட்டளை சார்பில் ஏப்ரல் 15ம் தேதி ஸ்ரீ ரமண மகரிஷி 76வது ஆராதனை விழா, காலை 6…

3 weeks ago

இளம் பருவத்தினருக்கான எழுத்துப் பயிலரங்குகள்.

10 முதல் 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்காக, எழுத்தாளர் பிரவீணா சிவராம் அவர்கள் நடத்தும் இரண்டு நாள் படைப்பு எழுத்துப் பயிலரங்கு…

3 weeks ago

ஆர்.ஏ.புரத்தில் குழந்தைகளுக்கான ஒரு மன்றம். இலவச நிகழ்வுகள். இப்போதே பதிவு செய்யுங்கள்.

ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்போர் சங்கம் (RAPRA), 5 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வளர்த்தெடுக்கும் நோக்கில், 'RAPRA குழந்தைகள் மன்றம்'…

4 weeks ago

ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவில் பிரம்மோற்சவம். ஏப்ரல் 12 முதல் 21 வரை

மந்தைவெளி மாரி செட்டி தெருவில் உள்ள ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவம் ஏப்ரல் 12 முதல் 21…

4 weeks ago