சிவில் சர்வீசஸ் தேர்வுகளில் பங்கேற்க உள்ள இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்க புதிய மையம்

சென்னை-மயிலாப்பூர் உயர் மறைமாவட்டம், மாநிலம் மற்றும் மத்திய அரசால் நடத்தப்படும் பொதுப்பணித் தேர்வுகளில் பங்கேற்க விரும்பும் இளைஞர்களுக்கு பயிற்சி மற்றும் வழிகாட்டுதலை வழங்குவதற்காக சாந்தோமில் ஜான் டிமான்டீ அகாடமி ஆஃப் எக்ஸலன்ஸ் என்ற அமைப்பைத் தொடங்கியுள்ளது.

இந்த அகாடமியின் படிப்புகள் முதன்மையாக கத்தோலிக்கர்களுக்கானது ஆனால் சாந்தோமில் உள்ள இந்த அகாடமியின் குறிப்பிட்ட பாடத்திட்டம் தினமும் வீட்டிலிருந்து வரும் மாணவர்கள் கத்தோலிக்கரல்லாதவர்களுக்கும் இங்கு படிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மாநில பொதுச் சேவைகள், மத்திய பொதுச் சேவைகள், இரயில்வே, காவல்துறை, காப்பீடு மற்றும் வங்கித் துறையை உள்ளடக்கிய பல்வேறு தேர்வுகளுக்குப் பயிற்சித் திட்டங்கள் மாறுபடும்.

விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் இளங்கலைப் படிப்பின் இறுதியாண்டு படித்துக் கொண்டிருக்க வேண்டும் அல்லது படிப்பில் தேர்ச்சி பெற்ற இளங்கலைப் பட்டதாரிகளாக இருக்க வேண்டும். அவர்கள் 19 – 35 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

சாந்தோம் வளாகத்தில் போர்டிங் வசதியுடன், முழுக்க முழுக்க தங்கி படிக்கும் வசதி, பகல் நேர வகுப்புகள் மற்றும் வாரயிறுதி பயிற்சி வகுப்புகள், நகரம் முழுவதும் பரவியுள்ள ஒன்பது மையங்கள் மற்றும் மறைமாவட்டத்திற்கு உட்பட்ட மண்டலங்களில் நடத்தப்படும், வார இறுதி வகுப்புகளில் கலந்து கொள்ள உள்ளூர் இளைஞர்களுக்கு இது மிகவும் உதவும்.

சிறப்பு விரிவுரைகளை வழங்கும் பல்வேறு தொழில்முறை பிரிவுகளைச் சேர்ந்த ஓய்வுபெற்ற அதிகாரிகளின் ஆதரவுடன் ஆசிரியர்கள் அடங்கிய குழு பயிற்சி அளிக்கும். அவர்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியின் மூலம் மாணவர்களின் தொகுப்பை நெருக்கமாக வழிநடத்த வழிகாட்டிகள் நியமிக்கப்படுகின்றனர்.

இந்த மையத்தின் கட்டணங்கள் மற்ற தனியார் மையங்களில் வசூலிக்கப்படும் கட்டணங்களை விட மிகவும் குறைவு. என்று இந்த மையத்தின் இயக்குநர் அருட்தந்தை அந்தோணி செபஸ்டியன் கூறுகிறார். (கிளாச்சேரி கிறிஸ்துவ கல்லூரியின் முதல்வராகப் பணியாற்றியவர்).

இளைஞர்களுக்குக் கிடைக்கும் பல்வேறு படிப்புகளைப் பற்றி அறிந்துகொள்ள இலவச, அறிமுக வகுப்புகள் இப்போது தொடங்கப்படுகின்றன, மேலும் முக்கிய படிப்புகள் இந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு மின்னஞ்சல் முகவரி – jdacademy2021@gmail.com. வலைதள முகவரி – www.jdacademyofexcellence.in

admin

Recent Posts

ஆர்.ஏ. புரத்தில் உள்ள ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான இடத்தில் 300 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை அமையவுள்ளது.

ஆர்.ஏ. புரத்தில் ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான பரந்த நிலப்பகுதியின் பெரும்பகுதி சமப்படுத்தப்பட்டு, புதிய மருத்துவமனை ஒன்றை அமைப்பதற்கான பணிகள்…

2 months ago

மயிலாப்பூர் காவல் நிலையத்தில் வாராந்திர குறைகேட்புக் கூட்டம் தொடங்கியது

E1 மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று வாராந்திர குறைகேட்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காவல் உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மற்றும்…

2 months ago

மெரினாவில் மற்றொரு ‘ப்ளூ ஃபிளாக்’ (Blue Flag) பகுதி – கலங்கரை விளக்கத்திற்கு அருகில்

மெரினா கடற்கரையில் மற்றொரு 'ப்ளூ ஃபிளாக்' பகுதிக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது கலங்கரை விளக்கத்திற்கு அருகிலும், காமராஜர்…

3 months ago

மயிலாப்பூர் எம்.எல்.ஏ-வை மயிலாப்பூர் மக்கள் தொடர்புகொள்ள தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி அறிமுகம்.

மயிலாப்பூர் எம்.எல்.ஏ.-வும் மாநில அமைச்சருமான பி. வெங்கடரமணன், ஆழ்வார்பேட்டையில் தனது அலுவலகத்தைத் திறந்ததிலிருந்து, அப்பகுதி மக்கள், சமூகத் தலைவர்கள் மற்றும்…

3 months ago

சாய்பாபா கோயில் அருகே ECR-லிருந்து கொண்டுவரப்பட்ட நுங்குகள் விற்பனை

இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…

3 months ago

இராணி மேரி கல்லூரியில் சேர்க்கை இன்னும் நடைபெறுகிறது.

இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…

3 months ago