Categories: சமூகம்

மெரினாவில் புதிய வடிவமைப்பில் புதிய கடைகள், ஆனால் உள்ளூர் வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்

மெரினா கடற்கரை கலங்கரை விளக்கம் அருகே கடற்கரை பகுதிகளில் சுண்டல் மற்றும் இதர பொருட்களை விற்பவர்களுக்கு இப்போது புதிய வடிவமைப்பில் புதிய அங்காடிகள் சூரிய ஒளி மின்சார வசதியடன் ஏற்படுத்தப்பட்டுள்ளது. குப்பம் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு இந்த கடைகள் வழங்கப்படுவதில்லை என்று கடற்கரை போலீஸ் நிலையம் அருகே இன்று போராட்டம் நடைபெற்றது. இந்த கடைகளை முறைப்படுத்தி தகுதியுடையவர்களுக்கு வழங்குவது சம்பந்தமாக சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குகள் நடைபெற்று வருகிறது.

நீதிமன்றம், மெரினா கடற்கரையில் வரன்முறை இல்லாமல் கடைகள் நிறைய இருப்பதாகவும் அவற்றை முறைப்படுத்த சென்னை மாநகராட்சிக்கு அறிவுறுத்தியிருந்தது. இந்த கடைகளால் மெரினா கடற்கரை குப்பைகள் நிறைந்து காணப்படுகிறது.

அதேநேரத்தில் புதிய கடைகள் அனைத்தும் ஒரே வடிவமைப்பில் இருக்க வேண்டும் என்றும், இந்த புதிய கடைகளை பெறுவதற்கு ஏற்கனெவே மெரினாவில் கடைவைத்திருந்தவர்களும் மற்றும் புதிதாக வியாபாரம் செய்ய விரும்புபவர்களும் டெபாசிட் தொகை மாநகரட்சியில் விண்ணப்பிக்கலாம் என்று நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. தற்போது கடைகள் பெறுவது சம்பந்தமான பிரச்சனைகளை மக்கள் எதிர்கொண்டு வருகின்றனர். கலங்கரை விளக்கம் முதல் எம்.ஜி.ஆர் சமாதி வரை முறைப்படுத்தப்படாத நூற்றுக்கணக்கான கடைகளால் கடற்கரை அதன் தனித்துவத்தை இழந்துவருகிறது.

admin

Recent Posts

மயிலாப்பூரில் ஜூனியர்களுக்கான செஸ் போட்டி

64 ஸ்கொயர்ஸ் செஸ் அகாடமி, மே 31 சனிக்கிழமை, மயிலாப்பூர் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள சென்னை சிட்டி சென்டர்…

5 hours ago

மயிலாப்பூரில் உள்ள எரிவாயு மூலம் இயங்கும் தகனக்கூடம் பழுதுபார்ப்புக்காக மூடப்பட்டது.

மயிலாப்பூரில் உள்ள எரிவாயு மூலம் இயங்கும் தகனக்கூடம் தற்போது மூடப்பட்டுள்ளது. பழுதுபார்ப்பு மற்றும் மேம்படுத்தல் பணிகளுக்காக மே 30 வரை…

5 hours ago

ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் உள்ள ஆட்டோ உதிரிபாகங்கள் கடைக்கு சென்னை மாநகராட்சி சீல்.

மயிலாப்பூரில் உள்ள ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் உள்ள ஒரு ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் கடைக்கு சென்னை மாநகராட்சி சீல் வைத்துள்ளது. கடை…

5 hours ago

வில்லிவாக்கத்தில் குடும்பத்தினருடன் ‘காணாமல் போன நபர்’ மீண்டும் இணைந்தார்.

மயிலாப்பூரில் இன்று காலை வழி தவறி, மயிலாப்பூர் குடியிருப்பாளர்களின் தளங்களில் ஆன்லைனில் பகிரப்பட்ட செய்திகளால் ‘காணாமல் போனதாக’ அறிவிக்கப்பட்ட முதியவர்…

1 day ago

மயிலாப்பூர் ஆன்லைன் சமூகக் குழுக்களில் பகிரப்பட்ட ‘நபர் காணவில்லை’ என்ற செய்தி.

இந்த புதன்கிழமை நண்பகல் முதல் ‘நபர் காணவில்லை’ என்ற ஆன்லைன் செய்தி பரவி வருகிறது. இதுதான் செய்தி – மந்தைவெளிப்பாக்கம்…

1 day ago

தொல்காப்பிய பூங்காவில், பணிகள் இன்னும் நடந்து வருவதால் விடுமுறை நாட்களில் வரும் கூட்டத்தை இழந்துள்ளது.

மிகப்பெரிய அளவில் புதுப்பிக்கப்பட்ட தொல்காப்பிய பூங்கா இன்னும் பொதுமக்களுக்கு திறக்கப்படவில்லை, இருப்பினும் இந்த திட்டத்திற்கு பொறுப்பான மாநில அமைச்சர் அனைத்து…

2 days ago