Categories: சமூகம்

மெரினாவில் புதிய வடிவமைப்பில் புதிய கடைகள், ஆனால் உள்ளூர் வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்

மெரினா கடற்கரை கலங்கரை விளக்கம் அருகே கடற்கரை பகுதிகளில் சுண்டல் மற்றும் இதர பொருட்களை விற்பவர்களுக்கு இப்போது புதிய வடிவமைப்பில் புதிய அங்காடிகள் சூரிய ஒளி மின்சார வசதியடன் ஏற்படுத்தப்பட்டுள்ளது. குப்பம் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு இந்த கடைகள் வழங்கப்படுவதில்லை என்று கடற்கரை போலீஸ் நிலையம் அருகே இன்று போராட்டம் நடைபெற்றது. இந்த கடைகளை முறைப்படுத்தி தகுதியுடையவர்களுக்கு வழங்குவது சம்பந்தமாக சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குகள் நடைபெற்று வருகிறது.

நீதிமன்றம், மெரினா கடற்கரையில் வரன்முறை இல்லாமல் கடைகள் நிறைய இருப்பதாகவும் அவற்றை முறைப்படுத்த சென்னை மாநகராட்சிக்கு அறிவுறுத்தியிருந்தது. இந்த கடைகளால் மெரினா கடற்கரை குப்பைகள் நிறைந்து காணப்படுகிறது.

அதேநேரத்தில் புதிய கடைகள் அனைத்தும் ஒரே வடிவமைப்பில் இருக்க வேண்டும் என்றும், இந்த புதிய கடைகளை பெறுவதற்கு ஏற்கனெவே மெரினாவில் கடைவைத்திருந்தவர்களும் மற்றும் புதிதாக வியாபாரம் செய்ய விரும்புபவர்களும் டெபாசிட் தொகை மாநகரட்சியில் விண்ணப்பிக்கலாம் என்று நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. தற்போது கடைகள் பெறுவது சம்பந்தமான பிரச்சனைகளை மக்கள் எதிர்கொண்டு வருகின்றனர். கலங்கரை விளக்கம் முதல் எம்.ஜி.ஆர் சமாதி வரை முறைப்படுத்தப்படாத நூற்றுக்கணக்கான கடைகளால் கடற்கரை அதன் தனித்துவத்தை இழந்துவருகிறது.

admin

Recent Posts

‘பசுமை பயணம்’ மாநில அளவிலான சைக்கிள் பிரச்சாரம் சாந்தோமில் முடிவடைகிறது.

‘பசுமை பயணம்’ என்ற கருப்பொருளில் நடத்தப்படும் மாரத்தான் சைக்கிள் ஓட்டுதல் முயற்சியின் இறுதி நிகழ்வு நவம்பர் 20, காலை 11.30…

1 week ago

தெரு நாயை அடித்து கொன்ற டீக்கடை உரிமையாளர் கைது.

மயிலாப்பூர், பஜார் சாலையில் உள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர் தெரு நாயை அடித்துக் கொன்றதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஸ்டேஷன்…

1 week ago

துர்காபாய் தேஷ்முக் பொது மருத்துவமனையில் இலவச மருத்துவ பரிசோதனை முகாம். நவம்பர் 18ல்

ஆர்.ஏ. புரத்தில் உள்ள துர்காபாய் தேஷ்முக் பொது மருத்துவமனை நவம்பர் 18 அன்று காலை 8.30 மணி முதல் பிற்பகல்…

2 weeks ago

மயிலாப்பூர் இந்து நிரந்தர நிதியம் விவகாரம்: மயிலாப்பூர் எம்.எல்.ஏ., வைப்பாளர்களின் பிரச்சினைகளை அரசாங்கத்திடம் தெரிவிப்பதாக உறுதியளித்துள்ளார்.

மயிலாப்பூர் எம்.எல்.ஏ. தா. வேலு, விளம்பரதாரர்களால் மோசமாக ஏமாற்றப்பட்டதாகக் கூறும் மயிலாப்பூர் நிதியின் வைப்பாளர்கள் தங்கள் வழக்கை முதல்வர் அல்லது…

2 weeks ago

பாரதிய வித்யா பவனின் மார்கழி இசை விழா நவம்பர் 20ல் தொடங்குகிறது.

பாரதிய வித்யா பவனின் சென்னை கேந்திரா, நவம்பர் 20 முதல் அதன் வருடாந்திர மார்கழி இசை நிகழ்ச்சிகளை நடத்துகிறது, மேலும்…

2 weeks ago

ஸ்ரீ வாலீஸ்வரர் கோயிலின் கும்பாபிஷேகம் நவம்பர் 23ல்.

மயிலாப்பூர் ஸ்ரீ வாலீஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேகம் நவம்பர் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்கள் குழு கோயிலை…

2 weeks ago