Categories: சமூகம்

மெரினாவில் புதிய வடிவமைப்பில் புதிய கடைகள், ஆனால் உள்ளூர் வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்

மெரினா கடற்கரை கலங்கரை விளக்கம் அருகே கடற்கரை பகுதிகளில் சுண்டல் மற்றும் இதர பொருட்களை விற்பவர்களுக்கு இப்போது புதிய வடிவமைப்பில் புதிய அங்காடிகள் சூரிய ஒளி மின்சார வசதியடன் ஏற்படுத்தப்பட்டுள்ளது. குப்பம் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு இந்த கடைகள் வழங்கப்படுவதில்லை என்று கடற்கரை போலீஸ் நிலையம் அருகே இன்று போராட்டம் நடைபெற்றது. இந்த கடைகளை முறைப்படுத்தி தகுதியுடையவர்களுக்கு வழங்குவது சம்பந்தமாக சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குகள் நடைபெற்று வருகிறது.

நீதிமன்றம், மெரினா கடற்கரையில் வரன்முறை இல்லாமல் கடைகள் நிறைய இருப்பதாகவும் அவற்றை முறைப்படுத்த சென்னை மாநகராட்சிக்கு அறிவுறுத்தியிருந்தது. இந்த கடைகளால் மெரினா கடற்கரை குப்பைகள் நிறைந்து காணப்படுகிறது.

அதேநேரத்தில் புதிய கடைகள் அனைத்தும் ஒரே வடிவமைப்பில் இருக்க வேண்டும் என்றும், இந்த புதிய கடைகளை பெறுவதற்கு ஏற்கனெவே மெரினாவில் கடைவைத்திருந்தவர்களும் மற்றும் புதிதாக வியாபாரம் செய்ய விரும்புபவர்களும் டெபாசிட் தொகை மாநகரட்சியில் விண்ணப்பிக்கலாம் என்று நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. தற்போது கடைகள் பெறுவது சம்பந்தமான பிரச்சனைகளை மக்கள் எதிர்கொண்டு வருகின்றனர். கலங்கரை விளக்கம் முதல் எம்.ஜி.ஆர் சமாதி வரை முறைப்படுத்தப்படாத நூற்றுக்கணக்கான கடைகளால் கடற்கரை அதன் தனித்துவத்தை இழந்துவருகிறது.

admin

Recent Posts

எலும்பு மற்றும் மூட்டு சார்ந்த பிரச்சனைகள் மற்றும் பொதுவான உடல்நலப் பிரச்சனைகளுக்கு இலவச மருத்துவ முகாம். செப்டம்பர் 20

நந்தலாலா மெடிக்கல் பவுண்டேஷன் டிரஸ்ட்' (Nandalala Medical Foundation Trust) ஒரு இலவச மருத்துவ முகாமை ஏற்பாடு செய்துள்ளது. இதில்…

1 day ago

மயிலாப்பூரைச் சேர்ந்த மூன்று மூத்த பள்ளி ஆசிரியர்கள் கௌரவிக்கப்பட்டனர்

கோபாலபுரத்தில் உள்ள டி.ஏ.வி (DAV) பெண்கள் பள்ளி அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 'மிஷன் குரு தேவோ பவ' (Mission Guru…

2 days ago

விநாயகருக்கு சுற்றுச்சூழலுக்கு உகந்த குடையை (Eco-Umbrella) உருவாக்குங்கள். இது ‘மயிலாப்பூர் டைம்ஸ்’ (Mylapore Times) நடத்தும் போட்டி

பின்பற்ற வேண்டிய குறிப்புகள்: 1. வீட்டில் உள்ள எளிமையான, மறுபயன்பாட்டிற்கு ஏற்ற பொருட்களை மட்டுமே பயன்படுத்தவும் – காகிதப் பைகள்,…

6 days ago

ஆர்.ஏ. புரத்தில் உள்ள ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான இடத்தில் 300 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை அமையவுள்ளது.

ஆர்.ஏ. புரத்தில் ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான பரந்த நிலப்பகுதியின் பெரும்பகுதி சமப்படுத்தப்பட்டு, புதிய மருத்துவமனை ஒன்றை அமைப்பதற்கான பணிகள்…

3 months ago

மயிலாப்பூர் காவல் நிலையத்தில் வாராந்திர குறைகேட்புக் கூட்டம் தொடங்கியது

E1 மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று வாராந்திர குறைகேட்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காவல் உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மற்றும்…

3 months ago

மெரினாவில் மற்றொரு ‘ப்ளூ ஃபிளாக்’ (Blue Flag) பகுதி – கலங்கரை விளக்கத்திற்கு அருகில்

மெரினா கடற்கரையில் மற்றொரு 'ப்ளூ ஃபிளாக்' பகுதிக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது கலங்கரை விளக்கத்திற்கு அருகிலும், காமராஜர்…

3 months ago