கொரோனா நேரத்தில் மருத்துவமனைகளில் சேவை செய்த தொண்டு நிறுவனம்

மயிலாப்பூர் இராயப்பேட்டை நெடுஞ்சாலையில் உள்ள சமூக சேவை செய்யும் தொண்டு நிறுவனமான விஷ்வஜெயம் பவுண்டேஷனுக்கு சமீபத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. கடந்த வருடம் கொரோனா நேரத்தில் இவர்கள் இரண்டு மருத்துவமனைகளில் நிறைய உதவிகளை செய்துள்ளனர்.

இவர்களின் சேவையை பாராட்டி இந்த குழுவுக்கு குழந்தைகள் சுகாதார நிறுவனத்தின் இயக்குநரும் பேராசிரியருமான டாக்டர் எஸ்.எழிலரசி பாராட்டு சான்றிதழ் வழங்கியுள்ளார்.

இந்த குழு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையிலும் மற்றும் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையிலும் பொதுமக்களுக்கு தினமும் உணவளித்து வந்தனர். மேலும் விஷ்வஜெயம் பவுண்டேஷன் தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் சேகர் விஸ்வநாதன், கடந்த வருடம் சுமார் ஒரு லட்சம் உண்வு பொட்டலங்கள் மக்களுக்கு வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் விவரங்களுக்கு விஷ்வஜெயம் பவுண்டேஷனை தொடர்புகொள்ள தொலைபேசி எண்: 93800 22773.

 

admin

Recent Posts

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற கார்த்திகை தீப விழாவில் ஏராளமான மக்கள் பங்கேற்றனர்.

மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை (டிசம்பர் 4) கார்த்திகை தீப விழா தொடங்கிய நேரத்தில், லேசான,…

3 weeks ago

மந்தைவெளியில் ஜனவரி 2026ல் கோலப் போட்டி: இப்போதே பதிவு செய்யுங்கள்

மந்தைவெளி ராஜா தெரு குடியிருப்பாளர்கள் நலச் சங்கம் அதன் பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக “ஊடக உலகம்” என்ற கருப்பொருளை…

3 weeks ago

‘பசுமை பயணம்’ மாநில அளவிலான சைக்கிள் பிரச்சாரம் சாந்தோமில் முடிவடைகிறது.

‘பசுமை பயணம்’ என்ற கருப்பொருளில் நடத்தப்படும் மாரத்தான் சைக்கிள் ஓட்டுதல் முயற்சியின் இறுதி நிகழ்வு நவம்பர் 20, காலை 11.30…

1 month ago

தெரு நாயை அடித்து கொன்ற டீக்கடை உரிமையாளர் கைது.

மயிலாப்பூர், பஜார் சாலையில் உள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர் தெரு நாயை அடித்துக் கொன்றதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஸ்டேஷன்…

1 month ago

துர்காபாய் தேஷ்முக் பொது மருத்துவமனையில் இலவச மருத்துவ பரிசோதனை முகாம். நவம்பர் 18ல்

ஆர்.ஏ. புரத்தில் உள்ள துர்காபாய் தேஷ்முக் பொது மருத்துவமனை நவம்பர் 18 அன்று காலை 8.30 மணி முதல் பிற்பகல்…

1 month ago

மயிலாப்பூர் இந்து நிரந்தர நிதியம் விவகாரம்: மயிலாப்பூர் எம்.எல்.ஏ., வைப்பாளர்களின் பிரச்சினைகளை அரசாங்கத்திடம் தெரிவிப்பதாக உறுதியளித்துள்ளார்.

மயிலாப்பூர் எம்.எல்.ஏ. தா. வேலு, விளம்பரதாரர்களால் மோசமாக ஏமாற்றப்பட்டதாகக் கூறும் மயிலாப்பூர் நிதியின் வைப்பாளர்கள் தங்கள் வழக்கை முதல்வர் அல்லது…

1 month ago