மயிலாப்பூர் இராயப்பேட்டை நெடுஞ்சாலையில் உள்ள சமூக சேவை செய்யும் தொண்டு நிறுவனமான விஷ்வஜெயம் பவுண்டேஷனுக்கு சமீபத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. கடந்த வருடம் கொரோனா நேரத்தில் இவர்கள் இரண்டு மருத்துவமனைகளில் நிறைய உதவிகளை செய்துள்ளனர்.
இவர்களின் சேவையை பாராட்டி இந்த குழுவுக்கு குழந்தைகள் சுகாதார நிறுவனத்தின் இயக்குநரும் பேராசிரியருமான டாக்டர் எஸ்.எழிலரசி பாராட்டு சான்றிதழ் வழங்கியுள்ளார்.
இந்த குழு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையிலும் மற்றும் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையிலும் பொதுமக்களுக்கு தினமும் உணவளித்து வந்தனர். மேலும் விஷ்வஜெயம் பவுண்டேஷன் தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் சேகர் விஸ்வநாதன், கடந்த வருடம் சுமார் ஒரு லட்சம் உண்வு பொட்டலங்கள் மக்களுக்கு வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் விவரங்களுக்கு விஷ்வஜெயம் பவுண்டேஷனை தொடர்புகொள்ள தொலைபேசி எண்: 93800 22773.
மயிலாப்பூரில் சைலன்ட் ரீடிங் குழு இந்த ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 8 அன்று லஸ்ஸில் உள்ள நாகேஸ்வர ராவ் பூங்காவில் குழந்தைகளுக்கான…
குழந்தைகள் அனைவரும் ஆதார் அட்டை பெற வேண்டும் என்பதால், கச்சேரி சாலையில் உள்ள மயிலாப்பூர் அஞ்சல் அலுவலகத்தில் நீண்ட வரிசையில்…
சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களில் வளர்க்கப்பட்டுள்ள தாவரங்களுக்கு நீர்ப்பாசனம் செய்ய ஒரு எளிய யோசனையைக் கொண்டு வந்துள்ளது. மயிலாப்பூரில் உள்ள…
நான்கு வாரங்களுக்கும் மேலாக, மயிலாப்பூரில் உள்ள பள்ளி பள்ளிக்கூடங்களை சுற்றியுள்ள பகுதிகள் பெரிதாக பரபரப்பு ஏதும் இல்லாமல் இருந்தது. இந்த…
லயன்ஸ் கிளப் ஆஃப் மெட்ராஸ் பார்க் டவுன் அறக்கட்டளை, 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளில் பயிலும் ஏழை மாணவர்களுக்கு…
மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோயிலின் வருடாந்திர வைகாசி விழா தொடங்கியது. ஜூன் 2 ஆம் தேதி காலை, ஏராளமான…