அடையாறு பூங்காவில் இருந்து காந்தி சிலை வரை மற்றும் வடக்கே காமராஜர் சாலை (கடற்கரை சாலை) வரை உள்ள சாலையை பார்த்தபோது உண்மையில் இங்கு பலத்த மழை பெய்திருக்கிறதா என்று ஆச்சரியப்படும் வகையில் சாலை சுத்தமாக இருந்தது.
ஒரு சில குட்டைகளில் மட்டுமே தண்ணீரை பார்க்க முடிந்தது. சாந்தோம் நெடுஞ்சாலை எப்போது மழை பொழிந்தாலும் வெள்ளத்தில் மூழ்கும்.
சென்னை மாநகராட்சி மேற்கொண்ட வடிகால் திட்ட பணிகளால் இங்கு தண்ணீர் தேங்காமல் இருந்தது. இந்த பணிகள் இன்னும் முழுமையாக முடியவில்லை, பட்டினப்பாக்கம் சந்திப்பிலிருந்து தென்பகுதியில் வேலைகள் நடந்து வருகிறது.
ஆனால், வடசென்னை பகுதிக்கு நீதிபதிகளும், அமைச்சர்களும் வேலைக்குச் செல்லும் இந்த பரபரப்பான சாலையில் வெள்ளநீர் தென்படவில்லை.
மாதா சர்ச் சாலையில் மழை பொழிந்தபோது பிரதான சாலையில் தண்ணீர் நிரம்பியதாகவும், ஆனால் பின்னர் அகற்றப்பட்டதாகவும் மக்கள் தெரிவித்தனர்.
மேலே உள்ள படம் அக்டோபர் 2021 இல் அடையாறு பூங்காவின் அருகே பணியாளர்கள் பணிபுரிந்த போது எடுக்கப்பட்ட புகைப்படம்.
<< நீங்கள் மழை நேரத்தில் சந்தோம் நெடுஞ்சாலையை பார்த்திருந்தால் உங்களது கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொள்ளவும் >>
மந்தைவெளி தபால் நிலையத்திற்கு அருகிலுள்ள ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய விசாலமான மருந்தகத்தில்…
‘கலா உத்சவ்’ என்பது அக்டோபர் 19 வரை ஆழ்வார்பேட்டை கடையில் நடைபெறும் கைவினைக் கண்காட்சி மற்றும் விற்பனை ஆகும். இது…
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் சங்கம் (RAPRA) சில ஆண்டுகளாக இந்த சுற்றுப்புறத்தில் உள்ள சென்னை பள்ளிகள் மற்றும் அரசு உதவி…
ஆழ்வார்பேட்டை காந்தி அமைதி அறக்கட்டளை தனது அலுவலக வளாகத்தில், வரும் அக்டோபர் 2-ஆம் தேதி (மகாத்மா காந்தியின் 156-ஆம் ஜெயந்தியை…
இந்து சமய அறநிலையத்துறை விவகாரங்களுக்கான மாநில அமைச்சர் பி.கே. சேகர் பாபு, செப்டம்பர் 22 மாலை மயிலாப்பூர் வெங்கடேச அக்ரஹாரத்…
தீபாவளி லேகியம் வாங்க இடம் தேடுகிறீர்களா? அதற்கு ஒரு சிறந்த இடம் மயிலாப்பூரில் உள்ள வெங்கட்ரமணா ஆயுர்வேத மருந்தகம். இது…