சென்னை மாநகராட்சி நடத்தி வரும் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் கோவிஷீல்டு தடுப்பூசி மட்டுமே இருப்பு உள்ளது. கோவாக்சின் தடுப்பூசி எங்கேயும் இல்லை. சிலர் ஏற்கெனவே கோவாக்சின் தடுப்பூசி போட்டுக்கொண்டதால் அதே தடுப்பூசியை போடுவதற்கு சுகாதார நிலையங்களுக்கு வந்து இருப்பு இல்லாததால் திரும்பி செல்கின்றனர்.
மேலும் முதல் முறை தடுப்பூசி போடுவதற்கு வருபவர்கள் கோவாக்சின் தடுப்பூசியை கேட்கின்றனர். ஆனால் கோவாக்சின் தடுப்பூசி இருப்பு இல்லாததால் ஊசி போடாமலேயே திரும்பி செல்கின்றனர். சென்னை மாநகராட்சியின் சுகாதார துறையை சேர்ந்த மூத்த அதிகாரி இன்று கோவாக்சின் தடுப்பூசி குறிப்பிட்ட அளவு வந்துள்ளதாகவும்.
இன்னும் ஒரு சில நாட்களில் மேலும் குறிப்பிட்ட அளவு கோவாக்சின் தடுப்பூசி வரவிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் முதல் முறை தடுப்பூசி செலுத்த வருவோர் கோவிஷீல்டு, கோவாக்சின் இரண்டில் எந்த வகை தடுப்பூசியை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம் என்றும், இதனால் எவ்வித பாதிப்பும் இல்லை என்று கூறுகிறார்.
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்போர் சங்கம் (RAPRA) சென்னை (ஜிசிசி) மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் வசதி குறைந்த…
இந்த கோடை சிலருக்கு ஒரு வாய்ப்பு. வீட்டில் ஊறுகாய், வத்தல், பப்படம்ஸ் தயாரிப்பதில் மும்முரமாக இருப்பவர்கள், இந்த வெயிலையும் நன்றாகப்…
ஆர் கே மட சாலையில் அண்ணா விலாஸ் உணவகம் அருகே செயல்பட்டு வந்த தற்காலிக எம்டிசி பேருந்து நிறுத்தம் மாற்றப்பட்டுள்ளது.…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ., தா.வேலு கடந்த வார இறுதியில் மயிலாப்பூர் சித்திரகுளம் அருகே பொதுமக்களுக்காக குடிநீர் பந்தலை திறந்து வைத்தார். தேவைப்படுபவர்களுக்கு…
கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு மெட்ரோ ரயில் பாதை பணியின் காரணமாக பேருந்துகள் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டது. எம்டிசி பேருந்து நிறுத்தங்களில்…
பட்டினப்பாக்கத்தில் உள்ள மெரினா லூப் சாலை மற்றும் டாக்டர் டி.ஜி.எஸ்.தினகரன் சாலை சந்திப்பில் வெள்ளிக்கிழமை சாலை மறியல் சம்பவம் நடந்தது,…