மயிலாப்பூரின் புதிய எம்.எல்.ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திமுகவின் த.வேலு, எம்.எல்.ஏ அலுவலகத்தை ஆழ்வார்பேட்டை சி.பி.இராமசாமி சாலையில் சமூக நலக்கூடம் அருகே உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான கட்டிடத்தில் அலுவலகத்தை திறக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த கட்டிடத்தை ஏற்கனெவே முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் ஆர்.நடராஜ் பயன்படுத்தி வந்தார். இந்த இடம் தொகுதியின் மைய பகுதியில் இருப்பதாலும் முன்னாள் எம்.எல்.ஏ பயன்படுத்தி வந்ததாலும் பொதுமக்களுக்கு பரீட்சயமாக இருப்பதால் இதே இடத்தில் அலுவலகத்தை தொடங்க இருப்பதாக வேலு தெரிவித்தார். இந்த இடத்தின் அருகே மாநகராட்சி அலுவலகங்களும், மற்றும் மாநகராட்சிக்கு சொந்தமான வணிக வளாக கட்டிடமும் உள்ளது. இந்த அலுவலகங்கள் அனைத்தும் ஆழ்வார்பேட்டை மேம்பாலம் அருகே அமைந்துள்ளது.
ஆர்.ஏ. புரத்தில் ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான பரந்த நிலப்பகுதியின் பெரும்பகுதி சமப்படுத்தப்பட்டு, புதிய மருத்துவமனை ஒன்றை அமைப்பதற்கான பணிகள்…
E1 மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று வாராந்திர குறைகேட்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காவல் உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மற்றும்…
மெரினா கடற்கரையில் மற்றொரு 'ப்ளூ ஃபிளாக்' பகுதிக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது கலங்கரை விளக்கத்திற்கு அருகிலும், காமராஜர்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ.-வும் மாநில அமைச்சருமான பி. வெங்கடரமணன், ஆழ்வார்பேட்டையில் தனது அலுவலகத்தைத் திறந்ததிலிருந்து, அப்பகுதி மக்கள், சமூகத் தலைவர்கள் மற்றும்…
இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…
இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…