மாநகராட்சி நடத்தி வரும் சுகாதார மையங்களுக்கு தற்போது குறிப்பிட்ட அளவு கோவாக்சின் தடுப்பூசி விநியோகம்

சென்னை மாநகராட்சி நடத்தி வரும் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் கோவிஷீல்டு தடுப்பூசி மட்டுமே இருப்பு உள்ளது. கோவாக்சின் தடுப்பூசி எங்கேயும் இல்லை. சிலர் ஏற்கெனவே கோவாக்சின் தடுப்பூசி போட்டுக்கொண்டதால் அதே தடுப்பூசியை போடுவதற்கு சுகாதார நிலையங்களுக்கு வந்து இருப்பு இல்லாததால் திரும்பி செல்கின்றனர்.

மேலும் முதல் முறை தடுப்பூசி போடுவதற்கு வருபவர்கள் கோவாக்சின் தடுப்பூசியை கேட்கின்றனர். ஆனால் கோவாக்சின் தடுப்பூசி இருப்பு இல்லாததால் ஊசி போடாமலேயே திரும்பி செல்கின்றனர். சென்னை மாநகராட்சியின் சுகாதார துறையை சேர்ந்த மூத்த அதிகாரி இன்று கோவாக்சின் தடுப்பூசி குறிப்பிட்ட அளவு வந்துள்ளதாகவும்.

இன்னும் ஒரு சில நாட்களில் மேலும் குறிப்பிட்ட அளவு கோவாக்சின் தடுப்பூசி வரவிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் முதல் முறை தடுப்பூசி செலுத்த வருவோர் கோவிஷீல்டு, கோவாக்சின் இரண்டில் எந்த வகை தடுப்பூசியை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம் என்றும், இதனால் எவ்வித பாதிப்பும் இல்லை என்று கூறுகிறார்.

admin

Recent Posts

மின்சார இருசக்கர வாகனங்களுக்கான பேட்டரி மாற்றும் வசதி. மந்தைவெளி, எம்.கே. அம்மன் கோயில் எம்.ஆர்.டி.எஸ் ரயில் நிலையங்களில்.

மயிலாப்பூரில் உள்ள இரண்டு முக்கிய இடங்களான எம்.ஆர்.டி.எஸ்-இன் முண்டக்கக்கன்னி அம்மன் கோயில் நிலையம் மற்றும் மந்தைவெளி நிலையத்தில், மின்சார இருசக்கர…

4 hours ago

ஸ்ரீ ரமண மகரிஷி 76வது ஆராதனை விழா. ஏப்ரல் 15

ரமண கேந்திரா அறக்கட்டளை சார்பில் ஏப்ரல் 15ம் தேதி ஸ்ரீ ரமண மகரிஷி 76வது ஆராதனை விழா, காலை 6…

1 day ago

இளம் பருவத்தினருக்கான எழுத்துப் பயிலரங்குகள்.

10 முதல் 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்காக, எழுத்தாளர் பிரவீணா சிவராம் அவர்கள் நடத்தும் இரண்டு நாள் படைப்பு எழுத்துப் பயிலரங்கு…

2 days ago

ஆர்.ஏ.புரத்தில் குழந்தைகளுக்கான ஒரு மன்றம். இலவச நிகழ்வுகள். இப்போதே பதிவு செய்யுங்கள்.

ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்போர் சங்கம் (RAPRA), 5 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வளர்த்தெடுக்கும் நோக்கில், 'RAPRA குழந்தைகள் மன்றம்'…

2 days ago

ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவில் பிரம்மோற்சவம். ஏப்ரல் 12 முதல் 21 வரை

மந்தைவெளி மாரி செட்டி தெருவில் உள்ள ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவம் ஏப்ரல் 12 முதல் 21…

4 days ago

2026 சட்டப்பேரவை தேர்தல்: 25 பேர் வேட்புமனு தாக்கல்; நகரிலேயே இதுவே மிகக் குறைந்த எண்ணிக்கை.

ஏப்ரல் மாத இறுதியில் நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில், மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிடுவதற்காக 25 பேர் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.…

6 days ago