சென்னை மாநகராட்சி நடத்தி வரும் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் கோவிஷீல்டு தடுப்பூசி மட்டுமே இருப்பு உள்ளது. கோவாக்சின் தடுப்பூசி எங்கேயும் இல்லை. சிலர் ஏற்கெனவே கோவாக்சின் தடுப்பூசி போட்டுக்கொண்டதால் அதே தடுப்பூசியை போடுவதற்கு சுகாதார நிலையங்களுக்கு வந்து இருப்பு இல்லாததால் திரும்பி செல்கின்றனர்.
மேலும் முதல் முறை தடுப்பூசி போடுவதற்கு வருபவர்கள் கோவாக்சின் தடுப்பூசியை கேட்கின்றனர். ஆனால் கோவாக்சின் தடுப்பூசி இருப்பு இல்லாததால் ஊசி போடாமலேயே திரும்பி செல்கின்றனர். சென்னை மாநகராட்சியின் சுகாதார துறையை சேர்ந்த மூத்த அதிகாரி இன்று கோவாக்சின் தடுப்பூசி குறிப்பிட்ட அளவு வந்துள்ளதாகவும்.
இன்னும் ஒரு சில நாட்களில் மேலும் குறிப்பிட்ட அளவு கோவாக்சின் தடுப்பூசி வரவிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் முதல் முறை தடுப்பூசி செலுத்த வருவோர் கோவிஷீல்டு, கோவாக்சின் இரண்டில் எந்த வகை தடுப்பூசியை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம் என்றும், இதனால் எவ்வித பாதிப்பும் இல்லை என்று கூறுகிறார்.
மகாராஷ்டிர சங்கம் சென்னை மயிலாப்பூரில் உள்ள சமஸ்கிருத கல்லூரி ஆடிட்டோரியத்தில் சத்ரபதி சிவாஜி ஜெயந்தி மற்றும் மகாராஷ்டிரா தினத்தை மே…
மயிலாப்பூரில் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் சுமார் 30 பெண்கள் தற்போது மந்தைவெளிப்பாக்கத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் இலவச தையல் பயிற்சி…
சிஐடி காலனியில் வசிக்கும் ஆராய்ச்சியாளரும் கோலங்கள் குறித்த நிபுணருமான டாக்டர் காயத்ரி சங்கர்நாராயணன், சமீபத்தில் ஆர் ஏ புரம் நண்பர்கள்…
சாந்தோமில் உள்ள சிஎஸ்ஐ செயின்ட் தாமஸ் தமிழ் தேவாலயத்தில் ஏப்ரல் 26 முதல் மே 5 வரை விடுமுறை பைபிள்…
மயிலாப்பூர் மாதவப்பெருமாள் திருக்கோயிலில் சித்திரை திருவோணப் பெருவிழா ஏப்ரல் 30 முதல் மே 10 வரை நடைபெறுகிறது. விழா விவரங்கள்:…
மயிலாப்பூர் முண்டகக்கண்ணி அம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ள பிஎஸ் மெட்ரிகுலேஷன் (வடக்கு) பள்ளி, ஜூன் 2024 இல் தொடங்கும் கல்வியாண்டில்…