ஆழ்வார்பேட்டையில் உள்ள இந்த TANFED ஸ்டோரில் எண்ணெய்கள், தினை, தேன், மசாலா மற்றும் பல பொருட்கள் கிடைக்கிறது.

தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை கூட்டமைப்பு (TANFED) சமீபத்தில் ஆழ்வார்பேட்டையில் ஒரு அங்காடியைத் திறந்தது.

இந்த விற்பனை நிலையம் திருச்செங்கோடு, கொல்லிமலை, ஈரோடு, பெருந்துறை மற்றும் மாநிலத்தில் உள்ள ஒரு சில கூட்டுறவு சங்கங்களில் இருந்து திரட்டப்பட்ட விவசாயப் பொருட்களை விற்பனை செய்கிறது.

மரச்செக்கு தேங்காய் எண்ணெய், எள், நிலக்கடலை எண்ணெய்கள், பல பிராண்டுகளில் இந்த கடையில் நுழையும் போது உங்கள் கண்களை கவரும் வண்ணம் வைக்கப்பட்டுளள்து.

மார்த்தாண்டம் தேன் இங்கு வாங்குபவர்களிடையே மிகவும் பிரபலம் என்கிறார் விற்பனையாளர். இதன் விலை 200 கிராம் 87 ரூபாய்.

தேங்காய் எண்ணெய் ஒரு கிலோ 220 ரூபாயிலும், எள் எண்ணெய் விலை 380 ரூபாயிலும் தொடங்குகிறது.

சம்பா மிளகாய், சிவப்பு மிளகாய், இங்குள்ள மற்றொரு பிரபலமான தயாரிப்பு ஆகும்.

சுத்தமான தேங்காய் எண்ணெய் மற்றும் சில நறுமணப் பொருட்களின் கலவையில் கையால் செய்யப்பட்ட சோப்புகள் அலமாரிகளில் உள்ளன.

தினை, வரகு மற்றும் சாமை ஆகியவை கையிருப்பில் உள்ளது – அரை கிலோ 60 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. மாப்பிள்ளை சம்பா மற்றும் கருப்பு கவுனி அரிசியும் கிடைக்கிறது.

பச்சைப்பயறு மற்றும் உளுத்தம் பருப்பு, பிரவுன் சுகர், பில்டர் காபி பவுடர் போன்றவை இங்கு இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

இங்கு விற்கப்படும் அனைத்து பொருட்களும் ரசாயனம் பயன்படுத்தாமல் விளைவிக்கப்படுகின்றன என்கிறார் இந்தக் கடையின் பொறுப்பாளர்.

கொல்லிமலை மிளகு (250 கிராம் ரூ.150), ஜீரா, சுத்தமான மஞ்சள் தூள் மற்றும் நாட்டுப்புற வகைகளின் பல்வேறு மசாலா வகைகள் உள்ளன.

இந்த TANFED அங்காடி ஆஞ்சநேயர் கோவில் இருக்கும் வளாகத்தில் அமைந்துள்ளது. முகவரி எண் 181, லஸ் சர்ச் ரோடு, ஆழ்வார்பேட்டை. இங்கே தொலைபேசி எண்கள் இல்லை.

இந்த செய்தித்தாளில் எழுதக்கூடிய உங்கள் பகுதியில் உள்ள புதிய கடைகளைப் பற்றி எங்களிடம் கூறுங்கள். கடை பற்றிய குறிப்பை வாட்ஸ்அப் செய்யவும் – 8015005628

வி.சௌந்தரராணி

admin

Recent Posts

‘பசுமை பயணம்’ மாநில அளவிலான சைக்கிள் பிரச்சாரம் சாந்தோமில் முடிவடைகிறது.

‘பசுமை பயணம்’ என்ற கருப்பொருளில் நடத்தப்படும் மாரத்தான் சைக்கிள் ஓட்டுதல் முயற்சியின் இறுதி நிகழ்வு நவம்பர் 20, காலை 11.30…

2 weeks ago

தெரு நாயை அடித்து கொன்ற டீக்கடை உரிமையாளர் கைது.

மயிலாப்பூர், பஜார் சாலையில் உள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர் தெரு நாயை அடித்துக் கொன்றதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஸ்டேஷன்…

2 weeks ago

துர்காபாய் தேஷ்முக் பொது மருத்துவமனையில் இலவச மருத்துவ பரிசோதனை முகாம். நவம்பர் 18ல்

ஆர்.ஏ. புரத்தில் உள்ள துர்காபாய் தேஷ்முக் பொது மருத்துவமனை நவம்பர் 18 அன்று காலை 8.30 மணி முதல் பிற்பகல்…

3 weeks ago

மயிலாப்பூர் இந்து நிரந்தர நிதியம் விவகாரம்: மயிலாப்பூர் எம்.எல்.ஏ., வைப்பாளர்களின் பிரச்சினைகளை அரசாங்கத்திடம் தெரிவிப்பதாக உறுதியளித்துள்ளார்.

மயிலாப்பூர் எம்.எல்.ஏ. தா. வேலு, விளம்பரதாரர்களால் மோசமாக ஏமாற்றப்பட்டதாகக் கூறும் மயிலாப்பூர் நிதியின் வைப்பாளர்கள் தங்கள் வழக்கை முதல்வர் அல்லது…

3 weeks ago

பாரதிய வித்யா பவனின் மார்கழி இசை விழா நவம்பர் 20ல் தொடங்குகிறது.

பாரதிய வித்யா பவனின் சென்னை கேந்திரா, நவம்பர் 20 முதல் அதன் வருடாந்திர மார்கழி இசை நிகழ்ச்சிகளை நடத்துகிறது, மேலும்…

3 weeks ago

ஸ்ரீ வாலீஸ்வரர் கோயிலின் கும்பாபிஷேகம் நவம்பர் 23ல்.

மயிலாப்பூர் ஸ்ரீ வாலீஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேகம் நவம்பர் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்கள் குழு கோயிலை…

3 weeks ago