ஆழ்வார்பேட்டையில் உள்ள இந்த TANFED ஸ்டோரில் எண்ணெய்கள், தினை, தேன், மசாலா மற்றும் பல பொருட்கள் கிடைக்கிறது.

தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை கூட்டமைப்பு (TANFED) சமீபத்தில் ஆழ்வார்பேட்டையில் ஒரு அங்காடியைத் திறந்தது.

இந்த விற்பனை நிலையம் திருச்செங்கோடு, கொல்லிமலை, ஈரோடு, பெருந்துறை மற்றும் மாநிலத்தில் உள்ள ஒரு சில கூட்டுறவு சங்கங்களில் இருந்து திரட்டப்பட்ட விவசாயப் பொருட்களை விற்பனை செய்கிறது.

மரச்செக்கு தேங்காய் எண்ணெய், எள், நிலக்கடலை எண்ணெய்கள், பல பிராண்டுகளில் இந்த கடையில் நுழையும் போது உங்கள் கண்களை கவரும் வண்ணம் வைக்கப்பட்டுளள்து.

மார்த்தாண்டம் தேன் இங்கு வாங்குபவர்களிடையே மிகவும் பிரபலம் என்கிறார் விற்பனையாளர். இதன் விலை 200 கிராம் 87 ரூபாய்.

தேங்காய் எண்ணெய் ஒரு கிலோ 220 ரூபாயிலும், எள் எண்ணெய் விலை 380 ரூபாயிலும் தொடங்குகிறது.

சம்பா மிளகாய், சிவப்பு மிளகாய், இங்குள்ள மற்றொரு பிரபலமான தயாரிப்பு ஆகும்.

சுத்தமான தேங்காய் எண்ணெய் மற்றும் சில நறுமணப் பொருட்களின் கலவையில் கையால் செய்யப்பட்ட சோப்புகள் அலமாரிகளில் உள்ளன.

தினை, வரகு மற்றும் சாமை ஆகியவை கையிருப்பில் உள்ளது – அரை கிலோ 60 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. மாப்பிள்ளை சம்பா மற்றும் கருப்பு கவுனி அரிசியும் கிடைக்கிறது.

பச்சைப்பயறு மற்றும் உளுத்தம் பருப்பு, பிரவுன் சுகர், பில்டர் காபி பவுடர் போன்றவை இங்கு இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

இங்கு விற்கப்படும் அனைத்து பொருட்களும் ரசாயனம் பயன்படுத்தாமல் விளைவிக்கப்படுகின்றன என்கிறார் இந்தக் கடையின் பொறுப்பாளர்.

கொல்லிமலை மிளகு (250 கிராம் ரூ.150), ஜீரா, சுத்தமான மஞ்சள் தூள் மற்றும் நாட்டுப்புற வகைகளின் பல்வேறு மசாலா வகைகள் உள்ளன.

இந்த TANFED அங்காடி ஆஞ்சநேயர் கோவில் இருக்கும் வளாகத்தில் அமைந்துள்ளது. முகவரி எண் 181, லஸ் சர்ச் ரோடு, ஆழ்வார்பேட்டை. இங்கே தொலைபேசி எண்கள் இல்லை.

இந்த செய்தித்தாளில் எழுதக்கூடிய உங்கள் பகுதியில் உள்ள புதிய கடைகளைப் பற்றி எங்களிடம் கூறுங்கள். கடை பற்றிய குறிப்பை வாட்ஸ்அப் செய்யவும் – 8015005628

வி.சௌந்தரராணி

admin

Recent Posts

ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறப்பு. டோர் டெலிவரி வசதி உண்டு.

மந்தைவெளி தபால் நிலையத்திற்கு அருகிலுள்ள ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய விசாலமான மருந்தகத்தில்…

2 weeks ago

ஆழ்வார்பேட்டை கடையில் கைவினைப் பொருட்கள் விற்பனை. அக்டோபர் 19 வரை.

‘கலா உத்சவ்’ என்பது அக்டோபர் 19 வரை ஆழ்வார்பேட்டை கடையில் நடைபெறும் கைவினைக் கண்காட்சி மற்றும் விற்பனை ஆகும். இது…

2 weeks ago

மாணவர்களுக்கு மடிக்கணினிகளை நன்கொடையாக வழங்கிய ஆர்.ஏ.புரம் சமூகத்தினர்.

ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் சங்கம் (RAPRA) சில ஆண்டுகளாக இந்த சுற்றுப்புறத்தில் உள்ள சென்னை பள்ளிகள் மற்றும் அரசு உதவி…

2 weeks ago

மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி. காந்தியின் படைப்புகள் பற்றிய கருப்பொருள். தமிழில்.

ஆழ்வார்பேட்டை காந்தி அமைதி அறக்கட்டளை தனது அலுவலக வளாகத்தில், வரும் அக்டோபர் 2-ஆம் தேதி (மகாத்மா காந்தியின் 156-ஆம் ஜெயந்தியை…

3 weeks ago

நவராத்திரி 2025: ஸ்ரீ கபாலீஸ்வரர் கற்பகாம்பாள் கல்யாண மண்டபத்தில் பிரமாண்டமான கொலு

இந்து சமய அறநிலையத்துறை விவகாரங்களுக்கான மாநில அமைச்சர் பி.கே. சேகர் பாபு, செப்டம்பர் 22 மாலை மயிலாப்பூர் வெங்கடேச அக்ரஹாரத்…

3 weeks ago

வெங்கட்ரமணா ஆயுர்வேத மருந்தகத்தில் தீபாவளி லேகியம் விற்பனைக்கு தயார்.

தீபாவளி லேகியம் வாங்க இடம் தேடுகிறீர்களா? அதற்கு ஒரு சிறந்த இடம் மயிலாப்பூரில் உள்ள வெங்கட்ரமணா ஆயுர்வேத மருந்தகம். இது…

3 weeks ago