ஆழ்வார்பேட்டையில் உள்ள இந்த TANFED ஸ்டோரில் எண்ணெய்கள், தினை, தேன், மசாலா மற்றும் பல பொருட்கள் கிடைக்கிறது.

தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை கூட்டமைப்பு (TANFED) சமீபத்தில் ஆழ்வார்பேட்டையில் ஒரு அங்காடியைத் திறந்தது.

இந்த விற்பனை நிலையம் திருச்செங்கோடு, கொல்லிமலை, ஈரோடு, பெருந்துறை மற்றும் மாநிலத்தில் உள்ள ஒரு சில கூட்டுறவு சங்கங்களில் இருந்து திரட்டப்பட்ட விவசாயப் பொருட்களை விற்பனை செய்கிறது.

மரச்செக்கு தேங்காய் எண்ணெய், எள், நிலக்கடலை எண்ணெய்கள், பல பிராண்டுகளில் இந்த கடையில் நுழையும் போது உங்கள் கண்களை கவரும் வண்ணம் வைக்கப்பட்டுளள்து.

மார்த்தாண்டம் தேன் இங்கு வாங்குபவர்களிடையே மிகவும் பிரபலம் என்கிறார் விற்பனையாளர். இதன் விலை 200 கிராம் 87 ரூபாய்.

தேங்காய் எண்ணெய் ஒரு கிலோ 220 ரூபாயிலும், எள் எண்ணெய் விலை 380 ரூபாயிலும் தொடங்குகிறது.

சம்பா மிளகாய், சிவப்பு மிளகாய், இங்குள்ள மற்றொரு பிரபலமான தயாரிப்பு ஆகும்.

சுத்தமான தேங்காய் எண்ணெய் மற்றும் சில நறுமணப் பொருட்களின் கலவையில் கையால் செய்யப்பட்ட சோப்புகள் அலமாரிகளில் உள்ளன.

தினை, வரகு மற்றும் சாமை ஆகியவை கையிருப்பில் உள்ளது – அரை கிலோ 60 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. மாப்பிள்ளை சம்பா மற்றும் கருப்பு கவுனி அரிசியும் கிடைக்கிறது.

பச்சைப்பயறு மற்றும் உளுத்தம் பருப்பு, பிரவுன் சுகர், பில்டர் காபி பவுடர் போன்றவை இங்கு இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

இங்கு விற்கப்படும் அனைத்து பொருட்களும் ரசாயனம் பயன்படுத்தாமல் விளைவிக்கப்படுகின்றன என்கிறார் இந்தக் கடையின் பொறுப்பாளர்.

கொல்லிமலை மிளகு (250 கிராம் ரூ.150), ஜீரா, சுத்தமான மஞ்சள் தூள் மற்றும் நாட்டுப்புற வகைகளின் பல்வேறு மசாலா வகைகள் உள்ளன.

இந்த TANFED அங்காடி ஆஞ்சநேயர் கோவில் இருக்கும் வளாகத்தில் அமைந்துள்ளது. முகவரி எண் 181, லஸ் சர்ச் ரோடு, ஆழ்வார்பேட்டை. இங்கே தொலைபேசி எண்கள் இல்லை.

இந்த செய்தித்தாளில் எழுதக்கூடிய உங்கள் பகுதியில் உள்ள புதிய கடைகளைப் பற்றி எங்களிடம் கூறுங்கள். கடை பற்றிய குறிப்பை வாட்ஸ்அப் செய்யவும் – 8015005628

வி.சௌந்தரராணி

admin

Recent Posts

பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் எழுதவிருக்கும் மாணவர்களுக்காக சிறப்பு ஹோமம்.

பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் எழுதவிருக்கும் மாணவர்களுக்காக, ஸ்ரீ வேதாந்த தேசிகர் தேவஸ்தானம் பிப்ரவரி 7…

1 day ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் தெப்பத்திருவிழா ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது; குளத்தில் திரளான பக்தர்கள் குவிந்தனர்

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் மூன்று நாள் தைப்பூசத் தெப்பத்திருவிழா ஞாயிற்றுக்கிழமை மாலை (பிப்ரவரி 1) தொடங்கியது. கபாலீஸ்வரப் பெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட…

2 days ago

நாகேஸ்வர ராவ் பூங்காவிற்குள் பூச்சிகளால் அரிக்கப்பட்டிருந்த சில பழமையான மரங்கள் வெட்டப்பட்டுள்ளது.

லஸ் அவென்யூவில் உள்ள நாகேஸ்வர ராவ் பூங்காவின் ஒரு பகுதி இப்போது ஒரு வறண்ட மைதானம் போல் காட்சியளிக்கிறது. செவ்வாய்க்கிழமை…

1 week ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவில் தெப்பத் திருவிழா பிப்ரவரி 1 முதல் 3 வரை

2026 ஆம் ஆண்டுக்கான ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் மூன்று நாள் தெப்பத் திருவிழா பிப்ரவரி 1 முதல் 3 வரை…

2 weeks ago

செயின்ட் பீட்ஸ் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு ஜனவரி 26ல் நடைபெறுகிறது.

101வது பழைய பீடியன்ஸ் அஸோஸியேஷனின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு, ஜனவரி 26 அன்று சாந்தோம், செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ-இந்தியன் மேல்நிலைப்…

2 weeks ago

சாய் பாபா கோவில் அருகே பொங்கலுக்கான பானைகள் விற்பனை.

உங்கள் பொங்கல் கொண்டாட்டத்திற்காக அழகாக வடிவமைக்கப்பட்ட மண்பானைகளைத் தேடுகிறீர்களா? அப்படியானால், இங்குள்ள சாய் பாபா கோவில் அருகே வெங்கடேச அக்ரஹாரம்…

3 weeks ago