இந்த விற்பனை நிலையம் திருச்செங்கோடு, கொல்லிமலை, ஈரோடு, பெருந்துறை மற்றும் மாநிலத்தில் உள்ள ஒரு சில கூட்டுறவு சங்கங்களில் இருந்து திரட்டப்பட்ட விவசாயப் பொருட்களை விற்பனை செய்கிறது.
மரச்செக்கு தேங்காய் எண்ணெய், எள், நிலக்கடலை எண்ணெய்கள், பல பிராண்டுகளில் இந்த கடையில் நுழையும் போது உங்கள் கண்களை கவரும் வண்ணம் வைக்கப்பட்டுளள்து.
மார்த்தாண்டம் தேன் இங்கு வாங்குபவர்களிடையே மிகவும் பிரபலம் என்கிறார் விற்பனையாளர். இதன் விலை 200 கிராம் 87 ரூபாய்.
தேங்காய் எண்ணெய் ஒரு கிலோ 220 ரூபாயிலும், எள் எண்ணெய் விலை 380 ரூபாயிலும் தொடங்குகிறது.
சம்பா மிளகாய், சிவப்பு மிளகாய், இங்குள்ள மற்றொரு பிரபலமான தயாரிப்பு ஆகும்.
சுத்தமான தேங்காய் எண்ணெய் மற்றும் சில நறுமணப் பொருட்களின் கலவையில் கையால் செய்யப்பட்ட சோப்புகள் அலமாரிகளில் உள்ளன.
தினை, வரகு மற்றும் சாமை ஆகியவை கையிருப்பில் உள்ளது – அரை கிலோ 60 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. மாப்பிள்ளை சம்பா மற்றும் கருப்பு கவுனி அரிசியும் கிடைக்கிறது.
பச்சைப்பயறு மற்றும் உளுத்தம் பருப்பு, பிரவுன் சுகர், பில்டர் காபி பவுடர் போன்றவை இங்கு இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
இங்கு விற்கப்படும் அனைத்து பொருட்களும் ரசாயனம் பயன்படுத்தாமல் விளைவிக்கப்படுகின்றன என்கிறார் இந்தக் கடையின் பொறுப்பாளர்.
கொல்லிமலை மிளகு (250 கிராம் ரூ.150), ஜீரா, சுத்தமான மஞ்சள் தூள் மற்றும் நாட்டுப்புற வகைகளின் பல்வேறு மசாலா வகைகள் உள்ளன.
இந்த TANFED அங்காடி ஆஞ்சநேயர் கோவில் இருக்கும் வளாகத்தில் அமைந்துள்ளது. முகவரி எண் 181, லஸ் சர்ச் ரோடு, ஆழ்வார்பேட்டை. இங்கே தொலைபேசி எண்கள் இல்லை.
இந்த செய்தித்தாளில் எழுதக்கூடிய உங்கள் பகுதியில் உள்ள புதிய கடைகளைப் பற்றி எங்களிடம் கூறுங்கள். கடை பற்றிய குறிப்பை வாட்ஸ்அப் செய்யவும் – 8015005628
வி.சௌந்தரராணி
ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் பங்குனி திருவிழாவிற்கான முக்கிய பூஜை இது. இது ஒரு நீண்ட பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது. விழாவை சிறப்பாக…
நீண்ட ரமலான் மாதத்திற்குப் பிறகு கொண்டாடப்படும் ஈகைத் திருநாள் பண்டிகையை முன்னிட்டு, இந்த சனிக்கிழமை காலை மயிலாப்பூர் பகுதியில் உள்ள…
'இணையக் குற்றங்களில் பண இழப்பு: தடுப்பு முறைகளும் பாதுகாப்பு நடவடிக்கைகளும்' – இதுவே, 'சென்னை ஃப்ரெண்ட்ஸ் ஃபோரம்' (Chennai Friends…
நந்தலாலா மருத்துவ அறக்கட்டளையின் சார்பில் மார்ச் 22 அன்று காலை 9:30 மணி முதல் பிற்பகல் 12:30 மணி வரை…
ஸ்பீடு போஸ்ட் மூலம் பதிவு செய்யப்படும் கடிதங்கள் அல்லது உறைகள், முக்கிய நகரங்களுக்கு 24 மணி நேரத்திற்குள் விநியோகிக்கப்படும் என்று…
மயிலாப்பூரில் அமைந்துள்ள ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஆலயத்தின் மகா சம்ப்ரோக்ஷணம் (குடமுழக்கு விழா), திங்கள்கிழமை, மார்ச் 16 அன்று காலை…