மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் இன்று காலை இந்த ஆண்டுக்கான பங்குனி திருவிழாவின் கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சுமார் இருநூறு நபர்கள் கலந்து கொண்டனர். கலந்துகொண்டவர்களில் சுமார் எண்பது சதவீதத்தினர் முகக்கவசங்கள் அணிந்திருந்தனர். முகக்கவசம் அணிவது சம்பந்தமாக பொதுமக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் கோவில் நிர்வாகத்தினர் அறிவுறுத்தி வந்தனர்.
இன்று காலை சுமார் ஒன்பது மணியளவில் முதல் முதலாக கொரோனா ஊரடங்கிற்கு பிறகு சுவாமி மாட வீதிகளில் ஊர்வலம்வந்தது. பங்குனி பெருவிழாவின் தொடக்க நிகழ்ச்சியான கிராம தேவதை பூஜை நேற்று மதியம் கோலவிழியம்மன் கோவிலில் நடைபெற்றது. பின்பு இரவு விநாயகர் உற்சவம் கபாலீஸ்வரர் கோவிலில் சிறப்பாக நடைபெற்றது.
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்போர் சங்கம் (RAPRA) சென்னை (ஜிசிசி) மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் வசதி குறைந்த…
இந்த கோடை சிலருக்கு ஒரு வாய்ப்பு. வீட்டில் ஊறுகாய், வத்தல், பப்படம்ஸ் தயாரிப்பதில் மும்முரமாக இருப்பவர்கள், இந்த வெயிலையும் நன்றாகப்…
ஆர் கே மட சாலையில் அண்ணா விலாஸ் உணவகம் அருகே செயல்பட்டு வந்த தற்காலிக எம்டிசி பேருந்து நிறுத்தம் மாற்றப்பட்டுள்ளது.…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ., தா.வேலு கடந்த வார இறுதியில் மயிலாப்பூர் சித்திரகுளம் அருகே பொதுமக்களுக்காக குடிநீர் பந்தலை திறந்து வைத்தார். தேவைப்படுபவர்களுக்கு…
கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு மெட்ரோ ரயில் பாதை பணியின் காரணமாக பேருந்துகள் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டது. எம்டிசி பேருந்து நிறுத்தங்களில்…
பட்டினப்பாக்கத்தில் உள்ள மெரினா லூப் சாலை மற்றும் டாக்டர் டி.ஜி.எஸ்.தினகரன் சாலை சந்திப்பில் வெள்ளிக்கிழமை சாலை மறியல் சம்பவம் நடந்தது,…