பங்குனி பெருவிழாவிற்காக கபாலீஸ்வரர் கோவில் நிர்வாகமும் உள்ளூர் காவல்துறையினரும் சில விதிமுறைகளை பொதுமக்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். முதலாவதாக கோவிலுக்கு வரும் அனைவரும் முகக்கவசம் கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும். பின்பு கோவில் வாயில் அருகே வைத்திருக்கும் சானிடைசர் கொண்டு கைகளை சுத்தமாக கழுவ வேண்டும்.
அறுபத்து மூவர் விழா அன்று எப்பொழுதும் நடைபெறும் தெருக்களில் பிரசாதங்கள் வழங்குவது, அன்னதானம் போடுவது, போன்றவற்றிற்கு தடை விதிக்கப்படவுள்ளது. தேர் திருவிழா, அறுபத்திமூவர் விழா சுவாமி ஊர்வலம் எப்பொழுதும் போல நடைபெறும். ஆனால் அர்ச்சனைகள் பொதுமக்களிடமிருந்து பெறப்படாது. சுவாமி வழிகளில் எப்பொழுதும் போல நிற்காது. தேர் திருவிழா மற்றும் அறுபத்து மூவர் விழா அன்று கோவிலுக்குள் பொதுமக்கள் செல்ல சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். தேர் திருவிழா மற்றும் அறுபத்து மூவர் விழா அன்று ராயப்பேட்டை நெடுஞ்சாலை போக்குவரத்து வழக்கம் போல சில மணி நேரம் நிறுத்தப்படும்.
பழங்கால தமிழ் திரைப்பட இசையை ரசிப்பவரா நீங்கள்? அப்படியானால் இந்தக் கச்சேரி உங்களுக்கானது. கே.ஆர்.எஸ் ஆர்கெஸ்ட்ரா, ‘தமிழ் மெலடீஸ்’ என்ற…
மியூசிக் கம்போசர் முத்துசுவாமி தீட்சிதரின் 249வது ஜெயந்தி உற்சவத்தின் வீணாவாதினியின் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, ‘சுபகர காவேரி தீரா’ (காவேரி…
தமிழ்நாட்டின் பழமையான கோவில்கள்; இந்த வார இறுதியில் தத்வலோகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட டாக்டர் சித்ரா மாதவன் (வரலாற்று ஆய்வாளர், ஆசிரியர்)…
ஆர்.ஏ புரத்தில் உள்ள SNEHA, தற்கொலை தடுப்பு சமூக அமைப்பானது, ஏப்ரல் 25 அன்று தற்கொலைக்குப் பிறகு ஆதரவு (SAS)…
சாகித்ய அகாடமி வெற்றியாளர் இமயத்தின் தமிழ் சிறுகதைகளை தழுவி பிரசன்னா ராமசாமி இயக்கிய நாடக அரங்கேற்றம் ஏப்ரல் 27 அன்று…
லஸ் மண்டலத்தில் பணிபுரியும் சென்னை மெட்ரோவின் ஒப்பந்ததாரர் திருமயிலை எம்ஆர்டிஎஸ் ரயில் நிலையம் எதிரே உள்ள ராமகிருஷ்ண மடம் சாலையில்…