பங்குனி பெருவிழாவிற்காக கபாலீஸ்வரர் கோவில் நிர்வாகமும் உள்ளூர் காவல்துறையினரும் சில விதிமுறைகளை பொதுமக்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். முதலாவதாக கோவிலுக்கு வரும் அனைவரும் முகக்கவசம் கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும். பின்பு கோவில் வாயில் அருகே வைத்திருக்கும் சானிடைசர் கொண்டு கைகளை சுத்தமாக கழுவ வேண்டும்.
அறுபத்து மூவர் விழா அன்று எப்பொழுதும் நடைபெறும் தெருக்களில் பிரசாதங்கள் வழங்குவது, அன்னதானம் போடுவது, போன்றவற்றிற்கு தடை விதிக்கப்படவுள்ளது. தேர் திருவிழா, அறுபத்திமூவர் விழா சுவாமி ஊர்வலம் எப்பொழுதும் போல நடைபெறும். ஆனால் அர்ச்சனைகள் பொதுமக்களிடமிருந்து பெறப்படாது. சுவாமி வழிகளில் எப்பொழுதும் போல நிற்காது. தேர் திருவிழா மற்றும் அறுபத்து மூவர் விழா அன்று கோவிலுக்குள் பொதுமக்கள் செல்ல சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். தேர் திருவிழா மற்றும் அறுபத்து மூவர் விழா அன்று ராயப்பேட்டை நெடுஞ்சாலை போக்குவரத்து வழக்கம் போல சில மணி நேரம் நிறுத்தப்படும்.
இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…
இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…
மந்தைவெளி, ஆர்.கே. நகரில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசித் திட்டத்திற்கான சேவையை மேலும்…
மயிலாப்பூர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர். நடராஜ் அதிகாரப்பூர்வமாக த.வெ.க (TVK) கட்சியில் இணைந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…
மயிலாப்பூர் இந்து பர்மனன்ட் பண்ட் விவகாரம்: வைப்புதாரர்கள் எம்.எல்.ஏ.விடம் முக்கிய கோரிக்கைகள்: தமிழ்நாடு காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு (EOW) தாமதமாகி…
மயிலாப்பூரில் உள்ள இராணி மேரி கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில், கவனம் பெற வேண்டிய சில சிறப்புப்…