மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் இன்று காலை இந்த ஆண்டுக்கான பங்குனி திருவிழாவின் கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சுமார் இருநூறு நபர்கள் கலந்து கொண்டனர். கலந்துகொண்டவர்களில் சுமார் எண்பது சதவீதத்தினர் முகக்கவசங்கள் அணிந்திருந்தனர். முகக்கவசம் அணிவது சம்பந்தமாக பொதுமக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் கோவில் நிர்வாகத்தினர் அறிவுறுத்தி வந்தனர்.
இன்று காலை சுமார் ஒன்பது மணியளவில் முதல் முதலாக கொரோனா ஊரடங்கிற்கு பிறகு சுவாமி மாட வீதிகளில் ஊர்வலம்வந்தது. பங்குனி பெருவிழாவின் தொடக்க நிகழ்ச்சியான கிராம தேவதை பூஜை நேற்று மதியம் கோலவிழியம்மன் கோவிலில் நடைபெற்றது. பின்பு இரவு விநாயகர் உற்சவம் கபாலீஸ்வரர் கோவிலில் சிறப்பாக நடைபெற்றது.
ஆர்.ஏ. புரத்தில் ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான பரந்த நிலப்பகுதியின் பெரும்பகுதி சமப்படுத்தப்பட்டு, புதிய மருத்துவமனை ஒன்றை அமைப்பதற்கான பணிகள்…
E1 மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று வாராந்திர குறைகேட்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காவல் உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மற்றும்…
மெரினா கடற்கரையில் மற்றொரு 'ப்ளூ ஃபிளாக்' பகுதிக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது கலங்கரை விளக்கத்திற்கு அருகிலும், காமராஜர்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ.-வும் மாநில அமைச்சருமான பி. வெங்கடரமணன், ஆழ்வார்பேட்டையில் தனது அலுவலகத்தைத் திறந்ததிலிருந்து, அப்பகுதி மக்கள், சமூகத் தலைவர்கள் மற்றும்…
இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…
இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…