மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் இன்று காலை இந்த ஆண்டுக்கான பங்குனி திருவிழாவின் கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சுமார் இருநூறு நபர்கள் கலந்து கொண்டனர். கலந்துகொண்டவர்களில் சுமார் எண்பது சதவீதத்தினர் முகக்கவசங்கள் அணிந்திருந்தனர். முகக்கவசம் அணிவது சம்பந்தமாக பொதுமக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் கோவில் நிர்வாகத்தினர் அறிவுறுத்தி வந்தனர்.
இன்று காலை சுமார் ஒன்பது மணியளவில் முதல் முதலாக கொரோனா ஊரடங்கிற்கு பிறகு சுவாமி மாட வீதிகளில் ஊர்வலம்வந்தது. பங்குனி பெருவிழாவின் தொடக்க நிகழ்ச்சியான கிராம தேவதை பூஜை நேற்று மதியம் கோலவிழியம்மன் கோவிலில் நடைபெற்றது. பின்பு இரவு விநாயகர் உற்சவம் கபாலீஸ்வரர் கோவிலில் சிறப்பாக நடைபெற்றது.
இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…
இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…
மந்தைவெளி, ஆர்.கே. நகரில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசித் திட்டத்திற்கான சேவையை மேலும்…
மயிலாப்பூர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர். நடராஜ் அதிகாரப்பூர்வமாக த.வெ.க (TVK) கட்சியில் இணைந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…
மயிலாப்பூர் இந்து பர்மனன்ட் பண்ட் விவகாரம்: வைப்புதாரர்கள் எம்.எல்.ஏ.விடம் முக்கிய கோரிக்கைகள்: தமிழ்நாடு காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு (EOW) தாமதமாகி…
மயிலாப்பூரில் உள்ள இராணி மேரி கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில், கவனம் பெற வேண்டிய சில சிறப்புப்…