கொரோனா தொற்று பரவி வரும் சூழ்நிலையில் பங்குனி திருவிழாவிற்கான ஏற்பாடுகள் வேகமாக நடைபெற்றுவருகிறது

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் இந்த வருட பங்குனி பிரம்மோற்சவ திருவிழா நாளை மதியம் ஊர்க்காவல் தேவதை பூஜையுடன் கோலவிழியம்மன் கோவிலில் நடைபெறவுள்ளது. இது பங்குனி திருவிழாவின் முதல் நிகழ்ச்சியாகும். இதற்கு அடுத்தபடியாக வெள்ளிக்கிழமை காலை 6.30 மணியளவில் கோவிலில் பங்குனி திருவிழா கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

திருவிழாவை முன்னிட்டு கோவில்களில் கொடிகள், திரை சிலைகள் மற்றும் சுவாமி வீதி உலா வாகனங்கள் சரி செய்யும் பணிகள் சுறுசுறுப்பாக நடைபெற்றுவருகிறது. இந்த பங்குனி திருவிழா நேரத்தில் தேனாம்பேட்டை மயிலாப்பூர் மண்டலத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவது கவலையளிப்பதாக உள்ளது.
சில பேர் இந்த திருவிழாவை தள்ளிவைத்திருக்கலாம் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். சிலர் தேர்த்திருவிழாவும், அறுபத்து மூவர் வீதி உலாவும் குறைந்த அளவிலான மக்கள் பங்கேற்கும் வகையில் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் இதுபற்றி பொதுமக்கள் பேசி வருகிறார்களே தவிர கொரோனா விதிமுறைகளை யாரும் பின்பற்றுவதில்லை. கோவில்களுக்கு வருபவர்கள் தற்போது பெரும்பாலும் முகக்கவசம் அணிந்து வருவதில்லை.

admin

Recent Posts

சாய்பாபா கோயில் அருகே ECR-லிருந்து கொண்டுவரப்பட்ட நுங்குகள் விற்பனை

இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…

2 weeks ago

இராணி மேரி கல்லூரியில் சேர்க்கை இன்னும் நடைபெறுகிறது.

இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…

2 weeks ago

கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசித் திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது – இத்தகவலைப் பகிரவும்

மந்தைவெளி, ஆர்.கே. நகரில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசித் திட்டத்திற்கான சேவையை மேலும்…

2 weeks ago

முன்னாள் மயிலாப்பூர் எம்.எல்.ஏ. TVK-வில் இணைந்தார்

மயிலாப்பூர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர். நடராஜ் அதிகாரப்பூர்வமாக த.வெ.க (TVK) கட்சியில் இணைந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…

3 weeks ago

மயிலாப்பூர் இந்து பர்மனன்ட் பண்ட் சம்பந்தமான வழக்கு: வைப்புதாரர்கள் எம்.எல்.ஏ.விடம் மனு

மயிலாப்பூர் இந்து பர்மனன்ட் பண்ட் விவகாரம்: வைப்புதாரர்கள் எம்.எல்.ஏ.விடம் முக்கிய கோரிக்கைகள்: தமிழ்நாடு காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு (EOW) தாமதமாகி…

3 weeks ago

இராணி மேரி கல்லூரி மாணவர் சேர்க்கை: இசைப் பட்டப்படிப்புக்கு வயது வரம்பு 40 ஆக உயர்வு.

மயிலாப்பூரில் உள்ள இராணி மேரி கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில், கவனம் பெற வேண்டிய சில சிறப்புப்…

4 weeks ago