தொல்காப்பியப் பூங்காவின் உள்ளே நடக்க நிர்ணயிக்கப்பட்டுள்ள மாதாந்திர கட்டணங்களைக் குறைக்க மக்கள் பரிந்துரை.

ஆர்.ஏ.புரத்தில் உள்ள தொல்காப்பியப் பூங்காவிற்குள் (அடையார் பூங்கா) நடைபயணம் மேற்கொள்வதற்க்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை குறைக்கலாம், என்று மயிலாப்பூர் மண்டலத்தில் வசிக்கும் சிலர், சென்னை நதிகள் மறுசீரமைப்பு அறக்கட்டளைக்கு (சிஆர்ஆர்டி) பரிந்துரைக்கின்றனர்.

இங்கு நடைபயிற்சி செய்பவர்கள் குறைந்த வருமானம் கொண்ட மூத்த குடிமக்கள் என்பதாலும், இது அரசால் நிர்வகிக்கப்படும் இடம் என்பதாலும், சென்னை நதிகள் மறுசீரமைப்பு அறக்கட்டளை மாதாந்திர பாஸ்களுக்கான கட்டணங்களைக் குறைக்கலாம் என்று அவர்கள் கூறுகிறார்கள்.

ரேகா சுரேஷ் குமார் கூறுகையில், “பூங்காவில் நடப்பதற்கான வசதியை நாங்கள் வரவேற்கிறோம், ஆனால் கட்டணம் அதிகம், குறிப்பாக மூத்த குடிமக்கள், ஓய்வூதியத்தில் வாழ்கிறார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, நடைபயிற்சி செய்பவர்கள் பெரும்பாலும் மூத்த குடிமக்கள்!

ஸ்ரீராம் சந்தானம் கூறுகையில், ”வழக்கமாக நடந்து செல்பவர்களுக்கான நுழைவுக் கட்டணத்தைக் குறைப்பது குறித்து பூங்கா நிர்வாகம் பரிசீலிக்கலாம்”என்றார்.

குறிப்பிட்ட மணிநேரங்களுக்கு பூங்கா நடைபயிற்சிக்கு திறந்திருப்பதால், மே மாதத்தின் நடுப்பகுதியில் காலையிலும் மாலையிலும், மக்கள் சாதாரண நடைப்பயிற்சியாளர்களாக நடந்து செல்கின்றனர், மேலும் பாஸ் வாங்க வருபவர்கள் மெதுவாகத்தான் வருகிறார்கள்.

பூங்காவில் நடைபயிற்சி தொடங்குவது மற்றும் நீங்கள் பாஸ் பெறுவது பற்றிய முந்தைய அறிக்கையை இங்கே படிக்கவும்.

இங்கு பயன்படுத்தப்பட்டுள்ள புகைப்படங்கள் காயத்ரீ கிருஷ்ணா சமீபத்தில் வாக்கிங் சென்றபோது எடுத்தது.

admin

Recent Posts

ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஆலய மகா சம்ப்ரோக்ஷணம் சிறப்பாக நடைபெற்றது.

மயிலாப்பூரில் அமைந்துள்ள ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஆலயத்தின் மகா சம்ப்ரோக்ஷணம் (குடமுழக்கு விழா), திங்கள்கிழமை, மார்ச் 16 அன்று காலை…

2 days ago

2026 தேர்தல்: பொது இடங்களில் உள்ள அரசு சார்ந்த விளம்பரங்கள் மற்றும் அறிவிப்புகளை மறைக்கும் பணியாளர்கள்.

தமிழக சட்டமன்றத் தேர்தல்கள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மார்ச் 15 மாலை முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. அரசு…

3 days ago

தொல்காப்பியப் பூங்காவின் முகத்துவாரப் பகுதி வற்றி வருகிறதா?

தொல்காப்பியப் பூங்காவின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள அடையாறு முகத்துவாரம் வற்றி வருகிறது. பூங்காவின் கிழக்குப் பகுதியிலிருந்து, அலைகளின் மூலம் வரும்…

3 days ago

ஸ்ரீ வேதாந்த தேசிகர் கோயிலின் மகா சம்ப்ரோக்ஷணம்: மார்ச் 16

ஸ்ரீ வேதாந்த தேசிகர் கோயிலின் மகா சம்ப்ரோக்ஷணம் (கும்பாபிஷேகம்), திங்கட்கிழமை, மார்ச் 16 அன்று காலை 9 மணி முதல்…

6 days ago

இயற்கை விவசாய முறையில் விளைவிக்கப்பட்ட அரிசி, அரிசி பொருட்கள் விற்பனை.

மயிலாப்பூர் வாரன் சாலையில் வசிக்கும் அதிதி, 2025 முதல் பாரம்பரிய நெல் வகைகளின் இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டுள்ளார். அவர் அரிசி…

6 days ago

சட்டம், மேலாண்மை படிப்புகளுக்கான ஆலோசனை.

அபிராமபுரத்தில் அமைந்துள்ள கேரியர் லாஞ்சர் நிறுவனம், மார்ச் 15 ஞாயிற்றுக்கிழமை மதியம் 12:30 மணிக்கு 9, 10 மற்றும் 11…

6 days ago