தொல்காப்பியப் பூங்காவின் உள்ளே நடக்க நிர்ணயிக்கப்பட்டுள்ள மாதாந்திர கட்டணங்களைக் குறைக்க மக்கள் பரிந்துரை.

ஆர்.ஏ.புரத்தில் உள்ள தொல்காப்பியப் பூங்காவிற்குள் (அடையார் பூங்கா) நடைபயணம் மேற்கொள்வதற்க்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை குறைக்கலாம், என்று மயிலாப்பூர் மண்டலத்தில் வசிக்கும் சிலர், சென்னை நதிகள் மறுசீரமைப்பு அறக்கட்டளைக்கு (சிஆர்ஆர்டி) பரிந்துரைக்கின்றனர்.

இங்கு நடைபயிற்சி செய்பவர்கள் குறைந்த வருமானம் கொண்ட மூத்த குடிமக்கள் என்பதாலும், இது அரசால் நிர்வகிக்கப்படும் இடம் என்பதாலும், சென்னை நதிகள் மறுசீரமைப்பு அறக்கட்டளை மாதாந்திர பாஸ்களுக்கான கட்டணங்களைக் குறைக்கலாம் என்று அவர்கள் கூறுகிறார்கள்.

ரேகா சுரேஷ் குமார் கூறுகையில், “பூங்காவில் நடப்பதற்கான வசதியை நாங்கள் வரவேற்கிறோம், ஆனால் கட்டணம் அதிகம், குறிப்பாக மூத்த குடிமக்கள், ஓய்வூதியத்தில் வாழ்கிறார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, நடைபயிற்சி செய்பவர்கள் பெரும்பாலும் மூத்த குடிமக்கள்!

ஸ்ரீராம் சந்தானம் கூறுகையில், ”வழக்கமாக நடந்து செல்பவர்களுக்கான நுழைவுக் கட்டணத்தைக் குறைப்பது குறித்து பூங்கா நிர்வாகம் பரிசீலிக்கலாம்”என்றார்.

குறிப்பிட்ட மணிநேரங்களுக்கு பூங்கா நடைபயிற்சிக்கு திறந்திருப்பதால், மே மாதத்தின் நடுப்பகுதியில் காலையிலும் மாலையிலும், மக்கள் சாதாரண நடைப்பயிற்சியாளர்களாக நடந்து செல்கின்றனர், மேலும் பாஸ் வாங்க வருபவர்கள் மெதுவாகத்தான் வருகிறார்கள்.

பூங்காவில் நடைபயிற்சி தொடங்குவது மற்றும் நீங்கள் பாஸ் பெறுவது பற்றிய முந்தைய அறிக்கையை இங்கே படிக்கவும்.

இங்கு பயன்படுத்தப்பட்டுள்ள புகைப்படங்கள் காயத்ரீ கிருஷ்ணா சமீபத்தில் வாக்கிங் சென்றபோது எடுத்தது.

admin

Recent Posts

புதுப்பிக்கப்பட்ட தொல்காப்பியா பூங்கா மீண்டும் திறப்பு. பார்வையாளர்கள் மற்றும் பள்ளி/கல்லூரி குழுக்கள் பார்வையிடலாம்.

ஆர்.ஏ. புரத்தில் உள்ள இயற்கை காப்பகமான தொல்காப்பியா பூங்கா முறையாக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 24 வெள்ளிக்கிழமை காலை டி.ஜி.எஸ்.…

5 days ago

ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறப்பு. டோர் டெலிவரி வசதி உண்டு.

மந்தைவெளி தபால் நிலையத்திற்கு அருகிலுள்ள ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய விசாலமான மருந்தகத்தில்…

3 weeks ago

ஆழ்வார்பேட்டை கடையில் கைவினைப் பொருட்கள் விற்பனை. அக்டோபர் 19 வரை.

‘கலா உத்சவ்’ என்பது அக்டோபர் 19 வரை ஆழ்வார்பேட்டை கடையில் நடைபெறும் கைவினைக் கண்காட்சி மற்றும் விற்பனை ஆகும். இது…

3 weeks ago

மாணவர்களுக்கு மடிக்கணினிகளை நன்கொடையாக வழங்கிய ஆர்.ஏ.புரம் சமூகத்தினர்.

ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் சங்கம் (RAPRA) சில ஆண்டுகளாக இந்த சுற்றுப்புறத்தில் உள்ள சென்னை பள்ளிகள் மற்றும் அரசு உதவி…

4 weeks ago

மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி. காந்தியின் படைப்புகள் பற்றிய கருப்பொருள். தமிழில்.

ஆழ்வார்பேட்டை காந்தி அமைதி அறக்கட்டளை தனது அலுவலக வளாகத்தில், வரும் அக்டோபர் 2-ஆம் தேதி (மகாத்மா காந்தியின் 156-ஆம் ஜெயந்தியை…

1 month ago

நவராத்திரி 2025: ஸ்ரீ கபாலீஸ்வரர் கற்பகாம்பாள் கல்யாண மண்டபத்தில் பிரமாண்டமான கொலு

இந்து சமய அறநிலையத்துறை விவகாரங்களுக்கான மாநில அமைச்சர் பி.கே. சேகர் பாபு, செப்டம்பர் 22 மாலை மயிலாப்பூர் வெங்கடேச அக்ரஹாரத்…

1 month ago