தொல்காப்பியப் பூங்காவின் உள்ளே நடக்க நிர்ணயிக்கப்பட்டுள்ள மாதாந்திர கட்டணங்களைக் குறைக்க மக்கள் பரிந்துரை.

ஆர்.ஏ.புரத்தில் உள்ள தொல்காப்பியப் பூங்காவிற்குள் (அடையார் பூங்கா) நடைபயணம் மேற்கொள்வதற்க்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை குறைக்கலாம், என்று மயிலாப்பூர் மண்டலத்தில் வசிக்கும் சிலர், சென்னை நதிகள் மறுசீரமைப்பு அறக்கட்டளைக்கு (சிஆர்ஆர்டி) பரிந்துரைக்கின்றனர்.

இங்கு நடைபயிற்சி செய்பவர்கள் குறைந்த வருமானம் கொண்ட மூத்த குடிமக்கள் என்பதாலும், இது அரசால் நிர்வகிக்கப்படும் இடம் என்பதாலும், சென்னை நதிகள் மறுசீரமைப்பு அறக்கட்டளை மாதாந்திர பாஸ்களுக்கான கட்டணங்களைக் குறைக்கலாம் என்று அவர்கள் கூறுகிறார்கள்.

ரேகா சுரேஷ் குமார் கூறுகையில், “பூங்காவில் நடப்பதற்கான வசதியை நாங்கள் வரவேற்கிறோம், ஆனால் கட்டணம் அதிகம், குறிப்பாக மூத்த குடிமக்கள், ஓய்வூதியத்தில் வாழ்கிறார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, நடைபயிற்சி செய்பவர்கள் பெரும்பாலும் மூத்த குடிமக்கள்!

ஸ்ரீராம் சந்தானம் கூறுகையில், ”வழக்கமாக நடந்து செல்பவர்களுக்கான நுழைவுக் கட்டணத்தைக் குறைப்பது குறித்து பூங்கா நிர்வாகம் பரிசீலிக்கலாம்”என்றார்.

குறிப்பிட்ட மணிநேரங்களுக்கு பூங்கா நடைபயிற்சிக்கு திறந்திருப்பதால், மே மாதத்தின் நடுப்பகுதியில் காலையிலும் மாலையிலும், மக்கள் சாதாரண நடைப்பயிற்சியாளர்களாக நடந்து செல்கின்றனர், மேலும் பாஸ் வாங்க வருபவர்கள் மெதுவாகத்தான் வருகிறார்கள்.

பூங்காவில் நடைபயிற்சி தொடங்குவது மற்றும் நீங்கள் பாஸ் பெறுவது பற்றிய முந்தைய அறிக்கையை இங்கே படிக்கவும்.

இங்கு பயன்படுத்தப்பட்டுள்ள புகைப்படங்கள் காயத்ரீ கிருஷ்ணா சமீபத்தில் வாக்கிங் சென்றபோது எடுத்தது.

admin

Recent Posts

ஆட்டோ ஓட்டுநர்கள், தூய்மை பணியாளர்களுக்கான இலவச கண் பரிசோதனை முகாம். ஆகஸ்ட்.31

ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை ஐடி சிட்டி, ஸ்ரீ ரமணா கண் மையம் மற்றும் ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் நல…

3 weeks ago

இலவச கண் பரிசோதனை முகாம். ஜூலை 27

ஜெயா கண் மருத்துவமனை ஜூலை 27 (ஞாயிற்றுக்கிழமை) அன்று கல்யாண நகர் சங்க வளாகத்தில் - எண்.29, டி.எம்.எஸ். சாலை,…

2 months ago

மெட்ராஸ் தினம் 2025: பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டி. பள்ளி மாணவர்களுக்கு

மெட்ராஸ் தினம் 2025 க்கு, மயிலாப்பூர் டைம்ஸ் பள்ளி அணிகளுக்கான வருடாந்திர பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டியை அறிவித்துள்ளது. இந்தப் போட்டியின்…

2 months ago

111வது ஆண்டில் இராணி மேரி கல்லூரி. எளிய, மகிழ்ச்சியான கொண்டாட்டங்கள்.

இராணி மேரி கல்லூரி வளாகத்தில் இன்று திங்கட்கிழமை காலை ஒரு எளிமையான விழா நடைபெற்றது. இது இந்த கல்லூரியின் 111…

2 months ago

சங்கீதா உணவகத்தில் ரூ.40க்கு மதிய உணவு

சங்கீதாவின் 40வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில், நகரம் முழுவதும் உள்ள அதன் உணவகங்கள் இப்போது மாறி மாறி வழங்கும் சிறப்பு…

2 months ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலுக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல், புரளி என தெரியவந்துள்ளது

புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…

2 months ago