மயிலாப்பூரில் உள்ள ஆர்.ஆர்.சபாவில் காலை 6.30 மணி அளவில் பக்தி இசை, ஸ்ரீராம பஜனம் மற்றும் ஆச்சாரியர்களின் சொற்பொழிவுகள் நடந்தன.
எல்டாம்ஸ் சாலை வளாகத்தில் தி குரோவ் பள்ளியில், ராமர் மற்றும் சீதையின் உருவங்களைச் சுற்றி மாணவர்களின் இசை மற்றும் பாரம்பரிய நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
மாத பெருமாள் கோவில் அருகில் இருக்கும் மாதவன் நிவாஸ் கட்டிடத்தில் வசிக்கும் அனைவரும் இவ்விழாவை சிறப்பாக கொண்டாடினர். அயோத்தி கோயிலின் குடமுழக்கின் போது நேரலை காட்சியை கண்டு களித்து ஒன்று கூடி ராமருக்கு பூஜை பஜனைகள் செய்து ஸ்ரீ ராமபிரான் வருகையை சிறப்பித்தனர். மேலும் பள்ளி குழந்தைகளும் சுற்றியுள்ள அனைவரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர், வந்தவர்களுக்கு தயிர் சாதம் , புளியோதரை போன்ற பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
ஆர் ஏ புரத்தில் உள்ள ஸ்ரீ கற்பக விநாயகர் கோவிலில் காலை 6.30 மணியளவில் அபிஷேகம் தொடங்கி வேதபாராயணம் மற்றும் விஷ்ணு சஹஸ்ரநாமம் ஓதப்பட்டது.
ஆர் ஏ புரம் பக்த ஜன சங்கம் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.
மாலையில், லஸ்ஸில் உள்ள ஆர்கே சென்டரில், அறிஞர் டாக்டர் சுதா சேஷய்யன் உரை நிகழ்த்தினார், அதைத் தொடர்ந்து பாடகர் பால்காட் ராம்பிரசாத்தின் பாரம்பரிய இசைக் கச்சேரி நடந்தது.
மெட்ராஸ் தினம் 2025 க்கு, மயிலாப்பூர் டைம்ஸ் பள்ளி அணிகளுக்கான வருடாந்திர பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டியை அறிவித்துள்ளது. இந்தப் போட்டியின்…
இராணி மேரி கல்லூரி வளாகத்தில் இன்று திங்கட்கிழமை காலை ஒரு எளிமையான விழா நடைபெற்றது. இது இந்த கல்லூரியின் 111…
சங்கீதாவின் 40வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில், நகரம் முழுவதும் உள்ள அதன் உணவகங்கள் இப்போது மாறி மாறி வழங்கும் சிறப்பு…
புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…
ரோட்டரி சர்வதேச மாவட்டம் 3234, இராணி மேரி கல்லூரியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகளுடன் இணைந்து பெரிய அளவிலான…
ஜூலை 2 புதன்கிழமை மாலை புனித தாமஸின் கொடியை பேராயர் ரெவ். ஜார்ஜ் அந்தோணிசாமி ஆசீர்வதித்து, பின்னர் புனித தாமஸின்…