மயிலாப்பூரில் உள்ள ஆர்.ஆர்.சபாவில் காலை 6.30 மணி அளவில் பக்தி இசை, ஸ்ரீராம பஜனம் மற்றும் ஆச்சாரியர்களின் சொற்பொழிவுகள் நடந்தன.
எல்டாம்ஸ் சாலை வளாகத்தில் தி குரோவ் பள்ளியில், ராமர் மற்றும் சீதையின் உருவங்களைச் சுற்றி மாணவர்களின் இசை மற்றும் பாரம்பரிய நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
மாத பெருமாள் கோவில் அருகில் இருக்கும் மாதவன் நிவாஸ் கட்டிடத்தில் வசிக்கும் அனைவரும் இவ்விழாவை சிறப்பாக கொண்டாடினர். அயோத்தி கோயிலின் குடமுழக்கின் போது நேரலை காட்சியை கண்டு களித்து ஒன்று கூடி ராமருக்கு பூஜை பஜனைகள் செய்து ஸ்ரீ ராமபிரான் வருகையை சிறப்பித்தனர். மேலும் பள்ளி குழந்தைகளும் சுற்றியுள்ள அனைவரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர், வந்தவர்களுக்கு தயிர் சாதம் , புளியோதரை போன்ற பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
ஆர் ஏ புரத்தில் உள்ள ஸ்ரீ கற்பக விநாயகர் கோவிலில் காலை 6.30 மணியளவில் அபிஷேகம் தொடங்கி வேதபாராயணம் மற்றும் விஷ்ணு சஹஸ்ரநாமம் ஓதப்பட்டது.
ஆர் ஏ புரம் பக்த ஜன சங்கம் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.
மாலையில், லஸ்ஸில் உள்ள ஆர்கே சென்டரில், அறிஞர் டாக்டர் சுதா சேஷய்யன் உரை நிகழ்த்தினார், அதைத் தொடர்ந்து பாடகர் பால்காட் ராம்பிரசாத்தின் பாரம்பரிய இசைக் கச்சேரி நடந்தது.
மயிலாப்பூர், கச்சேரி சாலையில் உள்ள மயிலாப்பூர் தபால் நிலையத்தில் பிப்ரவரி 21 அன்று ஒரு பரபரப்பு ஏற்பட்டது; இங்குள்ள ஊழியர்கள்…
ஆர்.ஏ.புரத்தில் உள்ள கபாலீஸ்வரர் - கற்பகாம்பாள் கல்யாண மண்டபத்தில் கடந்த வாரம் 30 ஜோடிகளுக்கு திருமண ஏற்பாடுகளை தமிழக இந்து…
சென்னை மெட்ரோ தொடர்பான பணிகளுக்காக மயிலாப்பூர் ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் சிறிய மாற்றங்கள் தொடர்ந்து செய்யப்படுகின்றன. சமீபத்தில், சமஸ்கிருதக் கல்லூரிக்கு வெளியே…
மயிலாப்பூரில் இந்த வார இறுதியில் சிட்டி சென்டர் மாலில் நீங்கள் இருந்தால், இந்த ஷாப்பிங் மாலின் தரை தளத்தில் நடைபெறும்…
மயிலாப்பூரில் பிப்ரவரி 10 அன்று நடைபெற்ற ஸ்ரீ காஞ்சி மகா பெரியவா ஆலயத்தின் மஹாகும்பாபிஷேகம், ஒரு அறக்கட்டளை, அதன் ஆதரவாளர்கள்…
மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் தைப்பூச விழாவிற்கான தெப்பம் அமைக்கும் பணி வியாழக்கிழமை (பிப்ரவரி 6) காலை தொடங்கியது. டஜன்…