ராணி மேரி கல்லூரிக்கு புதிய விடுதி

ராணி மேரி கல்லூரி வளாகத்தில் இப்போது ஒரு புதிய விடுதி துவங்கப்பட்டுள்ளது.

முதல்வர் எம்.கே. ஸ்டாலின் மே 21 அன்று இதைத் திறந்து வைத்தார், கல்லூரியின் 104வது பட்டமளிப்பு விழாவில் தலைமை விருந்தினராக கலந்து கொண்டபோது இந்த விடுதியை ஏற்படுத்தி தருவதாக அவர் உறுதியளித்திருந்தார்.

ரூ.42 கோடி செலவில் கட்டப்பட்ட இந்த விடுதியில், மூன்று அடுக்குகளில் சுமார் 450 மாணவர்கள் தங்கமுடியும். ஒவ்வொரு அறையும் அடிப்படைத் தேவைகளுடன் பொருத்தப்பட்டுள்ளது. சிசிடிவி அமைப்பு, தண்ணீர் விநியோகிக்கும் கருவிகள் மற்றும் மருத்துவ உதவி கவுண்டர் ஆகியவை இந்த வசதியின் ஒரு பகுதியாகும்.

கல்லூரி வளாகத்தில் ஒரு விடுதி இருந்தபோதிலும், அதன் நிலை மோசமடைந்து மூடப்பட்டது; சில பெண்கள் சேப்பாக்கத்தில் உள்ள மாநில கல்லூரியின் பெண்கள் விடுதியில் தங்க வைக்கப்பட்டனர். பல பெண்கள் மயிலாப்பூர் / திருவல்லிக்கேணியில் உள்ள தனியார் பெண்கள் தங்கும் விடுதியில் தங்கி படித்து வந்தனர்.

பல மாணவர்கள் கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால், புதிய விடுதி அவர்களுக்கு ஒரு பெரிய வரப்பிரசாதமாக இருக்கும் என்று ராணி மேரி கல்லூரியின் ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

admin

Recent Posts

ஸ்ரீ வேதாந்த தேசிகர் கோவிலில் தவானோத்சவம். மார்ச் 1 முதல் 3 வரை

மயிலாப்பூர் ஸ்ரீ வேதாந்த தேசிகர் கோவிலில் வருடாந்திர தவானோத்சவம் மார்ச் 1 முதல் 3 வரை கொண்டாடப்பட உள்ளது. காலை,…

11 hours ago

புதிதாகக் கட்டப்பட்ட திருவள்ளுவர் கோயிலின் கும்பாபிஷேகம்: பிப்ரவரி 27ல்.

மயிலாப்பூரில் புதிதாகக் கட்டப்பட்ட திருவள்ளுவர் கோயிலின் பிரமாண்ட கும்பாபிஷேகம் பிப்ரவரி 27 ஆம் தேதி காலை 8 மணிக்குத் தொடங்குகிறது.…

2 days ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் பங்குனி திருவிழா: பிப்ரவரி 26 மாலை ‘லக்ன பத்திரிக்கை’ வாசிப்பு நிகழ்ச்சி

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் வருடாந்திர பங்குனி திருவிழாவின் முதல் படி பிப்ரவரி 26 அன்று நடைபெற உள்ளது. அன்று மாலை…

3 days ago

வண்ணமயமாக ஒளிரூட்டப்பட்ட ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் கோபுரங்கள் மற்றும் விமானங்கள்.

ஸ்ரீ கபாலீஸ்வர் கோயிலின் புதிய விளக்கு அமைப்பை பிப்ரவரி 15 அன்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி. கே.…

5 days ago

எம்ஆர்டிஎஸ் ரயில் நிலையத்தில் உள்ள லிஃப்ட்டில் தொழில்நுட்ப கோளாறு.

பிப்ரவரி 19 வியாழக்கிழமை முண்டகக்கண்ணி அம்மன் எம்ஆர்டிஎஸ் ரயில் நிலையத்தில் உள்ள லிஃப்ட் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வேலை செய்யவில்லை,…

7 days ago

சாம்பல் புதனைக் குறிக்கும் வகையில் தேவாலயங்களில் திருப்பலிகள்

அனைத்து உள்ளூர் தேவாலயங்களிலும் பிப்ரவரி 18 அன்று சாம்பல் புதன் அனுசரிக்கப்பட்டது. இது தவக்காலத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது, இது பிரார்த்தனை,…

1 week ago