மந்தைவெளிப்பாக்கம் மேற்கு வட்ட வீதியில் ஒரு காலத்தில் இருந்த பள்ளி இப்போது ‘சென்டர் ஃபார் எக்ஸலன்ஸ்’.
திங்கள்கிழமை மாலை (டிசம்பர் 6) தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ராதா சுவாமிகள் சிறப்பு மையத்தை முறைப்படி திறந்து வைத்தார். இந்த நிகழ்வை குறிக்கும் விதமாக அவர் ஒரு பலகையைத் திறந்து வைத்தார். ஒவ்வொரு தளமும் ஒரு செயல்பாட்டிற்காக அர்ப்பணிக்கப்பட்ட்டுள்ளதை அவர் பார்வையிட்டார்.
அறிவியல் கற்றலுக்கு ஒரு தளம், டேபிள் டென்னிஸ், கேரம் மற்றும் செஸ் ஆகியவற்றுக்கு ஒன்று, இசை மற்றும் நடனம் மற்றும் கலைகளுக்கு ஒன்று, போட்டித் தேர்வுகளில் பயிற்சி அளிப்பதற்காக ஒன்று, இந்திய பாரம்பரிய விளையாட்டுகளைக் கற்க ஒரு இடம் – இவை அனைத்தும் மூன்று பள்ளிகளில் படிக்கும் 3000க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கானது. மயிலாப்பூரில் உள்ள தேசிய ஆண்கள் மற்றும் பெண்கள் கல்விச் சங்கத்தால் நிர்வகிக்கப்படும் பள்ளிகள்.
பள்ளிகள் – லேடி சிவஸ்வாமி ஐயர் பெண்கள் பள்ளி. சர் சிவசாமி கலாலயா சீனியர் பள்ளி மற்றும் சிவசாமி கலாலயா மேல்நிலை பள்ளி.
இந்தப் பள்ளிகளின் மாணவர்கள், வகுப்புகளில் கலந்துகொள்வதற்காக இந்த மையத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள், சில சமயங்களில், பயிற்சி மாலை தாமதமாக நடைபெறும் – உதாரணமாக டேபிள் டென்னிஸ்.
இந்த இடத்தை ரீமேக் செய்து தனது தாயார் ராதா சுவாமிக்கு அர்பணித்துள்ளதாகவும், இந்த பள்ளிகள் இசை மற்றும் நடனம் மற்றும் விளையாட்டுகளை வழங்குகிறது. இவற்றில் எங்கள் மாணவர்கள் சிறந்து விளங்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் என்றும், மாணவர்கள் உயர்ந்த இலக்கை அடைய வேண்டும், அதற்கான இடம் இதுதான். என்று இந்த பள்ளிகளை நிர்வகித்து வரும் சங்கத்தின் தலைவர் சீனிவாசன் கே சுவாமி கூறுகிறார்.
திங்கட்கிழமை நிகழ்வானது மூன்று பள்ளிகளின் முதல்வர்கள் , மற்றும் ஆசிரியர்களால் ஒருங்கிணைக்கப்பட்டது. கலை நிகழ்ச்சிகளுக்கான இடத்தில் நடைபெற்ற வெளியீட்டு விழாவில் சங்கத்தின் கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் சுவாமி குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் சங்கப் பொருளாளர் எஸ்.ஸ்ரீதரன், செயலர் வத்சலா நாராயணசாமி ஆகியோர் மேடையில் அமர்ந்து பேசினர்.
இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…
இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…
மந்தைவெளி, ஆர்.கே. நகரில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசித் திட்டத்திற்கான சேவையை மேலும்…
மயிலாப்பூர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர். நடராஜ் அதிகாரப்பூர்வமாக த.வெ.க (TVK) கட்சியில் இணைந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…
மயிலாப்பூர் இந்து பர்மனன்ட் பண்ட் விவகாரம்: வைப்புதாரர்கள் எம்.எல்.ஏ.விடம் முக்கிய கோரிக்கைகள்: தமிழ்நாடு காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு (EOW) தாமதமாகி…
மயிலாப்பூரில் உள்ள இராணி மேரி கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில், கவனம் பெற வேண்டிய சில சிறப்புப்…