Categories: சமூகம்

மயிலாப்பூரில் பழைய குடியிருப்புகளை மீண்டும் புதிதாக உருவாக்கி, குடியிருப்பாளர்கள் மற்றும் ஆக்கிரமிப்பாளர்கள் அனைவருக்கும் குடியிருப்புகளை வழங்குவது பெரும் சவாலாக உள்ளது

அரசால் கட்டப்பட்ட குடியிருப்புகளின் வளாகங்களில் வசிக்கும் 50 சதவீதத்திற்க்கும் அதிகமானோர், இந்த வளாகங்களில் உள்ள பாதைகள் மற்றும் இடங்களை ஆக்கிரமித்து குடியிருப்புகளை அமைத்து குடியிருந்துவந்தனர். தற்போது இவர்களுக்கு வீடுகள் வழங்குவது பெரும் சவாலான காரியமாக உள்ளது?.

மயிலாப்பூரில் பல திட்டங்களில் பணிபுரியும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூத்த அதிகாரிகள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவாலாகும் இது. மேலும் அதிகாரிகள் இது சம்பந்தமாக உள்ளூர் எம்.எல்.ஏ விடம் சில சமாதான முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.

மயிலாப்பூர் தொகுதியில் சுமார் 24 குடியிருப்பு வளாகங்கள் உள்ளதாகக் கூறப்படுகிறது, அதில் தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் ஏழைகளுக்கு சிறிய வீடுகளை உருவாக்கியது.

ஏறக்குறைய அனைத்து குடியிருப்புகளும் பழுதடைந்து வருகின்றன; சில இடங்களில், கூரைகள் அல்லது ஜன்னல்கள் இடிந்து விழுந்துள்ளன.

குடியிருப்பாளர்கள் பெரும்பாலும் வீட்டின் உட்புறங்களை மட்டுமே சரிசெய்கின்றனர். இப்போதுதான் இதுபோன்ற பராமரிப்பு பணிகளை கையாள, குடியிருப்பாளர்கள் நலச் சங்கங்களை அமைப்பதற்கான வழிமுறையை உருவாக்கியுள்ளனர்.

சில வளாகங்களில், மெரினா குப்பம் பகுதியில், மறுவடிவமைப்பு பணிகள் சீராக உள்ளன. டூமிங்குப்பத்தில் வசிக்கும் 200 பேரில் 70சதவீதம் பேர் சமீபத்தில் புதிய அடுக்குமாடி குடியிருப்பில் குடியேறியதாக மயிலாப்பூர் எம்.எல்.ஏ.தெரிவித்துள்ளார்.

அடுத்த கட்டமாக சுனாமியால் கடுமையாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 214 குடியிருப்புகள் ஒதுக்கப்பட உள்ளது. “அவர்களின் ஆவணங்களை சரிபார்த்து அவர்களுக்கு வீடுகளை ஒதுக்க சிறிது காலங்கள் ஆகும்.

ராஜீவ்காந்தி குப்பம் மற்றும் சீனிவாசபுரத்தில் கணக்கெடுப்பு பணி நடந்து வருகிறது. இங்குள்ள சட்டப்பூர்வ குடியிருப்பாளர்களைக் காட்டிலும் அதிகமான குடிசைகள் அரசு நிலத்தை ஆக்கிரமித்துள்ளதை எங்களால் பார்க்க முடிகிறது, மேலும் அனைவருக்கும் வீடு கட்டித் தருவதாக நாங்கள் உறுதியளித்துள்ளதால், அவர்களுக்கு இடமளிப்பது இப்போது சவாலாக உள்ளது.

அனைவருக்கும் இடமளிக்கும் வகையில், மறுவடிவமைப்பு செய்யப்பட்ட நிலப்பரப்பில் உயரமான குடியிருப்புகள் கட்டப்பட வேண்டும். ஒவ்வொரு தளத்திலும் 3/4 லிஃப்ட்கள் இருக்கும் வகையில் 10/12 மாடிகள் இருக்கலாம். சில குடியிருப்பாளர்கள் இந்த திட்டத்தை எதிர்த்துள்ளனர், லிஃப்ட் செயலிழந்தால் அல்லது மின்சார பழுது ஏற்பட்டால் குடியிருப்பாளர்கள் கீழே இறங்குவதற்கு மிகுந்த சிரமங்கள் ஏற்படும்.

அனைவருக்கும் இடமளிக்கும் வாரியத்தின் திட்டங்களை குடியிருப்பாளர்களுக்குக் காட்டுகிறோம், அவர்களுக்கு ஆட்சேபனை இருந்தால், அவர்கள் சார்பில் சமூக தலைவர்கள் எங்களிடம் விவாதித்து முடிவெடுக்கலாம். இது தவிர வேறு வழியில்லை. இதனால் கபாலி தோட்டம் போன்ற பல இடங்களில் பணி தாமதமானது. என்று எம்.எல்.ஏ தா.வேலு கூறுகிறார்

விசாலாட்சி தோட்டம், வன்னியம்பதி தோட்டம், வள்ளீஸ்வரன் தோட்டம் ஆகிய இடங்களில் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஆர்.ஏ.புரத்தில் ஒரு பிளாட் ஒதுக்கப்பட்ட குடியிருப்பாளர் ஒருவர் கூறுகையில், தற்போது நல்ல நிலையில் நடைபெற்று வந்த பணி கொரோனா காரணமாக தற்போது பணிகள் மந்தகதியில் உள்ளது.

குயில் தோட்டத்தில், சாந்தோம் ஹைரோட்டில் உள்ள மக்கள் எங்கள் முன்மொழிவுகளை ஏற்று தங்கள் இடத்தை காலி செய்யத் தொடங்கியுள்ளனர் என்று எம்எல்ஏ கூறுகிறார்.

பல்லக்குமாணியம் நகர், பிள்ளையார்கோயில் தோட்டம், சத்தியவாணி முத்து நகர், நாட்டான் தோட்டம், பள்ளிவாசல் தெரு, குப்பைமேடு, ஆதிமான் தோட்டம் ஆகிய பகுதிகளிலும் திட்டப்பணிகள் கோடிட்டு காட்டப்பட்டுள்ளன.

admin

Recent Posts

சங்கீதா உணவகத்தில் ரூ.40க்கு மதிய உணவு

சங்கீதாவின் 40வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில், நகரம் முழுவதும் உள்ள அதன் உணவகங்கள் இப்போது மாறி மாறி வழங்கும் சிறப்பு…

18 hours ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலுக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல், புரளி என தெரியவந்துள்ளது

புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…

6 days ago

மெரினா கடற்கரையின் ஒரு பகுதியை இராணி மேரி கல்லூரி மாணவிகள் சுத்தம் செய்தனர்.

ரோட்டரி சர்வதேச மாவட்டம் 3234, இராணி மேரி கல்லூரியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகளுடன் இணைந்து பெரிய அளவிலான…

7 days ago

புனித தாமஸின் விழா: சாந்தோம் கதீட்ரலில் பேராயர் கொடியை ஏற்றினார்.

ஜூலை 2 புதன்கிழமை மாலை புனித தாமஸின் கொடியை பேராயர் ரெவ். ஜார்ஜ் அந்தோணிசாமி ஆசீர்வதித்து, பின்னர் புனித தாமஸின்…

1 week ago

திருவேங்கடம் சாலை சீரமைக்கப்பட்டது: ஆனால் சாலை சந்திப்பு மற்றும் தேவநாதன் தெரு ஆகிய இடங்களில் இன்னும் வேலை முடியவில்லை.

மந்தைவெளியில் வசிப்பவர்கள், திருவேங்கடம் தெரு - தேவநாதன் தெரு மற்றும் வெங்கடகிருஷ்ணா சாலையில் தொடங்கப்பட்ட சாலை தொடர் வேலைகளை ஜி.சி.சி.…

1 week ago

ஆர்.ஏ.புரத்தில் உள்ள ஜி.சி.சி.யின் மறுசுழற்சி பொருட்கள் சேமிக்கும் இடத்தில் தீ விபத்து.

ஆர்.ஏ.புரத்தில் உள்ள காமராஜ் சாலையில் அமைந்துள்ள சென்னை மாநகராட்சியின் அப்புறப்படுத்தப்பட்ட பொருட்களுக்கான முற்றத்தில் இன்று புதன்கிழமை (ஜூலை 2) காலை…

1 week ago