மயிலாப்பூரில் பள்ளிகள் மீண்டும் திறப்பு

தமிழக அரசின் ஆணைப்படி நேற்று செப்டம்பர் 1ம் தேதி முதல் மயிலாப்பூரில் உள்ள பள்ளிகளில் 9ம் வகுப்பு முதல் 12 வகுப்பு வரை உள்ள சீனியர் மாணவர்களுக்கு வகுப்புகள் மீண்டும் தொடங்கப்பட்டது.

கடந்த ஒரு வருடங்களாக மாணவர்கள் பள்ளிக்கு வராத நிலையில் நேற்று பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டது. மயிலாப்பூர் லேடி சிவசாமி அய்யர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகள் பள்ளி வேலை நேரம் தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னரே வந்திருந்தனர். பள்ளிக்கு வரும் மாணவிகள் அனைவரும் முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

முகக்கவசம் அணிந்து வராத மாணவிகளுக்கு முகக்கவசம் வழங்கப்பட்டது. பள்ளிக்கு வந்த மாணவர்கள் அனைவருக்கும் உடல்வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் அவர்கள் அனைவரையும் தனித்தனியே சமூக இடைவெளியை பின்பற்றி அமரவைக்கப்பட்டனர்.

ஆர் ஏ புரத்திலுள்ள இராணி மெய்யம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் பள்ளிக்கு வந்த மாணவிகளுக்கு உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. வகுப்பறையில் உள்ள மேசைகள் இடைவெளி விட்டு போடப்பட்டிருந்தது. அந்த மேசைகளில் மாணவிகள் அமரவைக்கப்பட்டு வகுப்புகள் தொடங்கப்பட்டது.

இது போன்று சாவித்திரியம்மாள் ஓரியண்டல் மேல்நிலைப்பள்ளியிலும் வகுப்புகள் தொடங்கப்பட்டது. இங்கு பள்ளி மாணவிகளின் பேண்டு இசை நிகழ்சியுடன் மாணவிகளை பள்ளிக்கு வரவேற்றனர். மாணவிகள் ஆசிரியர்களுக்கு பூச்செண்டு வழங்கினர்.

மயிலாப்பூர் ஆர்.கே. மட சாலையில் உள்ள பி.எஸ். மேல்நிலைப்பள்ளியிலும் சீனியர் மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்பட்டது. இங்கு மாணவர்களிடையே கொரோனா சம்பந்தமாக விழிப்பிணர்வு இருப்பதாக தலைமை ஆசிரியர் கலா தெரிவித்துள்ளார். மேலும் வகுப்பறையில் முகக்கவசம் அணிந்து பாடம் எடுக்க சிரமம் ஏற்பட்டால், திறந்த வெளியில் மரத்தடியில் வகுப்புகள் நடத்த ஏற்பாடு செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.

admin

Recent Posts

சாய்பாபா கோயில் அருகே ECR-லிருந்து கொண்டுவரப்பட்ட நுங்குகள் விற்பனை

இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…

2 weeks ago

இராணி மேரி கல்லூரியில் சேர்க்கை இன்னும் நடைபெறுகிறது.

இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…

2 weeks ago

கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசித் திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது – இத்தகவலைப் பகிரவும்

மந்தைவெளி, ஆர்.கே. நகரில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசித் திட்டத்திற்கான சேவையை மேலும்…

2 weeks ago

முன்னாள் மயிலாப்பூர் எம்.எல்.ஏ. TVK-வில் இணைந்தார்

மயிலாப்பூர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர். நடராஜ் அதிகாரப்பூர்வமாக த.வெ.க (TVK) கட்சியில் இணைந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…

3 weeks ago

மயிலாப்பூர் இந்து பர்மனன்ட் பண்ட் சம்பந்தமான வழக்கு: வைப்புதாரர்கள் எம்.எல்.ஏ.விடம் மனு

மயிலாப்பூர் இந்து பர்மனன்ட் பண்ட் விவகாரம்: வைப்புதாரர்கள் எம்.எல்.ஏ.விடம் முக்கிய கோரிக்கைகள்: தமிழ்நாடு காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு (EOW) தாமதமாகி…

3 weeks ago

இராணி மேரி கல்லூரி மாணவர் சேர்க்கை: இசைப் பட்டப்படிப்புக்கு வயது வரம்பு 40 ஆக உயர்வு.

மயிலாப்பூரில் உள்ள இராணி மேரி கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில், கவனம் பெற வேண்டிய சில சிறப்புப்…

4 weeks ago