தமிழகத்தில் பள்ளிகள் திறப்பையடுத்து அங்கன்வாடி பள்ளிகளும் தற்போது திறக்கப்பட்டுள்ளது. மயிலாப்பூர் முண்டகக்கண்ணி அம்மன் கோவில் பகுதியில் மூன்று அங்கன்வாடி பள்ளிகள் உள்ளது. இங்கு செப்டம்பர் 2ம் தேதி அங்கன்வாடி குழந்தைகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு மதிய உணவு வழங்கப்பட்டது. பாடங்களும் நடத்தப்பட்டது.
ஒவ்வொரு அங்கன்வாடி பள்ளியிலும் பதினைந்து குழ்நதைகளுக்கு மட்டுமே வருவதற்கு தற்போது தமிழக அரசால் அனுமதிவழங்கப்பட்டுள்ளது. அங்கன்வாடி பள்ளியில் இரண்டு வயது முதல் ஐந்து வயதுடைய குழந்தைகள் மட்டுமே சேர்க்கப்படுவர். சாதாரண நாட்களில் இந்த அங்கன்வாடி பள்ளிகள் காலை ஒன்பது மணி முதல் நான்கு மணி வரை செயல்படும்.
கொரோனா காலங்களில் இந்த அங்கன்வாடி பள்ளிகள் அனைத்து பகுதிகளிலும் மூடப்பட்டது. மேலும் தமிழக அரசு உத்தரவுப்படி இங்கு பயின்று வந்த குழந்தைகளுக்கு அவர்கள் வீட்டிற்கே சென்று பெற்றோர்களிடம் உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டது.
ஆர்.ஏ. புரத்தில் ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான பரந்த நிலப்பகுதியின் பெரும்பகுதி சமப்படுத்தப்பட்டு, புதிய மருத்துவமனை ஒன்றை அமைப்பதற்கான பணிகள்…
E1 மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று வாராந்திர குறைகேட்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காவல் உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மற்றும்…
மெரினா கடற்கரையில் மற்றொரு 'ப்ளூ ஃபிளாக்' பகுதிக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது கலங்கரை விளக்கத்திற்கு அருகிலும், காமராஜர்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ.-வும் மாநில அமைச்சருமான பி. வெங்கடரமணன், ஆழ்வார்பேட்டையில் தனது அலுவலகத்தைத் திறந்ததிலிருந்து, அப்பகுதி மக்கள், சமூகத் தலைவர்கள் மற்றும்…
இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…
இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…