ஆழ்வார்பேட்டையில் உள்ள சென்னை மாநகராட்சி வளாகத்தில் விதிமுறைகளை மீறிய ஒப்பந்ததாரர் மீது குடியிருப்புவாசிகள் அதிருப்தி.

சென்னை மாநகராட்சிக்கான புதிய சமுதாய கூடத்தை, ஜி.சி.சி.யின் சொத்தில் சி.பி.ராமசாமி சாலையில் கட்டும் சிவில் ஒப்பந்ததாரரின் கட்டிட விதிமீறல்களால் டாக்டர் ரங்கா சாலையில் வசிப்பவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

ஒப்பந்ததாரர் கட்டிட விதிகளை மீறி, கட்டுமான தளத்தை அனைத்து பக்கங்களிலும் ஏசிபி ஷீட்கள் மூலம் மூடி மறைக்காமல், அமைத்து வருவதாக கூறுகின்றனர்.

இந்த தளத்தின் இருபுறமும், சென்னை மாநகராட்சி கட்டிடங்கள் உள்ளன – ஒருபுறம் எம்எல்ஏ மற்றும் கவுன்சிலர் அலுவலகங்கள் மற்றும் ஜிசிசி அலுவலகங்கள் மற்றும் வணிக வளாகம் உள்ள வளாகம் உள்ளது. மறுபுறம், சமீபத்தில் கட்டப்பட்ட மருத்துவமனை.

பின்பகுதியில் (புளோட்டின் கிழக்குப் பக்கம்) குடியிருப்புகள் உள்ளதாகவும், கடந்த 6 மாதங்களாக இந்த இடத்தில் ஏசிபி ஷீட்கள் போடப்படாததால், சத்தம் மற்றும் தூசி மாசு ஏற்படுவதாக இங்கு வசிப்பவர்கள் கூறுகின்றனர்.

ஜி.சி.சி இணையதளத்தில் ஆகஸ்ட் மாதம் அதிகாரப்பூர்வ புகார் அளித்தும் இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும் உள்ளூர் அதிகாரிகளை தொடர்பு கொண்டும் எந்த பயனும் இல்லை என்று பெயர் சொல்ல விரும்பாத குடியிருப்பாளர் ஒருவர் கூறுகிறார்.

அவர்கள் இப்போது மயிலாப்பூர் எம்.எல்.ஏ., தா.வேலு அவர்கள் ஒப்பந்தக்காரர் விதிகளை மதித்து வேலைகளை செய்ய அறிவுறுத்த , வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.

கட்டுமான தளத்தை மறைக்காத தனியார் கட்டிடங்களுக்கு ஜி.சி.சி விரைவாக அபராதம் விதிப்பதும், பொது கட்டிடம் கட்டும் தளங்களுக்கு கண்மூடித்தனமாக இருப்பதும் முரண்பாடானது. என்று மற்றொரு குடியிருப்பாளர் கூறினார்,

admin

Recent Posts

நாகேஸ்வர ராவ் பூங்காவிற்குள் பூச்சிகளால் அரிக்கப்பட்டிருந்த சில பழமையான மரங்கள் வெட்டப்பட்டுள்ளது.

லஸ் அவென்யூவில் உள்ள நாகேஸ்வர ராவ் பூங்காவின் ஒரு பகுதி இப்போது ஒரு வறண்ட மைதானம் போல் காட்சியளிக்கிறது. செவ்வாய்க்கிழமை…

10 hours ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவில் தெப்பத் திருவிழா பிப்ரவரி 1 முதல் 3 வரை

2026 ஆம் ஆண்டுக்கான ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் மூன்று நாள் தெப்பத் திருவிழா பிப்ரவரி 1 முதல் 3 வரை…

5 days ago

செயின்ட் பீட்ஸ் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு ஜனவரி 26ல் நடைபெறுகிறது.

101வது பழைய பீடியன்ஸ் அஸோஸியேஷனின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு, ஜனவரி 26 அன்று சாந்தோம், செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ-இந்தியன் மேல்நிலைப்…

5 days ago

சாய் பாபா கோவில் அருகே பொங்கலுக்கான பானைகள் விற்பனை.

உங்கள் பொங்கல் கொண்டாட்டத்திற்காக அழகாக வடிவமைக்கப்பட்ட மண்பானைகளைத் தேடுகிறீர்களா? அப்படியானால், இங்குள்ள சாய் பாபா கோவில் அருகே வெங்கடேச அக்ரஹாரம்…

2 weeks ago

சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா. ஜனவரி 8 முதல் 11 வரை.

மயிலாப்பூரில் வருடந்தோறும் ஜனவரி தொடக்கத்தில் நடைபெறும் சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா ஜனவரி 8 ம் தேதி காலை 7…

3 weeks ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற கார்த்திகை தீப விழாவில் ஏராளமான மக்கள் பங்கேற்றனர்.

மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை (டிசம்பர் 4) கார்த்திகை தீப விழா தொடங்கிய நேரத்தில், லேசான,…

2 months ago