ஆழ்வார்பேட்டையில் உள்ள சென்னை மாநகராட்சி வளாகத்தில் விதிமுறைகளை மீறிய ஒப்பந்ததாரர் மீது குடியிருப்புவாசிகள் அதிருப்தி.

சென்னை மாநகராட்சிக்கான புதிய சமுதாய கூடத்தை, ஜி.சி.சி.யின் சொத்தில் சி.பி.ராமசாமி சாலையில் கட்டும் சிவில் ஒப்பந்ததாரரின் கட்டிட விதிமீறல்களால் டாக்டர் ரங்கா சாலையில் வசிப்பவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

ஒப்பந்ததாரர் கட்டிட விதிகளை மீறி, கட்டுமான தளத்தை அனைத்து பக்கங்களிலும் ஏசிபி ஷீட்கள் மூலம் மூடி மறைக்காமல், அமைத்து வருவதாக கூறுகின்றனர்.

இந்த தளத்தின் இருபுறமும், சென்னை மாநகராட்சி கட்டிடங்கள் உள்ளன – ஒருபுறம் எம்எல்ஏ மற்றும் கவுன்சிலர் அலுவலகங்கள் மற்றும் ஜிசிசி அலுவலகங்கள் மற்றும் வணிக வளாகம் உள்ள வளாகம் உள்ளது. மறுபுறம், சமீபத்தில் கட்டப்பட்ட மருத்துவமனை.

பின்பகுதியில் (புளோட்டின் கிழக்குப் பக்கம்) குடியிருப்புகள் உள்ளதாகவும், கடந்த 6 மாதங்களாக இந்த இடத்தில் ஏசிபி ஷீட்கள் போடப்படாததால், சத்தம் மற்றும் தூசி மாசு ஏற்படுவதாக இங்கு வசிப்பவர்கள் கூறுகின்றனர்.

ஜி.சி.சி இணையதளத்தில் ஆகஸ்ட் மாதம் அதிகாரப்பூர்வ புகார் அளித்தும் இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும் உள்ளூர் அதிகாரிகளை தொடர்பு கொண்டும் எந்த பயனும் இல்லை என்று பெயர் சொல்ல விரும்பாத குடியிருப்பாளர் ஒருவர் கூறுகிறார்.

அவர்கள் இப்போது மயிலாப்பூர் எம்.எல்.ஏ., தா.வேலு அவர்கள் ஒப்பந்தக்காரர் விதிகளை மதித்து வேலைகளை செய்ய அறிவுறுத்த , வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.

கட்டுமான தளத்தை மறைக்காத தனியார் கட்டிடங்களுக்கு ஜி.சி.சி விரைவாக அபராதம் விதிப்பதும், பொது கட்டிடம் கட்டும் தளங்களுக்கு கண்மூடித்தனமாக இருப்பதும் முரண்பாடானது. என்று மற்றொரு குடியிருப்பாளர் கூறினார்,

admin

Recent Posts

ஆட்டோ ஓட்டுநர்கள், தூய்மை பணியாளர்களுக்கான இலவச கண் பரிசோதனை முகாம். ஆகஸ்ட்.31

ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை ஐடி சிட்டி, ஸ்ரீ ரமணா கண் மையம் மற்றும் ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் நல…

6 days ago

இலவச கண் பரிசோதனை முகாம். ஜூலை 27

ஜெயா கண் மருத்துவமனை ஜூலை 27 (ஞாயிற்றுக்கிழமை) அன்று கல்யாண நகர் சங்க வளாகத்தில் - எண்.29, டி.எம்.எஸ். சாலை,…

1 month ago

மெட்ராஸ் தினம் 2025: பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டி. பள்ளி மாணவர்களுக்கு

மெட்ராஸ் தினம் 2025 க்கு, மயிலாப்பூர் டைம்ஸ் பள்ளி அணிகளுக்கான வருடாந்திர பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டியை அறிவித்துள்ளது. இந்தப் போட்டியின்…

2 months ago

111வது ஆண்டில் இராணி மேரி கல்லூரி. எளிய, மகிழ்ச்சியான கொண்டாட்டங்கள்.

இராணி மேரி கல்லூரி வளாகத்தில் இன்று திங்கட்கிழமை காலை ஒரு எளிமையான விழா நடைபெற்றது. இது இந்த கல்லூரியின் 111…

2 months ago

சங்கீதா உணவகத்தில் ரூ.40க்கு மதிய உணவு

சங்கீதாவின் 40வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில், நகரம் முழுவதும் உள்ள அதன் உணவகங்கள் இப்போது மாறி மாறி வழங்கும் சிறப்பு…

2 months ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலுக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல், புரளி என தெரியவந்துள்ளது

புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…

2 months ago